அவள் எனக்கு மகளே இல்ல.. தரங்கெட்ட நடிகரை மணந்துவிட்டாள்.. – ராஜ்கிரண்

அவள் எனக்கு மகளே இல்ல.. தரங்கெட்ட நடிகரை மணந்துவிட்டாள்.. – ராஜ்கிரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ராஜ்கிரண் தன் குடும்பம் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

என் “மகளை” ஒரு சீரியல் நடிகர்
கல்யாணம் பண்ணியிருப்பதாக
ஒரு தவறான தகவல்
என் பார்வைக்கு வந்தது.

என் மீது அபிமானம் கொண்டுள்ள
அனைவருக்கும், உண்மையை
விளக்க வேண்டியது என் கடமை.
எனக்கு திப்பு சுல்தான் @
நைனார் முஹம்மது என்ற
ஒரே ஒரு மகனைத்தவிர,
வேறு பிள்ளைகள் கிடையாது.

இந்து மதத்தைச் சேர்ந்த
ஒரு வளர்ப்பு மகள் இருந்தார்.
அவர் பெயர் பிரியா.
அவர் மனம் சந்தோசப்படுவதற்காக,
அவரை “வளர்ப்பு மகள்” என்று
நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல்
சொந்த மகள் என்றே
சொல்லி வந்தேன்.

முகநூல் மூலம் அவருடன் நட்பு
ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர்,
என்னென்ன முறையிலோ அந்தப்பெண்ணை, தன் வசப்படுத்தி,
கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்
என்ற மனநிலைக்கு
கொண்டு வந்திருக்கிறார்.

இந்த விசயம் என் காதுக்கு வந்ததும்,
அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க
ஆரம்பித்ததில், அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக
எதையும் செய்யும் ஈனத்தனமும்
கொண்டவர் என்பது,
எனக்குத்தெரிய வந்தது.

அவரது நோக்கம் பெண்ணை வைத்து
வாழ்வதில்லை. எனக்கு இருக்கும்
நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா
துறையில் வாய்ப்புகளை பெறுவதும்,
என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள்.

இதையெல்லாம் பலவிதமாக
விசாரித்து தெரிந்து கொண்ட நான்,
என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன்.
அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை.

அவரைத்தான் கட்டிக்கொள்வேன் என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள
மாட்டோம் என்றும், அந்தப்பெண்
சொல்லியிருந்தார்.

அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி
இந்தக்கல்யாணம் வேண்டாம் என்று
என் மனைவி, அந்தப்பெண்ணிடம்
அழுது மன்றாடி, எப்படியெப்படியோவெல்லாம் மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, ” சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்”
என்று சொல்ல,
நாங்களும் மாப்பிள்ளை பார்த்துககொண்டிருந்தோம்.

இந்த சூழ்நிலையில் தான்,
என் மனைவியின் தோழியான,
“லட்சுமி பார்வதியை” பார்த்து விட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு,
இந்தப்பெண் ஆந்திரா போய்
நான்கு மாதங்களாகி விட்டன,

இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை.
இந்த நிலையில் தான்,
இப்படி ஒரு செய்தி வலம் வந்து
கொண்டிருக்கிறது.
தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, என் மனைவி தான் இதற்கெல்லாம் காரணம்
என்பது போல், பொய் பொய்யாக
பேசிக்கொண்டு திரிகிறது,

இந்தப் பெண். இந்த விசயத்தில் நான்
கோபப்பட்டபோது கூட, என்னை
சமாதானப்படுத்தி, அந்தப்பெண்ணுக்காக பரிந்து பேசி இன்று வரை அந்தப்பெண்ணுக்கு
உறுதுணையாக நிற்பது,
என் மனைவி மட்டும் தான்.

பெண் பிள்ளையை வளர்க்கும் ஒவ்வொரு தாயும், தன் பிள்ளையை நல்லபடியாக வாழவைக்க வேண்டுமே என்ற அக்கறையில், எப்படியெல்லாம் கண்காணிப்பாளோ, அப்படி ஒரு தாய் நடந்து கொள்வது, வாழ்க்கை அனுபவமில்லாத சிறு பிள்ளைகளுக்கு தவறாக தோன்றுகிறது…

என் வளர்ப்புப்பெண், ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன்.

ஆனால், தரங்கெட்ட, பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்து, தன் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம்…

இதன் மூலம் நான் எல்லோரிடமும்
சொல்லிக்கொள்வது, என்னவென்றால், என் பெயரைப்பயன்படுத்தி
இவர்கள் உங்களை
எந்த வகையிலாவது அணுகினால்,
அதனால் ஏற்படும் எந்தப்பிரச்சினைக்கும்
நான் பொறுப்பல்ல, என்பது தான்.
இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது
என் பெயரை எதற்காகப் பயன்படுத்தினாலும்
சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த சீரியல் நடிகர்,
தன் குள்ளநரித்தனங்களால், என் வளர்ப்புப்பெண்ணிற்கு
கணவனாகிக் கொள்ளக்கூடும்.

