பிரபுதேவா படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்திய இலங்கை பிரதமர்

பிரபுதேவா படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்திய இலங்கை பிரதமர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் ‘முசாசி’ படக் குழுவினரை அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும் , நடன இயக்குநருமான பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘முசாசி. அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார்.‌

ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டு இருக்கிறார்கள்.

படக்குழுவினரை கௌரவப்படுத்துவதற்காக அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினை ஏற்ற படக் குழுவினர் அவர் நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர். இது தொடர்பான புகைப்படத்தை படக் குழுவினர் பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

‘முசாசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

prabhu deva starring ‘musasi’ movie crew met with the sri lankan prime minister

மம்மூட்டி – சிரஞ்சீவி படத்தலைப்பை கைப்பற்றிய விஜய்ஆண்டனி

மம்மூட்டி – சிரஞ்சீவி படத்தலைப்பை கைப்பற்றிய விஜய்ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிடப்பட்டுள்ளது.

முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார்.

ஹிட்லர் திரைப்படத்தை ஆக்‌ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா. பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில், ஒரு அழகான காதலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட அனுபவமாக இப்படம் இருக்கும்.

ஹிட்லர் ஒரு மனிதனாக இருக்கலாம் ஆனால் இன்று வரலாற்றில் அந்தப் பெயர் சர்வாதிகாரத்தின் அடையாளம். அதன் காரணமாகவே இப்படத்திற்கு ஹிட்லர் என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார்.

கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். Chendur film international சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஹிட்லர்

Vijayantonys next movie titled Hitler

கூடுதல் தகவல்…

1996 இல் மலையாளத்தில் மம்மூட்டி நடித்த படத்தின் பெயர் ‘ஹிட்லர்’. தன்னுடைய ஐந்து தங்கைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அண்ணனாக மம்மூட்டி நடித்திருப்பார். இந்த படம் தான் 1997 இல் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது
தெலுங்கிலும் மிலிட்டரி என்ற பெயரில் வெளியானது.

2003 ஆம் ஆண்டு இதே படத்தை தமிழில் சத்யராஜ் நடிப்பில் ரீமேக் செய்தனர். ஆனால் தமிழில் மிலிட்டரி என்ற படத் தலைப்பு வைத்திருந்தனர்.

ஆர் பி பாலா தயாரிப்பில் கலையரசன் – தீபா இணைந்த ‘கொலைச்சேவல்’

ஆர் பி பாலா தயாரிப்பில் கலையரசன் – தீபா இணைந்த ‘கொலைச்சேவல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரத் – வாணி நடித்த ‘லவ்’ படத்தை தொடர்ந்து ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘கொலைச்சேவல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை போஸ்டரையும் இயக்குநர் பா ரஞ்சித் இன்று வெளியிட்டார்.

அறிமுக இயக்குநர் வி ஆர் துதிவாணன் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில் கலையரசன் கதைநாயகனாக நடிக்க, யூடியூப் குறும்படங்கள் புகழ் தீபா பாலு நாயகியாக திரையுலகில் அறிமுகம் ஆகிறார்.

பால சரவணனும் அகரன் வெங்கட்டும் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, மிகவும் வலுவான எதிர்மறை வேடத்தில் இதுவரை குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த ஆதவன் நடிக்கிறார். கஜராஜ் உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் உள்ளனர்.

‘கொலைச்சேவல்’ குறித்து பேசிய தயாரிப்பாளர் ஆர் பி பாலா…

“இது ஒரு மிகவும் அழகான காதல் கதை. அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. அதே சமயம் சமுதாயத்திற்கு தேவையான மிக முக்கியமான கருத்து ஒன்றையும் இப்படம் சொல்லும்.

குறிப்பாக திரைப்படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இதுவரை கண்டிராத வகையில் இருக்கும்,” என்றார்.

