ஐபிஎல்-ல ரசிக்க போறியா.? தமிழன்னு உரக்க சொல்லப் போறியா.? ஜிவி பிரகாஷ்

ஐபிஎல்-ல ரசிக்க போறியா.? தமிழன்னு உரக்க சொல்லப் போறியா.? ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor GV Prakash statement against IPL in Chennai todayகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகமே கொந்தளித்துள்ள நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியால் மக்களை திசை திருப்பக் கூடாது என பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் திட்டமிட்டபடி போட்டிகள் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

ஆனால் காண செல்லும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜி.வி. பிரகாஷ்,

“அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்ல முடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?

தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..?” என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Actor GV Prakash statement against IPL in Chennai today

சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வர பிள்ளையார் சுழி போடும் ஏரோக்ஸ்

சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வர பிள்ளையார் சுழி போடும் ஏரோக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Cinema Strike will come to end soon because of Aerox agreement with TFPCகியூப், யூ.எஃப்.ஓ என டிஜிட்டல் சினிமா சர்வீஸ் புரொவைடர்கள் வசூலிக்கும் வி.பி.எஃப் கட்டணத்தைக் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வைத்தனர்.

இதனால் கடந்த மார்ச் 1ஆம் தேதி (இன்று வரை 40 நாட்கள்) முதல் எந்த ஒரு தமிழ் படத்தையும் தயாரிப்பாளர்கள் வெளியிடவில்லை.

இதனால் பழைய படங்களை தியேட்டர்களில் திரையிட்டு வந்தனர் திரையரங்க உரிமையாளர்கள்.

இதனையடுத்து தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்களை கையில் வைத்திருக்கக்கூடிய கியூப் நிறுவனம் 18- 23% வரை வி,பி.எஃப் கட்டணத்தில் குறைக்க பேச்சுவார்த்தையில் இறங்கி வந்தனர்.

ஆனால் இன்னும் தள்ளுபடி வேண்டும் என்ற சூழ்நிலையில் போராட்டம் வேலை நிறுத்தமாகத் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மற்றொரு டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர் நிறுவனமான ஏரோக்ஸ் டிஜிட்டல் சினிமாஸ் (Aerox digital Cinemas) நிறுவனம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தில் 50% க்கும் குறைந்தளவில் வி.பி.எஃப் ஆக வசூலித்துக்கொள்ள தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிகழ்வு முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. இதனால் விரைவில் சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வரும் சூழ்நிலை ஆரம்பமாகி வருகிறது.

உயரிய தொழில்நுட்பமான டி.சி.ஐ அந்தஸ்து (DCI approval) பெற்றது இந்த ஏரோக்ஸ் நிறுவனம்.

மேலும் கடந்த 3 வருடங்களாக தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கியூப் , யு,எஃப்.ஓ அல்லாத சில தியேட்டர்களை ஏரோக்ஸ் நிறுவனம் தன் கைவசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema Strike will come to end soon because of Aerox agreement with TFPC

தமிழிசை பயப்பட வேண்டாம்; அரசியலுக்கு வரமாட்டேன்…; சத்யராஜ் சபதம்

தமிழிசை பயப்பட வேண்டாம்; அரசியலுக்கு வரமாட்டேன்…; சத்யராஜ் சபதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I wont enter into politics So Tamilisai no need to fear says Sathyarajகாவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று நடிகர் சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், இயக்குநர் அமீர், இயக்குநர் வ.கவுதமன் உள்ளிட்டவர்கள் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பாரதிராஜா,

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை தொடங்கியுள்ளேன்.

இந்த பேரவைக்கு எந்த அரசியல் அடையாளமும் கிடையாது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள்.

ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக முதலமைச்சர் கூறினார். ஐபிஎல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.

ஆனால் காவிரி போராட்டத்தை திசைத்திருப்பவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் உள்ளது என்றார்.

சத்யராஜ் பேசும்போது,

நடிகர்கள் களத்தில் இறங்கி போராட முடியாது, அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை, ஆனால் தமிழகத்தில் வாழும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

தமிழிசை என்னை பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை, என்னிடம் அரசியல் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை.

என் வீட்டுக்கு ஐடி ரெய்டு வந்தால் பயப்படாமல் இருப்பீர்களா? என்று கேட்டுள்ளார். வருமான வரித்துறை வந்தாலும் என்னிடம் ஒன்றும் தேறாது.

காவிரி பிரச்னை தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம். போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி நடக்கிறது” என்றார்.

I wont enter into politics So Tamilisai no need to fear says Sathyaraj

காளி படத்தை ரிலீஸ் செய்ய விஜய்ஆண்டனிக்கு ஐகோர்ட் நிபந்தனை

காளி படத்தை ரிலீஸ் செய்ய விஜய்ஆண்டனிக்கு ஐகோர்ட் நிபந்தனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

High court condition for Vijay Antonys Kaali movie releaseஇசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் காளி. இப்படத்தை உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கியுள்ளார்.

இப்படத்தை ரீலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜய் ஆண்டனி நடித்து வெளியான அண்ணாதுரை படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் உரிமையாளர் அலெக்சாண்டர் வாங்கி ரீலீஸ் செய்தார்.

படம் நன்றாக வந்துள்ளது என விஜய் ஆண்டனி கூறியதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார். படம் ரீலீஸ் ஆகும் நாள் வரைபடத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு விஐய் ஆண்டனி கூறிய படி அண்ணாதுரை படத்தை திரையிட்டு காண்பிக்கவில்லை.

முதல் மூன்று நாட்களில் அண்ணாதுரை படத்திற்கு சுமாரான வசூல் இருந்தது. திரையிட்ட தியேட்டர்களில் முதல் வாரமே படத்தை எடுத்து விட்டு வேறுபடத்தை திரையிட்டனர்.

