ரஜினிக்கு அடுத்து விஜய் தான்…; சர்கார் விழாவில் கலாநிதிமாறன் ஓபன் டாக்

ரஜினிக்கு அடுத்து விஜய் தான்…; சர்கார் விழாவில் கலாநிதிமாறன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay rajiniவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இப்பட தயாரிப்பாளரும், சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதிமாறன் கலந்துக் கொண்டு பேசினார். அவர் பேசியதாவது…

“நடிகர் ரஜினிகாந்துக்கு பிறகு விஜய் தான் மிகவும் எளிமையானவர். அவர் திரைத்துறையில் பல சாதனைகளைப் படைத்துவிட்டார்.

அவர் இன்னும் ஒன்றை செய்ய வேண்டும். (சில நிமிடங்கள் ரசிகர்களைப் பார்த்துக் கொண்டே அமைதியாக இருந்தார்).

ரஜினிகாந்த் போல் விஜய்யும் 3டி தொழில்நுட்ப படத்தில் நடிக்க வேண்டும்

ஒரு நடிகர் பொது இடத்திற்கு சென்றால், அவருடன் 10 பேராவது உடன் செல்வார்கள். மேலும் கேமராக்களும் பத்திரிகையாளர்களும் கூடவே செல்வார்கள்.

ஆனால் அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு விஜய் சென்றது யாருக்கும் தெரியாது. ரசிகர்கள் படத்தை வெளியிட்ட பின்புதான் நான் தெரிந்துக் கொண்டேன்” என்றார் கலாநிதிமாறன்.

அஜித் கூட நடிச்சிட்டேன்.. ஆனால் விஜய் வேற லெவல்.. : யோகிபாபு

அஜித் கூட நடிச்சிட்டேன்.. ஆனால் விஜய் வேற லெவல்.. : யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and yogi babuஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏஆர். ரஹ்மான், சன் டிவி கலாநிதிமாறன், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

விழாவினை நடிகர் பிரசன்னா கலந்துக் கொண்டார்.

விழாவிற்கு தாமதமாக வந்த காமெடி நகடிர் யோகிபாபு பேசியதாவது…

‘ நான் இப்போதுதான் ஒரு பட சூட்டிங் முடித்துவிட்டு வந்திதேன்.

சர்கார் போன்ற பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம்.

விஜய் அண்ணாவுடன் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.

என்னுடைய மூளை எனக்கு சோறு போடல. முடிதான் சோறு போடுது.

மெர்சல் படத்தில் விஜய் அண்ணாவுடன் நடித்தேன். சில காட்சிகளில் தயங்கினேன். தொழில் என்று வந்துவிட்டால் சரியாகச் செய்ய வேண்டும் தயங்க கூடாது என்று விஜய் அண்ணன் தான் அட்வைஸ் செய்தார்.

பல நடிகர்களுடன் நடித்துவிட்டேன். விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடித்து விட்டேன். ஆனால் விஜய் அண்ணா வேற லெவல் என்று பேசினார் யோகிபாபு.

அவர் பேசி முடிக்கும்போது ரசிகர்களின் ஆர்பரிப்பு அடங்க வெகு நேரமானது.

அடுத்து என்ன என ரசிகர்களை யூகிக்க வைத்து கொண்டே இருப்பான் *ராட்சசன்*.. : டில்லிபாபு

அடுத்து என்ன என ரசிகர்களை யூகிக்க வைத்து கொண்டே இருப்பான் *ராட்சசன்*.. : டில்லிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ratsasanசமகாலத்திய சூழலில், பல தயாரிப்பாளர்கள் நட்சத்திர நடிகர்களையும், இயக்குனர்களையும் கண்மூடித்தனமாக நம்பி படம் தயாரிக்கும் நிலையில், அபூர்வமாக ஒரு சிலர் மட்டுமே கதையை நம்பி படம் எடுத்து வெற்றிப் பாதையில் பயணிக்கிறார்கள். அப்படி ஒரு தயாரிப்பாளர் தான் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி.டில்லிபாபு. வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் அவரின் ‘ராட்சசன்’ படத்தை பற்றிய நல்ல செய்திகள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு கூறும்போது, “ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி எப்போழுதும் நடிகர்களை தேர்வு செய்வதற்கு முன்னரே, வலுவான கதைகளை தேர்வு செய்து வருகிறது. அதே வகையில் தான் ராட்சசன் படத்தையும் தேர்வு செய்தோம். நான் ஒரு தீவிர கிரைம் நாவல் வாசகர் என்பதால், ராம்குமார் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர் சொன்னதை விட, படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறார். ராட்சசன் யதார்த்த அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு கமெர்சியல் திரைப்படம், அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்களை யூகிக்க வைத்துக் கொண்டே இருக்கும். எங்களுக்கு நெருக்கமான சிலருக்கு படத்தை திரையிட்டு காண்பித்தபோது, ஒரே குரலாக அனைவருக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “ராட்சசனின் அற்புதமான திரைக்கதையை பாராட்டுவதற்கு முன்பு இயக்குனர் ராம்குமாரிடம், ‘முண்டாசுப்பட்டி’ போன்ற நகைச்சுவை படத்துக்கு பிறகு எப்படி இந்த மாதிரி ஒரு திரில்லர் கதையை எழுத முடிந்தது என்று கேட்டேன். அவர் அதற்கு, ‘இந்த கதையை எழுதி முடித்த பிறகு பலரும், இந்த படம் வேண்டாம் என்று சொன்னதோடு ஒரு காமெடி படத்தை இயக்கச் சொன்னார்கள். ராட்சசன் ஒரு வழக்கமான கிரைம்-த்ரில்லர் படம் அல்ல. படத்தில் நிறையவே எமோஷன் உண்டு என்று நான் உறுதியாக கூறுவேன்’ என்றார்.