மேலும் பேசிய அவர், “திறமை வாய்ந்த இளைஞரான துதிவாணனை இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. கலையரசனுக்கு ஒரு திருப்புமுனையாக இந்த திரைப்படம் அமையும்.

படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. ‘கொலைச்சேவல்’ மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்,” என்று கூறினார்.

‘கொலைச்சேவல்’ திரைப்படத்திற்கு பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய, சாந்தன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பிற்கு அஜய் மனோஜும், கலை இயக்கத்திற்கு சரவண அபிநாமனும், சண்டை பயிற்சிக்கு டேஞ்சர் மணியும் பொறுப்பேற்றுள்ளனர்.

வெகு விரைவில் இப்படம் வெளியாகிறது.

Kalaiyarasan and Deepa Balu in lead roles titled Kolaiseval

பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி கொடல் உருவுற சம்பவம் உறுதி.; பட்டைய கிளப்பும் ‘லியோ’ பாட்டு

பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி கொடல் உருவுற சம்பவம் உறுதி.; பட்டைய கிளப்பும் ‘லியோ’ பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த படம் அடுத்த மாதம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது.

எனவே ரசிகர்களை சமாதானப்படுத்த திடீரென ‘லீயோ’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பேட் ஹாஷ் என்ற பாடல் வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு விஷ்ணு என்பவர் வரிகளை எழுதியுள்ளார்.

அந்தப் பாடல் வரிகள் இதோ..

Badass
Mr Leo Dass is a Badass,
HE’S A FREAKIN Badass,

சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து, இவன் வேட்டைக்கு சிதறணும் பயந்து..

பெரும் புள்ளிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி, குடல் உருவுற சம்பவம் உறுதி..

இதுவரையில நல்லவன் இருந்தான், இந்த கதையில ராட்சசன் முகம்தான்..

வத்திகுத்தி இல்ல எரிமலை மவனே, நெருங்காதே நீ…

குலசாமிய வேண்டிக்கோ மாமே, மொறைக்காதே நீ.. Badass மா ஒரசாமா ஓடிடு, Badass மா லியோ தாஸ் மா.. Badass மா ஒரசாமா ஓடிடு..

லியோஓஓஓஓஓ…

Badass
Mr Leo Dass is a Badass..

லியோஓஓஓஓஓ…

Badass
HE’S A FREAKIN Badass..

லியோஓஓஓஓஓ…

லியோஓஓஓஓஓ…

பல ராஜாக்கள பார்த்தாச்சுடா, இவன் கத்தி ரொம்ப கூரு ஆச்சுடா..

லியோ லியோ லியோ லியோ லியோ வெறிதான்..

நூறு பஞ்சாயத்து தீர்த்தாச்சுடா, வரலாறு மொத்தம் blood ஆச்சுடா..

லியோ லியோ லியோ லியோ லியோ வெறிதான்..

ரொம்ப ரொம்ப ஆடாத மா, தெறிக்க தெறிக்க அடிப்பாரு மா.. bloody sweet!

வத்திகுத்தி இல்ல எரிமலை மவனே, நெருங்காதே நீ…

குலசாமிய வேண்டிக்கோ மாமே, மொறைக்காதே நீ.. Badass மா ஒரசாமா ஓடிடு, Badass மா ஒரசாமா ஓடிடு..
Badass மா உன் வால சுருட்டிடு.. Badass மா லியோ தாஸ் மா, Badass மா ஒரசாமா ஓடிடு

லியோஓஓஓஓஓ…

Badass
Mr Leo Dass is a Badass..

லியோஓஓஓஓஓ…

Badass
HE’S A FREAKIN Badass..

லியோஓஓஓஓஓ…

Badass
Mr Leo Dass is a Badass..

லியோஓஓஓஓஓ…

Badass
HE’S A FREAKIN Badass..

