தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் படங்களில் வில்லி வேடம் என்றாலும் ஹீரோயின் வேடம் என்றாலும் மிகப் பொருத்தமானவர் வரலட்சுமி.
விஜய்யின் ‘சர்கார்’ & விஷாலின் ‘சண்டக்கோழி’ படங்களில் இவரது வில்லி வேடம் பெரிதாக பேசப்பட்டது.
தற்போது இவரது கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, யானை, உள்ளிட்ட தமிழ் படங்கள் உள்ளது.
மேலும் சேவ் சக்தி எனும் அமைப்பு மூலம் சமூக நலத்திட்டப் பணிகளையும் செய்து வருகிறார் வரலட்சுமி.
தற்போது இந்த அமைப்பு மூலம், ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கான 2 டன் உணவுப் பொருள்களை அரசுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் வரலட்சுமி.
இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டு சேர்க்க அதன் விவரத்தை நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
மேலும் கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்க்க ‘கோவிட் உதவி எண்களையும்’ வரலட்சுமி உருவாக்கியுள்ளார்.
இந்த சேவையையும் உதயநிதி தொடங்கி வைத்தார்.
அது தொடர்பான விவரங்களை நடிகை வரலட்சுமி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Save Shakti Foundation நிறுவனர் வரலக்ஷ்மி சரத்குமார் அவர்களும் இணை நிறுவனர் சாயா தேவி அவர்களும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு வழங்கப்பட்டு வருவதன் விவரங்களை அளித்தனர்.
மேலும் Save Shakti Foundation – International Human Rights Organisation – Sankalp Beautiful World – Islamic Foundation Trust – EK foundation சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அர்ப்பணிக்கப்பட்ட ஹெல்ப்லைன் பற்றிய விவரங்கள் அளிக்கப்பட்டன.
Thank you so much @Udhaystalin for meeting with #saveshakthi , launching our #covid helpline and accepting our 2 ton food for the stray animals on behalf of the government.. @SBWHealth@Pedigree_India@IHROWorld plz use our COVID helpline we are here to help as much as we can.!! pic.twitter.com/731Xe7ug1A
Actress Varalaxmi provided foods to street dogs