தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உத்தமவில்லன் பட ரிலீஸ் பிரச்சினையின் போது தன்னிடம் கமலஹாசன் ரூ. 10 கோடி பணத்தை வாங்கியதாகவும் அதற்கு பதிலாக ஒரு படத்தில் நடித்து தருவதாகவும் ஒப்புக் கொண்டார் எனவும் ஆனால் இதுவரை படத்தில் நடிக்கவும் இல்லை பணத்தை திருப்பித் தரவும் இல்லை என ஞானவேல்ராஜா புகார் கூறியிருந்தார்.
ஆனால் ஞானவேல் ராஜாவின் புகாருக்கு கமல் சார்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது…
நடிகர் கமலஹாசனுக்கு ரூ.10 கோடி கடன் கொடுத்ததற்கான ஆவணங்களை தயாரிப்பாளர் ஞான வேல்ராஜா சமர்ப்பிக்க வேண்டும்.
அவர் கூறியது கடைந்தெடுத்த பொய். இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆவணம் இல்லையெனில் கமல் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும்.
மேலும் ஞானவேல் ராஜன் கூறியது பொய் என தெரிய வரும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராஜ்கமல் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.
Actor Kamal denies Taking Rs 10 Crore from Gnanavel Raja