அஜித்தை போல் அவரது பிஆர்ஓ. நட்புக்கு தரும் மரியாதையை பார்த்தீர்களா?

அஜித்தை போல் அவரது பிஆர்ஓ. நட்புக்கு தரும் மரியாதையை பார்த்தீர்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali selvaநட்புக்கு அதிகம் மதிப்பு கொடுப்பவர் நடிகர் அஜித் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

ஒரு படத்தில் கூட… எனக்கு நண்பனாக இருப்பதற்கு தகுதி தேவையில்லை. ஆனால் எதிரியாக இருப்பதற்கு தகுதி தேவை என கூறியிருப்பார்.

தற்போது இவரது பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திராவும் நட்புக்கு மரியாதை தருகின்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் செல்வா அவர்கள் தன் பெயரை கபாலி செல்வா என்று மாற்றிக் கொண்டு ரஜினியின் பிறந்த தேதியான 12.12.1950 என்ற பெயரில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குவினர் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது செல்வா அவர்கள் பேசும்போது….

நான் 40 ஆண்டு காலமாக ரஜினியின் தீவிர ரசிகன். அவரைப் போன்ற ஒரு சிறந்த மனிதரை நான் இதுவரை என் வாழ்வில் பார்த்ததே இல்லை.

இந்த படத்தில் கமல் கெட் அப்பில் நடிகர் தம்பி ராமையா வருவார். அவர் கமலை கிண்டல் செய்து, நடிக்கவில்லை.

எங்கள் தலைவர் ரஜினி யாரையும் மதிக்காமல் இருக்க மாட்டார். அவர் வழியில் வந்த நான் மட்டும் எப்படி மதிக்காமல் இருப்பேன்.

நீங்கள் படம் பார்க்கும்போது தம்பி ராமையா கேரக்டர் பற்றி தெரியும்.

இப்படத்தில் சிறையில் இருக்கும் கைதி, வெளியே பரோலில் வந்து தலைவர் ரஜினி படம் பார்க்க ஆசைப்படுகிறார். அதுதான் இந்த ஒன்லைன் கதை.

இங்கே என் நண்பர் சுரேஷ் சந்திரா இருக்கிறார். அந்த பெயரில் உள்ள சந்திரா நான்தான்.

நாங்கள் முதலில் இணைந்து செயல்பட்டோம். அதன்பின்னர்தான் நான் நடிப்புத் துறையில் ஈடுப்பட்டேன்.

அவர் இப்போது வரை தன் பெயரை மாற்றாமல் நட்புக்கு மரியாதை கொடுத்து அந்த பெயரை நீக்காமல் வைத்துள்ளார்.” என்று பேசினார்.

சிம்பு என் தலைவர்; ஆனால் அவர் மாறவேண்டும்.. மெட்ரோ சிரிஷ்

சிம்பு என் தலைவர்; ஆனால் அவர் மாறவேண்டும்.. மெட்ரோ சிரிஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

metro shirish and simbuமெட்ரோ என்ற படத்தில் நடித்து தமிழக ரசிகர்களின் அன்பை பெற்றவர் நடிகர் சிரிஷ்.

இவர் நடிகர் சிம்பு பற்றி ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அண்மையில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தயாரிப்பாளர் சிம்பு மீது சரமாரி புகார்களை கூறினார்.

இந்த புகார் குறித்தும் சிரிஷ் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

ஒரு சில சம்பவத்தால் நாம் ஒருவரை தவறாக நினைக்க முடியாது. ஆனால் தற்போது என்ன கூறப்பட்டுள்ளதோ அது கேட்க வருத்தமாக இருக்கிறது.

என் தலைவருக்கு ஒரு வேண்டுகோள் இதுபோன்ற செயல்களை மாற்ற வேண்டும். என்ன நடந்தாலும் சரி நான் உங்களின் தீவிர ரசிகன்” என ட்வீட் செய்துள்ளார்.

