தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘இயற்கை’, ‘ பேராண்மை’, ‘ ஈ’, ‘பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என தரமான படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.
இவர் ஒரு கம்யூனிச சிந்தனையாளர்.
தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ படத்தை இயக்கி வருகிறார் ஜனநாதன்.
இந்த படத்தில் விவசாயம் மற்றும் கார்ப்பரேட் அரசியல் குறித்து அலசியிருக்கிறார்.
பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் லாபம் படத்தை ஜனநாதன் இயக்கி வருகிறார்.
அவரது அன்பிற்காக, தன் நண்பருடன் சேர்ந்து ‘லாபம்’ படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார் எஸ்பி. ஜனநாதன்.
இதனையடுத்து அவரது உதவி இயக்குனர்கள் அவரை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மூளைக்குசெல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்லியுள்ளனர்.
தற்போது ICUவில் ஜனநாதன் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.
அவரை நடிகர் விஜய்சேதுபதி நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இதனிடையில் அவரை பற்றி வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து இயக்குனரும் நடிகருமான அமீர் கூறியதாவது….
“அன்பும் அறிவும் நிறைந்த அண்ணன் இயக்குநர் SP ஜனநாதன் அவர்களுக்கு நேற்றைய தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
அமீர்
Ameer requests to avoid rumours on Director SP Jananathan’s health