புஷ்பவனம் குப்புசாமி – அனிதா இவர்களின் மகள்கள் புகைப்படம் வைரல்…

புஷ்பவனம் குப்புசாமி – அனிதா இவர்களின் மகள்கள் புகைப்படம் வைரல்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டுப்புற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி, மனைவி அனிதா இவர்கள் இருவரும் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர்கள்.

புஷ்பவனம் குப்புசாமி தொலைக்காட்சிகளில் பாடியதோடு பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.

தனது மனைவி அனிதா உடன் இணைந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுமார் 3000 இசைக் கச்சேரிகளை நடத்தி உள்ளார்.

புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர் அதில் மூத்தமகள் பல்லவி மருத்துவ படிப்பு படித்திருக்கிறார்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

தற்போது, அவரது திருமணத்தில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

குப்புசாமி - அனிதா

kuppusamy-anitha daughters photo viral in social media

விஜய் சேதுபதியின் திடீர் உடல் மாற்றம் .. ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

விஜய் சேதுபதியின் திடீர் உடல் மாற்றம் .. ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சமீபத்திய தோற்றம் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய ஸ்லிம் மற்றும் பிட் தோற்றத்தில் இருப்பது நெட்டிசன்களை திகைக்க வைத்துள்ளது.

மணிகண்டன் இயக்கி, மம்முட்டியுடன் நடிக்கவிருக்கும் அவரது அடுத்த பெரிய வெப் சீரிஸிற்காக எடையை வெகுவாக குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானின் ‘ஜவான்’, வெற்றிமாறனின் ‘விடுதலை’, மிஷ்கின் ‘பிசாசு 2’, ‘மைக்கேல்’, ‘மெர்ரி கிறிஸ்மஸ்’, ‘மும்பைக்கர்’ மற்றும் ‘காந்தி டாக்ஸ்’ ஆகிய படங்கள் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவரவிருக்கின்றன.

தளபதி 67 அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும்? – லோகேஷ் கனகராஜ் பதில்

தளபதி 67 அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும்? – லோகேஷ் கனகராஜ் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தளபதி 67’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், நடிகர் விஷால் நடித்த ‘லத்தி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் லோகேஷ் பங்கேற்றார்.

அப்போது அவரிடம் படம் எப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று ஒரு நிருபர் கேட்டபோது, ​​“கடந்த சில மாதங்களாக நான் கூறியது போல, தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதனால், வரவிருக்கும் படத்தைப் பற்றி பேசி ரசிகர்களை திசை திருப்ப விரும்பவில்லை என்றார்.

விக்ரம் & லாரன்ஸ் உடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.?

விக்ரம் & லாரன்ஸ் உடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் தற்போதைய வெற்றி பட இயக்குனர்களின் முக்கியமான இடத்தை அடைந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய நான்கு படங்களுமே ஒன்றை ஒன்று மிஞ்சி வசூல் வேட்டை ஆடியது.

இதற்கு அடுத்து மீண்டும் விஜய்யை வைத்து ‘தளபதி 67’ என்ற படத்தை இயக்க உள்ளார் லோகேஷ்.

இதற்கான பூஜையும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது இரண்டு புதிய படங்களை லோகேஷ் கனகராஜ் தயாரித்து தன் உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஒரு படத்தை ரத்னகுமார் இயக்க லாரன்ஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு படத்தில் சியான் விக்ரம் நடிக்க மற்றொரு உதவியாளர் மகேஷ் என்பவர் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

‘தமிழ்க்குடிமகன்’ பர்ஸ்ட் லுக்.; சேரனை போல செய்ய எவராவது முன்வருவார்களா.?

‘தமிழ்க்குடிமகன்’ பர்ஸ்ட் லுக்.; சேரனை போல செய்ய எவராவது முன்வருவார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் சேரன்.

தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளை பெற்ற தந்துள்ளார் இவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டுள்ளார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தமிழ்க்குடிமகன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் சேரன்.