ஆனால், எந்தக்காலத்திலும்
எனக்கு மருமகனாக முடியாது.
இன்றிலிருந்து,
இவர்கள் இருவருக்கும்
என் குடும்பத்திற்கும் எவ்வித
சம்பந்தமும் இல்லை.
நேர்மையும், சத்தியமுமே என்றும் வெல்லும்.

இப்படிக்கு… நடிகர் ராஜ்கிரண்

ராஜ்கிரண்

Actor Rajkiran about his daughter marriage

ஆஹா தமிழ் – டி கம்பெனி கூட்டணி.; சீனு ராமசாமி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்

ஆஹா தமிழ் – டி கம்பெனி கூட்டணி.; சீனு ராமசாமி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆஹா ஒரிஜினல் படைப்பிற்காக தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் ( புரொடக்சன் நம்பர் 4 ) தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கிளாப் அடிக்க, இயக்குநர் பிரம்மா முதற்காட்சிக்கான ஒளிப்பதிவைத் தொடங்கி வைத்தார்.

ஆஹா டிஜிட்டல் தளத்தில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஒரிஜினல் திரைப்படங்கள், ஒரிஜினல் வலைதளத் தொடர், ஒரிஜினல் நிகழ்ச்சிகள், என பல அசலான , தமிழர்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களை, உள்ளூர் திறமைசாலிகளுடன் இணைந்து வழங்கி வருகிறது. இத்தளத்தில் வெளியான ‘மாமனிதன்’, ‘குருதி ஆட்டம்’, போன்ற தமிழ் திரைப்படங்கள், சமீபத்தில் வெளியான ‘ஜீவி 2’ உள்ளிட்ட திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது.

ஆஹா தயாரித்த ‘பயணிகள் கவனிக்கவும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், டர்மரெரிக் மீடியாவுடன் இணைந்து ரத்த சாட்சி’ படத்தினை தயாரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, டி கம்பெனியுடன் இணைந்து தற்போது புதிய படத்தைத் தயாரிக்கிறது.

தயாரிப்பு நிறுவனமான டி கம்பெனி, சிலம்பரசன் நடிப்பில் தயாரான ‘ஈஸ்வரன்’, ஜெய், பாரதிராஜா நடிப்பில் தயாரான ‘குற்றம் குற்றமே’ ஆகிய திரைப்படங்களையும், ஆஹாவில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குத்துப் பத்து’ எனும் வலைதள தொடரையும் தயாரித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் நான்காவது படைப்பாக புதிய திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்த திரைப்படம் ஆஹா ஒரிஜினல் படைப்பாகவும் உருவாகிறது.

அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படத்தில், சார்லி, ‘சேதுபதி’ பட புகழ் நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, கே பி ஒய் தீனா, நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட பல நடிக்கிறார்கள்.

மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்கிறார்.

கலை இயக்கத்தை எம் எஸ் பி மாதவன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜி. மதன் மேற்கொள்கிறார்.

பேமிலி டிராமா / டிராஜிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிக்கிறார்.

ஆஹா ஒரிஜினல் படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கார்த்திக் சீனிவாசன்

Aha Tamil and D Company alliance for next movie

‘8 தோட்டாக்கள்’ & ‘குருதி ஆட்டம்’ பட இயக்குனர் ஸ்ரீகணேஷ் திருமணம்

‘8 தோட்டாக்கள்’ & ‘குருதி ஆட்டம்’ பட இயக்குனர் ஸ்ரீகணேஷ் திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாயகன் வெற்றி நடித்த ‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கி ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

இவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

அண்மையில் அதர்வா நடித்து வெளியான ‘குருதி ஆட்டம்’ படத்தையும் இயக்கியவர் ஸ்ரீகணேஷ் தான்.

இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் தோழியான சுஹாசினி என்பவரை நேற்று செப்டம்பர் 7ல் திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களின் திருமணம் சென்னை மருதீஸ்வரர் கோயிலில் நடைபெற்றது.

ஸ்ரீகணேஷ்

Director Sriganesh got married with Suhashini

பான் இந்தியா மியூசிக் டைரக்டர் ஆகிறார் சாம் சி.எஸ்

பான் இந்தியா மியூசிக் டைரக்டர் ஆகிறார் சாம் சி.எஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார்.

விக்ரம் வேதா இந்திப்பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் CS. விக்ரம் வேதா மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

சாம் CS

அப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் மொழி தாண்டி இந்தியாவெங்கும் புகழ் பெற்றது. அப்படத்தின் தீம் இசை பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது.