ரெஸ்ட் இன் ஃபீஸ்…

LEO – Badass Lyric

LEO – Badass Lyric

LEO movie Badass song full Lyrics here

சிறிய படங்களை வெளியிடுவது படுகொலைக்கு சமம்..; விஷால் சொன்னது உண்மை.. – சீனுராமசாமி

சிறிய படங்களை வெளியிடுவது படுகொலைக்கு சமம்..; விஷால் சொன்னது உண்மை.. – சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஷால் பேசும்போது.. “4 கோடிக்கு குறைவான பட்ஜெட் படங்களை தயாரிக்காதீர்கள். உங்களுக்கு ஒரு பைசா கூட தேறாது. அதற்கு பதிலாக நிலங்களை வாங்கி போடுங்கள்.. ஏற்கனவே 120 படங்கள் திரைக்கு வர முடியாமல் முடங்கி கிடக்கின்றன’ என பேசி இருந்தார்.

இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்ன பட்ஜெட் படங்கள் சில வெற்றி பெற்று தோல்வியடைந்தும் உள்ளன. அதே சமயம் பெரிய படங்கள் மோசமான தோல்வியடைந்தும் உள்ளன.

நிலைமை இப்படி இருக்கையில் விஷால் சொன்னது சரியா தவறா என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் சீனுராமசாமி வெளியிட்டுள்ள பதிவில்…

“நடிகர் விஷால் சொல்வதில் ஒரு உண்மை உண்டு. சிறு படங்களுக்கு இங்கே நியாயம் இல்லை. சிறுபடங்களை வெளியிட யார் உண்டு.

முதல் மூன்று நாள் அவகாசம் தான். சிறுபடங்களுக்கு தியேட்டரில் முதல் ஷோ கூட்டமில்லை எனில் தூக்கப்படும். தியேட்டர் வியாபாரம் பெரிய படங்களுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு அதில் சிறிய படங்களை வெளியிடுவது படுகொலைக்கு சமம்.

பல தியேட்டரில் சைக்கிள் பார்க்கிங்கே இல்லை.. அப்புறம் சின்ன படத்தை யார் வாழ விடுவார்கள்? அன்னக்கிளி, சேது போன்ற படங்களின் காலம் பொற்காலம்” என பதிவிட்டுள்ளார்.

Seenuramasamy support Vishal in low budget movie controversy

சித்தார்த் வெளியேற்றம்.; காவேரி விவகாரத்தில் பிரகாஷ்ராஜ் இரட்டை வேஷம்.?

சித்தார்த் வெளியேற்றம்.; காவேரி விவகாரத்தில் பிரகாஷ்ராஜ் இரட்டை வேஷம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. போதுமான தண்ணீர் இல்லை என்பதால் திறந்து விடமாட்டோம் என கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது.

மேலும் கர்நாடகத்தில் உள்ள சில அமைப்புகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என பல போராட்டங்களை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் பெங்களூரில் இது தொடர்பான ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘சித்தா’ படம் கர்நாடகத்திலும் வெளியிடப்படுகிறது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் நடிகர் சித்தார்த். அப்போது அங்கே நுழைந்த காவிரி நீர் போராட்டக்காரர்கள் சித்தார்த்தை பேசவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து வெளியேற சொன்னார்கள்.

ஒரு தமிழ் படத்திற்கு இங்கே பிரமோஷன் செய்யக்கூடாது என அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே வேறு வழியின்றி சித்தார்த் பாதியில் புறப்பட்டு சென்றார்.

இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..

பல ஆண்டுகளாக திறமையற்ற அரசியல் கட்சியினரால் இந்த நிலை நீடித்து வருகிறது. இதில் கலைஞர்களை புறக்கணிக்க கூடாது என தெரிவித்துள்ளார் .

இதே கருத்தை அவர் கன்னட மொழியில் பதிவிடும்போது என் காவேரி என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். ஆனால் ஆங்கிலத்தில் பதிவு செய்யும்போது அந்த வார்த்தையை அவர் நீக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prakash raj double game in cauvery water issue

More Articles
Follows