தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி நடிகர் ஜெய், இரவு பார்ட்டியை முடித்துவிட்டு போதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது அந்த கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதுசம்பந்தமாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஜெய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
அதாவது காரை வேகமாக ஓட்டுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதன் பின்னர் கைது செய்யப்பட்ட ஜெய் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் நடிகர் ஜெய் இன்று ஆஜராக வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் அவர் ,இன்று ஆஜராகவில்லை.
அவர் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்த 2 நாட்களுக்குள் நடிகர் ஜெய்யை கைது செய்து ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான வழக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Actor Jai must be arrested within two days Court Order