‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்திற்காக இணைந்த அமீர் வெற்றிமாறன்

‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்திற்காக இணைந்த அமீர் வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்த ‘மௌனம் பேசியதே’, ஜீவா நடித்த ‘ராம்’, கார்த்தி நடித்த ‘பருத்திவீரன்’ உள்ளிட்ட பல தரமான படங்களை இயக்கியவர் அமீர்.

அதன்பின்னர் மேடை பேச்சுக்கள் மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு “இறைவன் மிகப்பெரியவன்” எனத் தலைப்பு வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் அமீர்.

இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சூரி மற்றும் ஆர்யா தம்பி சத்யா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.

வெற்றிமாறன் – தங்கம் இருவரும் கதை எழுதும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

‘இறைவன் மிகப்பெரியவன்’ பர்ஸ்ட் டைட்டில் லுக் போஸ்டரில் இந்து முஸ்லிம் கிறிஸ்து மத சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Ameer and Vetri maaran joins for Iraivan Miga Periyavan

சிம்பு இல்லாமல் இணைந்த ‘வாலு’ கூட்டணி; விஜய்சேதுபதி வாழ்த்து

சிம்பு இல்லாமல் இணைந்த ‘வாலு’ கூட்டணி; விஜய்சேதுபதி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச், விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய் சந்தர்.

இவர் தற்போது தயாரிப்பாளாராக மாறியுள்ளார்.

வாலு படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்த நடிகை ஹன்சிகாவை வைத்து தனது முதல் படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தை கூகுள் குட்டப்பன் பட இயக்குனர்கள் சபரி கிரீசன் மற்றும் சரவணன் இணைந்து இயக்குகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(பிப்., 14) பூஜையுடன் துவங்கியது.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் எஸ்.தாணு, நடிகர் விஜய்சேதுபதி ஆகியோர் பட பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

Vijay Sethupathi wishes to Vaalu director new movie

FANTASTIC REPORT.. FANTASTIC RECORD FOR FIR..; வியப்பில் விஷ்ணு விஷால் & டீம்

FANTASTIC REPORT.. FANTASTIC RECORD FOR FIR..; வியப்பில் விஷ்ணு விஷால் & டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கெளதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனு ஆனந்த் இயக்கத்தில் உருவான படம் எஃப்ஐஆர்.

இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்திருந்தார்.

முக்கிய வேடத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா, ரெபோ மோனிகா, கௌரவ் நாராயணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் பிப்ரவரி 11ல் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியானது.

படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களே கிடைத்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியான உள்ளனர்.

மேலும் படத்தின் வெற்றியின் மீது ஏற்கெனவே நம்பிக்கை இருந்தாலும் இந்தளவு பெரிய வெற்றியை பெறும் என நினைக்கவில்லை என வியப்பில் உள்ளதாம் படக்குழு.

சென்னையில் சில தியேட்டர்களில் நேரடி விசிட் அடித்தபோது மக்களின் மகிழ்ச்சியை நேரில் கண்ட படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

வாரத்தின் இறுதிநாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காட்சிகள் திரையரங்குகளில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Victory reports are pouring from everywhere for Vishnu Vishal’s FIR

கடைக்கோடி தமிழ் ரசிகனையும் கவர்ந்தார் ‘கடைசி விவசாயி’

கடைக்கோடி தமிழ் ரசிகனையும் கவர்ந்தார் ‘கடைசி விவசாயி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட தரமான படங்களுக்குப் பிறகு மணிகண்டன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 11ல் வெளியான படம் “கடைசி விவசாயி”.

இந்த படத்தில் நல்லாண்டி, விஜய்சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

முதன்மை கேரக்டரில் நடித்த நல்லாண்டி கொரோனா காலத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த விதமான கமர்ஷியல் மசாலாக்களை இணைக்காமல் ஒரு யதார்த்தமாக அதே சமயம் ஆவணப் படம் போல் இல்லாமல் ஒரு விவசாயியின் உன்னதமான வாழ்க்கையை பதிவு செய்திருந்தார் மணிகண்டன்.

படத்தின் ரீலீசுக்கு முன்பே பிரஷ் ஷோ போடப்பட்டதால் செய்தியாளர்கள் பத்திரிகையாளர்கள் இப்பட விமர்சனங்களை பதிவிட்டனர்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது.

எனவே படம் வெளியானது முதலே திரையரங்குகளிலும் மக்கள் மனதிலும் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. மனநிறைவான படம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருபவர்கள் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஆக கடைக்கோடி தமிழ் ரசிகனையும் இந்த கடைசி விவசாயி கவர்ந்து விட்டார்.

Kadaisi Vivasaayee gets good response from critics as well as public

வலிமை-யை அஜித்துக்கு திரையிட்டாரா வினோத்.? வைரலாகும் தகவல்

வலிமை-யை அஜித்துக்கு திரையிட்டாரா வினோத்.? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘வலிமை’ வருகிற பிப்ரவரி 24ல் உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.

நேற்று வலிமை படத்தின் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட பதிப்புகளின் ட்ரெய்லர் வெளியானது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தை அஜித் நேரில் சென்று பார்த்ததாகவும் அப்போது எடுத்துக் கொண்ட போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அந்த படத்தின் பின்னணியில் ’வலிமை’ படம் பெரிய டிவி திரையில் ஓடுவது போல உள்ளது. அஜித்துடன் இயக்குனர் வினோத் அருகில் உள்ளார்.

ஆனால் ’வலிமை’ பட இறுதிகட்ட பணிகளையும் அஜித் நேரில் சென்று பார்த்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Did Ajith Kumar watch Valimai movie with his team?

தமிழக அரசு அறிவிப்பால் அஜித்-சூர்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழக அரசு அறிவிப்பால் அஜித்-சூர்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் கடந்த 2021ல் சில மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன.

பின்னர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அனுமதியளித்தது தமிழக அரசு.

இதனால் 2022 பொங்கலுக்கு ரிலீசாகவிருந்த அஜித்தின் வலிமை படம் தள்ளிப்போனது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழ்நாட்டில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் திரையுலகினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முக்கியமாக பெரிய பட்ஜெட் படங்கள் இந்த அறிவிப்பால் நல்ல லாபத்தை பெற வாய்ப்புள்ளது.

அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் பிப்ரவரி 24ஆம் தேதியும் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற அறிவிப்பால் முதல் அதிர்ஷ்டம் அஜித் சூர்யா படங்களுக்கு கிடைத்துள்ளது எனலாம்.

100% occupancy allowed for theatres in Tamil Nadu

More Articles
Follows