முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் ‘சூர்ப்பனகை’

முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் ‘சூர்ப்பனகை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெஜினா கஸண்ட்ரா நடிப்பில் உருவாகும் “சூர்ப்பனகை” திரைப்படம் அதன் தலைப்பு மற்றும் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றால், ரசிகர்கர்களிடம் பேராதரவை பெற்றுள்ளது.

சமீபத்திய வெற்றிபடங்கள் மூலம் இந்திய அளவில் ரசிகர்கர்களை பெற்றுள்ள, நடிகை ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் நடித்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.

இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு , முழுமையாக முடிவடைந்ததாக, இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் ராஜு கூறியதாவது…

“சூர்ப்பனகை” படத்தின் முழுப்படப்பிடிப்பும் மிக இனிமையாக நடந்தேறியது. நாங்கள் தற்போது போஸ்ட் புரடக்சன் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறோம்.

விரைவில் படத்தின் டிரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். சூர்ப்பனகை படம் அதன் பரபர காட்சிகள், திகில், மர்மம் மற்றும் நகைச்சுவை கூறுகள் ஆகியவற்றால் பார்வையாளர்களுக்கு ஒரு புது விதமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்றார்.

Apple Tree Studios சார்பில் ராஜசேகர் வர்மா இப்படத்தை தயாரிக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது.

படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் தொல்பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார்.

சாம் CS இசையமைக்கிறார், கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு படத்தொகுப்பு செய்துள்ளார் சூப்பர் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தில் நடிகை ரெஜினா கஸண்ட்ரா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெய பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Actress Regina Cassandra’s Soorpanagai trailer releases soon

‘அண்ணாத்த’ அப்டேட் : லக்னோ டூ கொல்கத்தா பறக்கும் ரஜினி படக்குழு

‘அண்ணாத்த’ அப்டேட் : லக்னோ டூ கொல்கத்தா பறக்கும் ரஜினி படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் ’அண்ணாத்த’.

இமான் இசையில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, அபிமன்யூ சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்பட படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது.

அங்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழுவினர் 21-ம் தேதி கொல்கத்தா செல்கின்றனர்.

அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.

அத்துடன் அண்ணாத்த படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது.

Rajinikanth’s Annaatthe next shoot updates here

‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த பட ‘ருத்ர தாண்டவம்’ சென்சார் அப்டேட்

‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த பட ‘ருத்ர தாண்டவம்’ சென்சார் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் “ருத்ர தாண்டவம்”.

மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார்.

சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மற்றும் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா இந்த படத்தையும் உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார்.

இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு U / A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது.

Director Mohan G’s Rudra Thandavam censored with UA

பவர் ஸ்டாருடன் இணையும் நிதி அகர்வால்.; மீண்டும் வரும் விஜய்-அஜித் படத் தயாரிப்பாளர்

பவர் ஸ்டாருடன் இணையும் நிதி அகர்வால்.; மீண்டும் வரும் விஜய்-அஜித் படத் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த குஷி, கில்லி, சிவகாசி, சுக்ரன் போன்ற படங்களை தயாரித்தவர் ஏஎம். ரத்னம்.

கமல் நடித்த இந்தியன், விக்ரம் நடித்த பீமா, சரத்குமார் நடித்த நட்புக்காக.. என பல வெற்றிப் படங்களை தயாரித்து இருக்கிறார்.

தெலுங்கு சினிமாவிலும் படங்களை தயாரித்துள்ளார்.

சில வருட இடைவெளிக்கு பின்னர் அஜித் நடுத்த ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்களை தயாரித்து அஜித்துக்கு ஹாட்ரிக் வெற்றி கொடுத்தார்.

இந்த நிலையில் தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவுள்ள புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார் ரத்னம்.

இந்த படத்திற்கு ‘ஹரிஹர வீர மல்லு’ என பெயரிடப்பட்டுள்ளனர்.

கிரிஷ் என்பவர் இயக்க ஞானசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

பாகுபலி & ஆர்ஆர்ஆர் பட புகழ் கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறாராம்.

இப்படம் பவன் கல்யாணின் 27வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Nidhhi Agerwal to romance Power Star

சசிகுமாருக்கு ஜோடியாக்க மீண்டும் ஹரிப்பிரியாவை தமிழுக்கு அழைக்கும் சத்யசிவா

சசிகுமாருக்கு ஜோடியாக்க மீண்டும் ஹரிப்பிரியாவை தமிழுக்கு அழைக்கும் சத்யசிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கழுகு பட புகழ் சத்யசிவா இயக்கத்தில் புதிய படம் உருவாகவுள்ளது.

இதில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரசன்னா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் நாயகியின் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

தற்போது நாயகியாக ஹரிப்பிரியா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை, முரண் போன்ற படங்களில் நடித்தவர் தான் ஹரிப்பிரியா.

தமிழில் வாய்ப்புகள் குறையவே கன்னட சினிமாவுக்கு சென்றார். தற்போது 9 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஹரிப்பிரியா என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Hari Priya’s re entry in kollywood after 9 years

வருமான வரிக்கு வட்டி விலக்கு கேட்ட சூர்யா மனு தள்ளுபடி.; மேல்முறையீடு செய்வாரா நடிகர்.?

வருமான வரிக்கு வட்டி விலக்கு கேட்ட சூர்யா மனு தள்ளுபடி.; மேல்முறையீடு செய்வாரா நடிகர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

எனவே இதனையடுத்து 2 ஆண்டுகள் மதிப்பீட்டில் 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டது.

மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது.

அதாவது… 2007- 08, 2008-09 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் எனவும் வருமான வரித்துறை சூர்யாவுக்கு உத்தரவிட்டது.

எனவே தீர்ப்பாயத்தில் தனது வழக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்கு சட்டப்படி மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார் நடிகர் சூர்யா.

இதனை கடந்த 2018ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடர்ந்தார் சூர்யா.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆனால் சூர்யா தாமதமாக தான் கணக்கை தாக்கல் செய்தார் என்றும் வருமான வரி துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம், வட்டி விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து (மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து) மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல்

வருமான வரிக்கு வட்டி ஏற்கெனவே செலுத்திவிட்டோம். வட்டிக்கு வட்டி செலுத்துவதை எதிர்த்தே வழக்கு தொடரப்பட்டுள்ளது என நடிகர் சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு முன்பு சூர்யா தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Actor Suriya’s bail dismissed in tax issue case

More Articles
Follows