Metro Shirish‏ @actor_shirish

Situations make ppl take actions in a certain way. We can’t completely judge some1 based on those actions. But if wht s said s true, I would humbly request my Thalaivar 2 change this way of being, as his die hard fan.No matter what,I hav been n wil always b yr die hard fan! #STR

ஆர்கே. நகர் அப்டேட்ஸ்: ஜெ. அண்ணன் மகள் தீபா-விஷால் மனுக்கள் நிராகரிப்பு

ஆர்கே. நகர் அப்டேட்ஸ்: ஜெ. அண்ணன் மகள் தீபா-விஷால் மனுக்கள் நிராகரிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

deepa and vishalஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

31 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தினகரன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

சுயேட்சைகள் பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதில் விஷாலின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என அதிமுக, திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

விஷால் மனுவில் கணக்கு, உறுதிமொழி சரியாக இல்லை என புகார் கூறினார்.

இதனையடுத்து விஷாலின் வேட்புமனு பரிசீலனை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. அவரது வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

போலி கையெழுத்துகளுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததால் விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை பாய உள்ளதாக கூறப்படுகிறது.

இவரைப் போல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். அவரது வேட்புமனுவில் பல படிவங்கள் நிரப்பப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் ஞானவேல்ராஜா திடீர் ராஜினாமா

தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் ஞானவேல்ராஜா திடீர் ராஜினாமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer gnanavel rajaசூர்யா மற்றும் கார்த்தி நடித்த பல படங்களை தயாரித்தவர் ஸ்டூடீயோ க்ரீன் நிறுவனர் ஞானவேல்ராஜா.

இவர் விஷால் தலைமையிலான அணியில் போட்டியிட்டு, வெற்றிப் பெற்று தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் ஆனார்.

இந்நிலையில் இவர் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஏனென்றால், சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள் வேறு திரைப்பட துறை சார்ந்த சங்கங்களில் நிர்வாக பதவிகளில் இருக்க கூடாது என்பது சங்க விதிமுறையாகும்.

அதனால் தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் பதவியை

ஞானவேல்ராஜா ராஜினாமா செய்திருக்கிறாராம்.

சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தலைவர் பொறுப்புக்கு தற்போதைய தலைவர் அருள்பதியை எதிர்த்து ஞானவேல்ராஜா போட்டியிடுகிறார்.

சந்தானம் படத்தில் இசையமைப்பாளர் சிம்பு; யாருக்கு அதிக சம்பளம்..?

சந்தானம் படத்தில் இசையமைப்பாளர் சிம்பு; யாருக்கு அதிக சம்பளம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VTV Ganesh reveals Simbu or Santhanam Who got bigger salaryசேதுராமன் இயக்கத்தில் விடிவி கணேஷ் தயாரித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா.

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சிம்பு.

இப்படத்தின் பாடல்களை நாளை தனுஷ் வெளியிட பிரம்மாண்ட முறையில் இந்த விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று சந்தானம், ரோபோ சங்கர் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது விடிவி கணேஷிடம் பேசும்போது…

சிம்பு மிகப்பெரிய நடிகர். அவர் எங்கள் படத்தில் இசையமைக்க ஒப்புக் கொண்டது மகிழ்ச்சி.

ஆனால் அவருக்கு படத்தின் ஹீரோ சந்தானத்தை விட குறைவான சம்பளம்தான் கொடுத்தேன்.” என்று தெரிவித்தார்.

VTV Ganesh reveals Simbu or Santhanam Who got bigger salary

விஜய்-சூர்யா படங்கள் மாபெரும் சாதனை; ட்விட்டர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்-சூர்யா படங்கள் மாபெரும் சாதனை; ட்விட்டர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay suriya2017 ஆண்டின் கோல்டன் தருணங்கள் என்ற பட்டியலை ட்விட்டர் தளம் வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய ட்விட்டர் பயனானிகள் அதிகம் விவாதித்த விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழில் மெர்சல் படத்துக்கு முதன்முதலாக ட்விட்டர் இமோஜி என்கிற ட்விட்டர் சின்னம் கிடைத்தது.

இது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது என்றும், அதன் மூலம் மூன்று நாட்களில் 1.7 மில்லியன் ட்வீட்டுகள் பதிவேற்றப்பட்டன என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இதனால் #Mersal என்ற ஹாஷ்டாக், இந்த வருடத்தின் முதன்மை ஹாஷ்டாக் ட்ரெண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டரை தனது பக்கத்தில் வெளியிட்டார் சூர்யா.

இது கோல்டன் ட்வீட் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. 2017, இந்தியாவில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் இது. மொத்தம் 68,856 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.

Mersal and Thaana Serndha Kootam movies made record in Twitter 2017

More Articles
Follows