இதனால் அண்ணாதுரை படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை வாங்கி வெளியிட்ட பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளர் அலெக்சாண்டர் அவர்களுக்கு 4 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது..

படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியிடம் இது சம்பந்தமாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

அதற்கு மாற்றாக விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வரும் காளி படத்தை
குறைந்த விலைக்கு தருகிறேன். அதை விற்பனை செய்து கடனை அடைத்துக் கொள்ளுங்கள் என விஜய் ஆண்டனியும் அவரது மனைவி பாத்திமாவும் கூறியுள்ளார்கள்

அதற்கு உடன்பட்ட பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளர் அலெக்சாண்டர் ஐம்பது லட்ச ரூபாய் அட்வான் ஸ்கொடுத்து அக்ரிமெண்ட் போட்டு உள்ளார்.

எதிர்பாராத விதமாக திரையுலகில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி நடை பெற்று வருவதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் புதிய படங்களை வாங்க தயக்கம் காட்டியதால் காளி படத்திற்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகையை பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளர் அலெக்சாண்டரால் உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை.

ஒப்பந்தபடி பாக்கித் தொகை செலுத்த தவறியதால் காளி படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாக விஜய் ஆண்டனி கடிதம் அனுப்பினார்.

அண்ணாதுரை படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை கேட்டு போன போது காளி படத்தை கட்டாயப்படுத்தி எங்களை வாங்க வைத்தது விஜய் ஆண்டனியும், அவரது மனைவியும்தான்.

இப்போது ஒப்பந்தத்தை காரணம் காட்டி அண்ணாதுரை படத்தில் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஒப்புக் கொண்டபடி கொடுக்காமல் ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

எனவே எனக்கு அண்ணாதுரை படம் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை கொடுத்து விட்டு காளி படத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்குமாறு நீதி மன்றத்தில் அலெக்சாண்டர் வழக்கு தொடுத்தார்.

வரும் ஏப்ரல் 11க்குள் 4 கோடியே 73 லட்சத்தை அலெக்சாண்டர் அவர்களுக்காக நீதிமன்றத்தின் விஜய் ஆண்டனி செலுத்தி விட்டு காளி படத்தை ரீலீஸ் செய்ய வேண்டும்.

இல்லை எனில் படத்திற்கான தடை தொடரும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

High court condition for Vijay Antonys Kaali movie release

இட்லி தயாரிப்பாளர் உருவாக்கும் A ஸ்டோரி வெப் சீரிஸ்

இட்லி தயாரிப்பாளர் உருவாக்கும் A ஸ்டோரி வெப் சீரிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Web series movie A Story release in You tube soonசினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.

இனிவரும் காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி.

அந்தவகையில் ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது.

நிமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா என்பவர் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இயக்குனர் நிமேஷ் ‘மல்லி’ என்ற குறும்படத்திற்காக மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அப்பு மூவிஸ்’ நிறுவனம் சார்பில் பாபு தூயவன் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளார்.

இந்த நிறுவனம் ஏற்கனவே நட்டி நடராஜ் நடித்த கதம் கதம் மற்றும் இட்லி ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ‘அப்பு மூவிஸ்’ எனும் யுடியூப் சேனலை தொடங்கி, தமிழ் சினிமாவின் வியாபாரம் பற்றிய தகவல்களை இயக்குனர் கேபிள் சங்கர் அவர்கள் மூலம் அளித்திருந்தனர்.

இந்த சேனலின் கிரியேட்டிவ் ஹெட் – கேபிள் சங்கர். அதுமட்டுமில்லாமல் ஜோதிடம், ஸ்டாண்டப் காமெடி, ஷாட் பிலிம்ஸ், சமையல் நிகழ்ச்சிகள் என பலவிதமான விடீயோக்களை அளித்திருந்தனர்.

தற்போது முதன் முறையாக ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற இந்த வெப் சீரிஸை தயாரிக்கின்றனர்.

இந்த வெப் சீரிஸிற்கு ஹரி இசையமைத்துள்ளார். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, பிரவீன் பாஸ்கர் என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார். திலக் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.

’பெண் என்பவள் கடவுள் வரைந்ததிலேயே அழகான ஓவியம்’, ‘செக்ஸ் என்பது கலை’ மற்றும் ‘தைரியமான … சொல்லப்படாத கதை’ என அடுத்தடுத்து இதன் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், நேற்று வெளியான டிரைலரும் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விரைவில் ‘எ ஸ்டோரி’ (A Story) வெப் சீரிஸ் ‘அப்பு மூவிஸ்’ யுடியூப் சேனலில் வெளியாகவிருக்கிறது.

Web series movie A Story release in You tube soon

https://www.filmistreet.com/video/a-story/

அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை ஆர்யா துவக்கி வைத்தார்

அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை ஆர்யா துவக்கி வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arya launches Actor Ajay Ratnams badminton clubசினிமா கலைஞர்கள் சினமாவை தவிர விளையாட்டு துறையிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அஜெய்ரத்னினமும் விளையாட்டு துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

அவர் தற்போது அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் எனும் இடத்தில் வி ஸ்கொயர் என்ற பேட்மிடன் அகாடமியை தொடங்கி இருக்கிறார்.

அதன் திறப்புவிழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

விழாவில் அஜெய்ரத்னம் மற்றும் அவரது மகன்களான தீரஜ்விஷ்ணு ரத்னம், விஷ்வேஷ் ரத்னம் ஆகியோரும் பங்குபெற்றனர்.

Arya launches Actor Ajay Ratnams badminton club

arya ajay ratnam

More Articles
Follows