தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2000ம் ஆண்டுகளில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. தமிழில் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார் ரம்பா.
‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் இவர் ஆட்டம் போட்ட ‘அழகிய லைலா…’ பாடல் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காத பாடலாக இருக்கிறது.
இவர் கனடா நாட்டின் தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பகிர்வார்.
இந்த நிலையில் நேற்று திடீரென ரம்பா தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் காயத்துடன் உயிர் தப்பியதாகவும் ஆனால் தனது மற்றொரு குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விரைவில் தன் மகள் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டு கொண்டுள்ளார் ரம்பா.