இசக்கி கார்வண்ணன் இயக்கிய இந்த படத்தில் ஸ்ரீபிரியங்கா நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் லால், துருவா, தீபா, வேலாராமமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் தமிழ்க்குடிமகன் படத்தை தயாரிக்கிறது. ராஜேஷ் யாதவ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

நடிகராக இது சேரனுக்கு 36-வது படம்.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 12ல் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளனர்.

மாநகரை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள் & துணை நடிகர் – நடிகைகள் ஆகிய எளிய மக்களை வைத்து போஸ்டரை வெளியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

பாபா ரீ-ரிலீஸ்.. ரீ-ரிவ்யூ.; என்ன சொல்ல வருகிறார்? மீண்டும் குழப்பும் ரஜினி.!?

பாபா ரீ-ரிலீஸ்.. ரீ-ரிவ்யூ.; என்ன சொல்ல வருகிறார்? மீண்டும் குழப்பும் ரஜினி.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2002ல் ரஜினிகாந்த் கதை திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த திரைப்படம் ‘பாபா’.

தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் மறுபடியும் வெளியாகி உள்ளது.

முதன்முறை ரிலீஸ் ஆனபோது ஏழு மந்திரங்கள் இருந்தன.. தற்போது ஐந்து மந்திரங்கள் இருந்தது. ‘படையப்பா’ படத்திற்குப் பிறகு இந்த படம் வெளியானதால் நாசர் மற்றும் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன.

மேலும் சீனா & ஜப்பான் நாடுகளில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம் உள்ள நிலையில் ‘பாபா’ படத்திலும் ஜப்பான் ரசிகருக்கான காட்சிகள் இருந்தன.

தற்போது இந்த இரண்டு மந்திர காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன் ரஜினி அரசியலில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்டது.் அப்போது அரசியல் சார்ந்த அதற்கான காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது அது தொடர்பான பாடல் வரிகளும் அதற்கான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக… “புயல் வரும் போது பூச்செண்டு கொடுப்பாய் புரியாத புதிர் நீ பாபா.. என்ற பாடல் வரி காட்சிகள் இருந்தன. தற்போது நீக்கி விட்டனர்.

‘சக்தி கொடு….’ என்ற பாடலில் மடிவெடுத்தால் பின்னால் நான் தடம் மாற மாட்டேன்… முன்வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்.. என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன் என்ற வரிகள் இடம் பெற்றிருந்தன. அந்த பாடல் வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்.. உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடி விடமாட்டேன் என்ற வரிகள் இருந்தன.

மேலும்… கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்.. காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் என்ற வரிகள் மட்டும் இடம்பெற்றுள்ளது.

முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில்.. ‘ஆன்மீகமா.? அரசியலா.? என்று இருந்த நிலையில் ஆன்மீகத்தை தவிர்த்து மக்களை நோக்கி வருவதாக அரசியல் வருவது போல இருந்தன.

ஆனால் தற்போது உள்ள நிலையில் ரஜினிகாந்த் வருகிறார்.. மக்கள் காத்திருப்பது போல உள்ளனர்.

இதன் மூலம் ரஜினிகாந்த் என்ன சொல்ல வருகிறார்? என்பது புரியாமல் ரசிகர்களும் மக்களும் உள்ளனர்.

தன்னையும் குழப்பி ரசிகர்களையும் குழப்பம் முயற்சிக்கிறார் ரஜினிகாந்த்.

இனி அரசியலுக்கு வர மாட்டேன்.. என தீர்க்கமாக அறிவித்த பின் “காலத்தின் கட்டளையை நான் மறக்க மாட்டேன்..” என ரஜினிகாந்த் அந்த பாடல் வரியை மட்டும் வைத்த நோக்கம் என்ன என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

இதற்கெல்லாம் பதில் அளிப்பாரா.?

Baba Re release Re Review will Rajini answer for this?

More Articles
Follows