தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பிக்பாஸ் 4’ சீசனில் பங்கேற்ற அனிதா சம்பத் 84 நாட்களுக்கு பிறகு வெளியேறினார்.
அதன்பிறகு அவரது தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…,
“’நான் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோது முக்கிய தலைப்புகளில் பேசினேன். ஆனால் அவை ஒளிபரப்பப்படவில்லை.
திங்கள் கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றியும், செவ்வாய்க்கிழமை திருநங்கைகளின் தரம் உயர்வது பற்றியும், புதன்கிழமை பிச்சை எடுப்பவர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவது குறித்தும், வியாழக்கிழமை விவசாயம் பற்றியும், வெள்ளிக்கிழமை விதவைகளின் மறுமணம் பற்றியும் பேசி இருந்தேன். ஆனால் இவை எதுவுமே நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை.
எனவே சமூகவலைதளங்கள் மூலம் விரைவில் இது குறித்து பேசவிருக்கிறேன்.
இதற்காக எனக்கு சில நபர்கள் தேவைப்படுகிறார்கள்.
என்னுடன் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
பிப்ரவரியில் இருந்து நாம் தொடங்குவோம்” என அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.
Anitha opens up about ‘Bigg Boss 4’ deleted content in social medias