பிரபுதேவா நடிப்பில் உருவான அதிரடி ஆக்சன் ‘முசாசி’

பிரபுதேவா நடிப்பில் உருவான அதிரடி ஆக்சன் ‘முசாசி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நடனப் புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகும் படத்திற்கு ‘முசாசி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவருடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் “முசாசி” ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை.

இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

‘முசாசி’ என வித்தியாசமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் தோற்றம், கம்பீரமாக இருப்பதால் இணையவாசிகளின் ஆதரவும், வரவேற்பும் எதிர்பார்ப்பை விட கூடுதலாக கிடைத்து வருகிறது.

Actor Prabhudeva will be seen in the role of a Deputy Commissioner of Police in an upcoming film titled Musasi

தனுஷுடன் உணவருந்தும் அந்த பெண் யார்.? வைரலாகும் படத்தால் சர்ச்சை

தனுஷுடன் உணவருந்தும் அந்த பெண் யார்.? வைரலாகும் படத்தால் சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்துள்ள ’மாறன் படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

மேலும் ‘திருச்சிற்றம்பலம்’ ’நானே வருவேன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ்.

தற்போது ஹைதராபாத்தில் ’வாத்தி’ பட படப்பிடிப்பில் உள்ளார் தனுஷ்.

இந்த நிலையில் படப்பிடிப்பின் போது ஐதராபாத்தில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் தனுஷ் லஞ்ச் சாப்பிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் அவருடன் இருக்கும் இளம் பெண் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

தற்போது அவர் தனுஷின் காஸ்ட்யூம் டிசைனர் என கூறப்படுகிறது.

Actor Dhanush is back in hyderabad for Vaathi shoot

ரசிகர்களுக்கு பாடமெடுக்க மீண்டும் டீச்சரான அமலாபால்

ரசிகர்களுக்கு பாடமெடுக்க மீண்டும் டீச்சரான அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை அமலாபால்.

தற்போது மலையாளத்தில் ‘தி டீச்சர்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் அமலாபால்.

இந்த படத்தை பஹத் பாசில் நடித்த அதிரன் என்ற படத்தை இயக்கிய விவேக் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நேற்று பிப்ரவரி 16ல் தொடங்கியது.

நட் மக் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் வருண் திரிபுரனேனி மற்றும் அபிஷேக் ராமிஷெட்டி இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் செம்பன் வினோத் ஜோஸ், ஹக்கீம் ஷாஜகான், பிரசாந்த் முரளி, நந்து, ஹரிஷ் பென்கன், மஞ்சு பிள்ளை, அனுமோல், மாலா பார்வதி, வினிதா கோஷி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் அனு மூத்தேடத்.

திரைக்கதை மற்றும் வசனம் பிவி ஷாஜி குமார் மற்றும் விவேக்.

அன்வர் அலி மற்றும் யுகபாரதியின் வரிகளுக்கு டான் வின்சென்ட் இசையமைக்கிறார்.

படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு டீச்சராக நடிக்கிறார் அமலாபால். இவர் ஏற்கெனவே பசங்க-2, ராட்சசன் ஆகிய படங்களிலும் டீச்சராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress AmalaPaul next malayalam movie called TEACHER

விக்ரமின் ‘கோப்ரா’ பட்ஜெட்டால் அஜய்ஞானமுத்து – சிவா மோதல்

விக்ரமின் ‘கோப்ரா’ பட்ஜெட்டால் அஜய்ஞானமுத்து – சிவா மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கோப்ரா.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார்.

2019ல் தொடங்கப்பட்ட இப்பட சூட்டிங் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இடைவெளிகள் விட்டு விட்டு நடைபெற்றதால் இதன் பட்ஜெட் பல மடங்கு உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது பற்றி சமூகவலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து என்ற செய்தியை நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

இயக்குனரின் பதிவில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்து இருந்தாலும் அதில் தயாரிப்பாளர் லலித்குமார் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து “போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு, அதைத் தாங்கிக்கொண்டு படத்தை முடித்துக்கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று பிரபல தயாரிப்பாளர் டி. சிவா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அஜய் ஞானமுத்து அளித்து பதிலில்… “கோப்ராவின் பட்ஜெட் அதிகமானதற்குக் காரணம் நான் இல்லை. அதை எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும்.

வதந்திகளை விட ஆதாரங்கள் சத்தமாகப் பேசும். குழு என்றால் அது தயாரிப்பாளரும் சேர்ந்துதான். நான் என்றும் அவரை கைவிடவில்லை” என தெரிவித்துள்ளார் அஜய் ஞானமுத்து.

Chiyaan Vikram’s Cobra director responds to film’s budget controversy

அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் சாங் சர்ச்சை; கோர்ட் கேஸ் அப்டேட்

அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் சாங் சர்ச்சை; கோர்ட் கேஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழு வருடங்களுக்கு முன்… 2015ல் அனிருத் இசையில் சிம்பு பாடியதாக லீக்கான ‘பீப் சாங்’ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதில் பெண்களை மிகவும் கேவலமாக ஆபாசமாகவும் சித்தரிக்கும் வகையில் பாடல் வரிகள் இருந்தன.

இதனையடுத்து மகளிர் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி சிம்பு அனிருத் மீது வழக்குகள் தொடுத்தனர். இந்த புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து தனக்கு எதிரான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் சிம்பு.

இந்த மனு நேற்று பிப்ரவரி 16ல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகர் சிலம்பரசனுக்கு எதிரான புகாருக்கு ஆதாரமில்லை என (கோவை) வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த மற்றொரு வழக்கில் காவல்துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது உயர்நீதி மன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Court’s final decision on Simbu’s ‘Beep Song’ controversy

ரஜினி படத்தை பகிர்ந்த இசைஞானி…; இளையராஜா படத்தை பகிர்ந்த கங்கை அமரன்

ரஜினி படத்தை பகிர்ந்த இசைஞானி…; இளையராஜா படத்தை பகிர்ந்த கங்கை அமரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் இளையராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்தடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து என்றும் என்றென்றும் ரஜினிகாந்த் என பதிவிட்டு இருந்தார்.

இதனால் ரஜினியின் அடுத்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி கேட்டனர். ஆனால் இளையராஜா தரப்பில் எந்த பதிலும் இல்லை.

இந்த நிலையில் இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் இளையராஜாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில்… “இன்று நடந்த சந்திப்பு.. இறை அருளுக்கு நன்றி.. உறவுகள் தொடர்கதை..!!!” என பதிவிட்டு அதில் இளையராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.

அண்ணன் தம்பி ஆகிய இவர்கள் இருவரும் சில காலங்கள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தனர். பெரும்பாலும் எந்த நிகழ்விலும் இவர்கள் சந்தித்து கொண்டது இல்லை.

மேலும் இளையராஜா குறித்து பல இடங்களில் கடுமையாக விமர்சித்தும் பேசி இருக்கிறார் கங்கை அமரன். இதனாலேயே இவர்கள் இணையாமல் இருந்து வந்தனர்.

ஆனால் இளையராஜாவின் மகன்கள் யுவன் மற்றும் கார்த்திக் ராஜா மற்றும் கங்கை அமரனின் மகன்கள் வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோர் நல்ல நட்புடனே இருந்தனர். சகோதரர்களாகிய இவர்கள் பல படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

இளையராஜாவும் கங்கை அமரனும் இணைந்து ‘கரகாட்டக்காரன்’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களையும் பாடல்களையும் தர வேண்டும் என ரசிகர்கள் தங்கள் கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.

Ilaiyaraaja and gangai amaren shared pics in twitter goes viral

More Articles
Follows