தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இப்பட தயாரிப்பாளரும், சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதிமாறன் கலந்துக் கொண்டு பேசினார். அவர் பேசியதாவது…
“நடிகர் ரஜினிகாந்துக்கு பிறகு விஜய் தான் மிகவும் எளிமையானவர். அவர் திரைத்துறையில் பல சாதனைகளைப் படைத்துவிட்டார்.
அவர் இன்னும் ஒன்றை செய்ய வேண்டும். (சில நிமிடங்கள் ரசிகர்களைப் பார்த்துக் கொண்டே அமைதியாக இருந்தார்).
ரஜினிகாந்த் போல் விஜய்யும் 3டி தொழில்நுட்ப படத்தில் நடிக்க வேண்டும்
ஒரு நடிகர் பொது இடத்திற்கு சென்றால், அவருடன் 10 பேராவது உடன் செல்வார்கள். மேலும் கேமராக்களும் பத்திரிகையாளர்களும் கூடவே செல்வார்கள்.
ஆனால் அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு விஜய் சென்றது யாருக்கும் தெரியாது. ரசிகர்கள் படத்தை வெளியிட்ட பின்புதான் நான் தெரிந்துக் கொண்டேன்” என்றார் கலாநிதிமாறன்.