நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று உறுதியானது

நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சீயான் விக்ரம்.

இவருக்கு கடந்த சில தினங்களாக லேசான காய்ச்சல் இருந்துள்ளது.

எனவே அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

இதில் அவருக்கு தொற்று உறுதியானது.

லேசான அறிகுறியே இருந்துள்ளது.

இதனையடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் விக்ரம்.

#ActorVikram

Actor Vikram tests positive for covid 19

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தை அடுத்து மீண்டும் இணைந்த சேரன் – ஸ்ரீபிரியங்கா

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தை அடுத்து மீண்டும் இணைந்த சேரன் – ஸ்ரீபிரியங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நந்தா பெரியசாமி இயக்கத்தில்
சேரன் கௌதம் சிவாத்மிகா வெண்பா சரவணன் மௌனிகா ஸ்ரீ பிரியங்கா ஆகியோர் நடித்துள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படம் டிசம்பர் 24ல் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் சேரன் – ஸ்ரீ பிரியங்கா இணைந்து மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளனர்.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் துருவா, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த புதிய படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், அமீர் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இசக்கி கார்வண்ணன் என்பவர் இயக்க, லட்சுமி கிரியேசன்ஸ் தயாரிக்க, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்கு ‘தமிழ்க்குடிமகன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‛‛உங்கள் அனைவரின் அன்போடு இன்று இனிய துவக்கம் என தெரிவித்துள்ளார் சேரன்.

Cheran and Sri Priyanka joins for a new film

எங்களை பார்த்து புதியவர்கள் வியக்க வேண்டாம்..– கமல்ஹாசன்

எங்களை பார்த்து புதியவர்கள் வியக்க வேண்டாம்..– கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், மணிகண்டன், அபி, நாசர், கேஎஸ்.ரவிக்குமார், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛‛சில நேரங்களில் சில மனிதர்கள்”.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துக் கொண்டார்.

அந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது…

எங்களை பார்த்து புதியவர்கள் வியக்க வேண்டாம். நாங்கள் செய்த தவறை நீங்கள் செய்யாமல் இருந்தால் போதும்.

சினிமாவுக்கு சாதி, மதம் கிடையாது. தியேட்டரில் விளக்கை அணைத்து விட்டால் அங்கு சாதி, மதம் இல்லை.

சினிமாவல் ஆர்வம், திறமை இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.

இங்கு குப்பத்திலும், மழைநீரிலும் நான் நடந்து சென்றேன். அப்போது வராத கொரோனா நான் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் போய்விட்டு வந்த பின் வந்து விட்டது.

எனவே யாரும் அஜாக்கிரதையாக இருக்காதீர். முககவசம் நம் உயிரை காக்கும் கவசமாக மாறியுள்ளது. எனவே மறவாமல் அணிந்துக் கொள்ளுங்கள்”

இவ்வாறு கமல் பேசினார்.

Kamal Haasan speech at Sila Nerangalil Sila Manidhargal trailer launch

துபாயில் வேலை செய்த தருணங்கள்…; துபாய் நாட்டில் தன் நினைவுகளை பகிர்ந்த விஜய்சேதுபதி

துபாயில் வேலை செய்த தருணங்கள்…; துபாய் நாட்டில் தன் நினைவுகளை பகிர்ந்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எனக்கு நிறைய கடன்சுமை இருந்தது. எனவே நான் நிறைய சம்பாதிக்கவே சினிமாவிற்கு வந்தேன் என பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி.

இவர் நடிகராவதற்கு முன்பு துபாய் நாட்டில் 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அதன்பிறகே திருமணம் செய்துக்கொண்டார் . சினிமாவில் நடிக்க துவங்கினார்.

இவர் துபாய் தங்கியிருந்த போட்டோக்களை அடிக்கடி இணையத்தை காணலாம்.

இந்த நிலையில் இவர் தன் துபாய் நினைவுகளை துபாய் நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

துபாய் அமீரகத்தின் 50வது பொன்விழா விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார் விஜய்சேதுபதி.

அமீரகத்தில் வசிக்கும் ஆசிய நாடுகளை சேர்ந்த சிறந்த தொழில் அதிபர்கள், நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விஜய் சேதுபதி விருதுகளை வழங்கினார்.

பின்னர் செல்வாக்கு மிகுந்த நட்சத்திர விருதினை டாக்டர் மாஜித் பின் சயீத் அல் நுயைமி அவர்கள் விஜய்சேதுபதிக்கு அந்த விருதை வழங்கினார்.

விஜய்சேதுபதி பேசும்போது.. “நான் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். நான் கடந்த 2000ம் ஆண்டு துபாய்க்கு வந்தேன். 3 ஆண்டுகள் தங்கி வேலை பார்த்தேன்.

இங்குள்ள தெருக்களில் எனது கனவுகளுடன் நடந்தேன். இங்கு வந்தபிறகு இது வெளிநாடு என்ற உணர்வு இல்லாமல் எனது 2வது தாய்நாடு போல துபாய் நாட்டை உணர்ந்தேன்.” இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.

Vijay Sethupathi shares his working experience in Dubai

நடிகையை தன் 2வது மனைவியாக்கிய சுசீத்ராவின் முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக்

நடிகையை தன் 2வது மனைவியாக்கிய சுசீத்ராவின் முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அலைபாயுதே, தெய்வ திருமகள், வெப்பம், யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கார்த்திக் குமார்.

யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் முறைப் பையனாக நடித்திருப்பார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறையவே சினிமாவை விட்டு விலகினார்.

தற்போது மேடைகளில் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி கை நிறைய பணம் சம்பாதித்து வருகிறார்.

இவர் பாடகி சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த 2017ல் சுசித்ராவை விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் நடிகை அமிர்தா சீனிவாசன் என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார் கார்த்திக் குமார்.

மேயாத மான், தேவ் உள்ளிட்ட சில படங்களில் அமிர்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Karthik Kumar and Amrutha Srinivasan tie the knot

மகாத்மா சொன்னார்.. அஜித் செய்தார்.; மிரட்டலான ‘வலிமை’ மேக்கிங் வீடியோ.!

மகாத்மா சொன்னார்.. அஜித் செய்தார்.; மிரட்டலான ‘வலிமை’ மேக்கிங் வீடியோ.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் – வினோத் – போனி கபூர் கூட்டணியில் உருவாகி உள்ள படம் வலிமை.

நாயகியாக ஹூமா குரேஷி, வில்லனாக கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அடுத்தாண்டு 2022 பொங்கல் வெளியீட்டிற்கு படம் தயாராகி வருகிறது.

ஏற்கனவே இப்பட டீசர், நாங்க வேற மாறி, அம்மா… ஆகிய பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டது.. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது ஆகியவையும் இதில் குறிப்பிடப்பட்டது.

மேலும் பைக் வீலீங்.. ஆக்ஷன் காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டன என்பதை விளக்கமாக இதில் அமைந்துள்ளது.

வீலீங் செய்யும்போது அஜித் தடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னர் எழுந்து நிற்கிறார்.

வீழ்ந்தாலும் திரும்ப எழுவோம் என்பதை மகாத்மா காந்தி வரிகளுடன் காட்டியுள்ளனர்.

இந்த மேக்கிங் வீடிநோவை அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Valimai making..

Here comes the action-packed #ValimaiMakingVideo

More Articles
Follows