தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் தயாரித்த திரைப்படம் ‘டக்கர்’.
கார்த்திக் ஜி கிஷோர் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த், திவ்யா ஷான், யோகி பாபு, அபிமன்யு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இன்று மே 30ஆம் தேதி செய்தியாளர்களை படக்குழுவினர் சென்னை பிரசாத் லேபில் சந்தித்தனர்.
அப்போது நடிகர் சித்தார்த்த பேசும் போது…
“கொரோனா காலகட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
பெரும்பாலும் என்னிடம் கதை சொல்லும் இயக்குனர்கள் ஐந்து ஃபைட் இருக்கு என்பார்கள். ஆனால் ஷூட்டிங் செல்ல செல்ல இரண்டு பைட் மூன்று பாடல் மட்டுமே இருக்கும்.
ஆனால் இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் கதை சொல்லும் போது ஐந்து ஃபைட் நிச்சயம் இடம்பெறும். இது முழுக்க ஆக்ஷன் திரைப்படம் என்றார்.
ஒரு கோபக்கார இளைஞனின் கதைதான் இந்த படம். ஒரு இளைஞனுக்கு எதற்கு கோபம் வர வேண்டும்? அவன் பணக்காரன் ஆக வேண்டும் என நினைப்பான். ஆனால் ஆக முடியவில்லை. இதனால் அவன் கோபம் அதிகரிக்கிறது.
இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள திவ்யா இந்த படத்திற்கு பிறகு பெரும் பெயரை பெறுவார். அவர் டக்கர் டீசரில் பேசிய வசனம் இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
யோகி பாபு இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த படத்தில் அவரது காமெடி பெரிய அளவில் பேசப்படும். தற்போது சினிமாவை தவிர பலவிதமான பொழுதுபோக்குகள் மக்களுக்கு உள்ளன.
அதன் இடையில் இந்த படத்தின் பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக இது தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இருக்காது.
திரையரங்குகளில் ஜூன் 9ஆம் தேதி டக்கர் படம் ரிலீஸ் ஆகிறது. டக்கர் என்றால் சூப்பர். டாப் டக்கர் என்றால் ரொம்ப சூப்பர் என்பார்கள். இந்தப் படத்தில் டக்கர் என்பது மோதலை குறிக்கும் சொல்லாகும்.
இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக நிறைய அடி வாங்கி இருக்கிறேன். ஒரு கட்டத்தில் என்னுடைய காட்சிகளை பார்க்கும்போது நானே என்னை பாராட்டி கொண்டேன். எனக்கே வியப்பாக இருந்தது”
இவ்வாறு பேசினார் நடிகர் சித்தார்த்.
I appreciates myself says Siddharth at Takkar Trailer Launch