தனது படக்குழுவினரைப் பற்றி பாராட்டி பேசும்போது, “படக்குழுவை பற்றி பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை. நாயகன் விஷ்ணு விஷால் தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்ய, நிறைய உழைத்தார். ஆராய்ச்சி செய்தார். தனது கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க, அவரது தந்தையிடம் நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டார். அமலா பால் இதுவரை நடித்த படங்களை தாண்டி, அவரது சிறந்த படமாக இந்த படம் இருக்கும். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், சுசானே ஜார்ஜ் ஆகியோர் இந்த படத்தில் இணையற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜிப்ரான் இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. அவருக்கு ஒலி மற்றும் ஒலியை இசையுடன் கலப்பதில் நல்ல அறிவாற்றல் இருப்பதால் அது திரைப்படத்திற்கு மேலும் உயிர் சேர்க்கிறது” என்றார்.

Breaking ஊழல் முதல் சர்கார் தேர்தல் வரை..; விஜய் ஓபன் பேச்சு

Breaking ஊழல் முதல் சர்கார் தேர்தல் வரை..; விஜய் ஓபன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay talks about Politics in Sarkar Audio launchசர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தமிழக அரசியல் நிலவரம் பற்றி பரபரப்பாக பேசினார்.

கலாநிதி மாறன் பெயரிலேயே நிதி இருப்பதால் இந்த படத்துக்கு நிறைய செலவு செய்திருக்கிறார்.

நாங்க சர்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிக்கிறோம். தீபாவளிக்கு வர்றோம். அப்போ ஓட்டு போடுங்க.

இங்க உள்ள பெரியவங்க அமைச்சர்கள் நல்லவங்களா இருந்தா எல்லாம் நல்ல படியா நடக்கும். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை எல்லாத்துக்கும் பணம் தேவைப்படுது. ஒரு தலைவனை இந்த நாடு எதிர்பார்க்கிறது.

எப்போதும் தர்மம் தான் ஜெயிக்கும். நியாயம்தான் ஜெயிக்கும். ஆனால் கொஞ்சம் லேட் ஆகும் அவ்வளவுதான்.

ஒரு நாட்ல மன்னன் நல்லா இருந்தால்தான் நாடு நல்லா இருக்கும். எங்க இருந்து அந்த ஒருத்தன் வருவாங்கன்னு பாருங்க. அவன் வந்து நடத்துவான் பாருங்க..” என்று விஜய் பேசினார்.

Vijay talks about Politics in Sarkar Audio launch

Breaking காங்கிரஸ் கட்சி சூப்பர் கட்சி…; சர்கார் விழாவில் விஜய் அரசியல் பேச்சு

Breaking காங்கிரஸ் கட்சி சூப்பர் கட்சி…; சர்கார் விழாவில் விஜய் அரசியல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Congress Party is good party when Gandhiji was there says Vijayசர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பற்றி பரபரப்பாக பேசினார்.

இன்னைக்கு காந்தி ஜெயந்தி. அவர பத்தி ஒன்று சொல்லனும். காந்தி அநியாயத்துக்கு நல்லராக இருந்தாரு.

அதான் காங்கிரஸ் ஒரு நல்ல கட்சியா இருந்துச்சி.

இப்பவும் அது நல்ல கட்சிதான். ஆனா அது அப்போ சூப்பர் டூப்பர் கட்சியா இருந்ததுக்கு காரணம் காந்திதான்.” என்று காந்தி பற்றியும் காங்கிரஸ் கட்சி பற்றியும் விஜய் பேசினார்.

Congress Party is good party when Gandhiji was there says Vijay

Breaking மெர்சல்ல அரசியல் இருந்துச்சி; சர்காருல அரசியல் மெர்சலா இருக்கும்… விஜய் பன்ச்

Breaking மெர்சல்ல அரசியல் இருந்துச்சி; சர்காருல அரசியல் மெர்சலா இருக்கும்… விஜய் பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar will have Mersal politics Vijays Punch dialogue in Sarkar Audio launchஅண்மைக்காலமாக பொதுமேடைகளிலும் விஜய் ரொம்ப அழகாகவே பன்ச் டயலாக்குகளை பேசி வருகிறார்.

தற்போது சர்கார் இசை விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

அதில் விஜய் பேசும்போது…

மெர்சல் படத்துல அரசியல் இருந்துச்சி; சர்காருல அரசியல் மெர்சலா இருக்கும்” என்று பன்ச் டயலாக் பேசினார்.

Sarkar will have Mersal politics Vijays Punch dialogue in Sarkar Audio launch

More Articles
Follows