இசையில் தனித்துவம் காட்டி தனக்கென தனி ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை மயக்கினார். கண்ணம்மா மெலோடி பாடல் தமிழகமெங்கும் அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்தது.

மெலோடி பாடல்களில் இன்றைய இளைய ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார். கைதி, அடங்க மறு, சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், சுழல் போன்ற தொடர் வெற்றிகளை அடுத்து, சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

ராக்கெட்ரி வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தின் இந்திப் பதிப்பு டிரெய்லர் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

படத்தின் இசைக்கு பல தரப்புகளிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இசையமைப்பாளர் சாம் CS க்கு பாலிவுட்டிலிருந்து பல வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து இந்திய மொழிகளிலும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார் சாம் CS.

Sam C.S. becomes Pan India Music Director

அழகிய AUNTY-களுடன் அரசர்கள் ஆட்டம்.; இணையத்தில் பட்டையை கிளப்பும் ‘பவுடர்’ பட பாடல்

அழகிய AUNTY-களுடன் அரசர்கள் ஆட்டம்.; இணையத்தில் பட்டையை கிளப்பும் ‘பவுடர்’ பட பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்ஸ்ரீ ஜீ கதையின் நாயகனாக நடித்து இயக்கி தயாரித்துள்ள படம் ‘பவுடர்’.

இவரே ஜீ மீடியா சார்பாக படத்தை தயாரித்துள்ளார்.

இவருடன் பிஆர்ஓ நிகில் முருகன், வித்யா ப்ரதீப், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, ஆதவன், சில்மிஷம் சிவா, சிங்கம் புலி, தர்மா, ராமராஜன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

லியாண்டர் லீமார்ட்டி இசையமைக்க ராஜா பாண்டி ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ரத்த தெறி தெறி… சாயம் போன வெண்ணிலவே.. நோ சூடு நோ சொரனை.. ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் ‘நோ சூடு நோ சொரனை..’ என்ற பாடல் வீடியோவை ஆகஸ்ட் 31ல் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட்டனர்.

இந்தப் பாடலை நீண்ட நாட்களுக்குப் பிறகு கானா பாலா பாட விஜய் ஸ்ரீ எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு மட்டும் பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் பாடலை வித்தியாசமாக படமாக்கி ஆடி இருந்தார் விஜய் ஸ்ரீ. அரசர் காலத்து உடைகளில் அரசர்கள் ஆட இந்த காலத்து உடையில் அழகிய ஆண்டிகள் நடனமாடி இருந்தனர். எனவே இது இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது

பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடலை யூடியூபில் 10 லட்சம் பார்வையாளர்கள் மேல் கண்டு ரசித்துள்ளனர்.

விரைவில் பவுடர் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இசை லியாண்டர் லீ மார்ட்டி,
நடனம் சுரேஷ் சிது, ஒளிப்பதிவு பிரகத் முனுசாமி. படத்தொகுப்பு குணா.

தயாரிப்பு: கோவை எஸ் பி மோகன்ராஜ், ஜெயஸ்ரீ விஜய்.

முழுக்க முழுக்க ஒரே இரவில் சென்னை பகுதிகளில் படத்தை படமாக்கியுள்ளார் விஜய்ஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது.

பவுடர்

Powder film No Soodu No Soranai song goes viral with 1M views

#POWDER #பவுடர்

#NoSooduNoSoranai Full Video song

@vijaysrig Make up

@leanderleemarty Musical

#VidyaPradeep @onlynikil @im_rajendran @catchAnithra #Vaiyapuri @catchguna @agscinemas @divomovies #SPMohanraj @onlygmedia

#POWDER #பவுடர்

#NoSooduNoSoranai Full Video song out now

https://t.co/LzYZmpKDI8

#நோசூடுநோசொரனை கோழையின் முகவரி

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு வரி விலக்கு கேட்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு வரி விலக்கு கேட்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழா நேற்று நள்ளிரவு வரை நடந்தது.

இதில் கமல், ரஜினி உள்ளிட்ட தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி கலந்து கொண்டு பேசியதாவது…

“பொன்னியின் செல்வன் அருமையான படைப்பு. மணி சாருக்கு நன்றி.
இப்படியொரு பிரமாண்டமான படைப்பை கொடுத்த லைகா சுபாஸ்கரனுக்கு வாழ்த்துக்கள்.

நமது வரலாற்றை, மக்கள் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு. இந்த மாதிரி படங்களை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். எல்லோரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க சார்பில் கோரிக்கை வைக்கிறோம். இப்படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.”

இவ்வாறு பேசினார்.

Thenandal Murali has requested Chief Minister Stalin

More Articles
Follows