தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோவை மாவட்டத்தை சேர்ந்த சத்யராஜ் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வில்லனாக உயர்ந்தார் .
அதன் பின்னர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக வளர்ந்து 100க்கும் மேற்பட்ட படங்களின் நடித்துள்ளார்.
தற்போது சத்யராஜின் மகன் சிபிராஜும் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். சத்யராஜின் மகள் திவ்யா டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பின் காரணமாக காலமானார். நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர். வயது 94.
சிபி நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தில் சத்யராஜ் தயாரித்திருந்தார். இந்த பட நிறுவனத்திற்கு நாதாம்பாள் என்று பெயரிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் கோவையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இன்று ஆகஸ்ட் 11 (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
தாயார் மறைவு செய்தியறிந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் கோவை விரைந்துள்ளார்.
Actor Sathyarajs mother passes away