தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஆகஸ்டில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் ‘லைகர்’.
அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
ரூ.100 கோடிக்கு அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரிய நஷ்டத்தை அடைந்தது. இதனால் இயக்குனர் பூரி ஜெகந்நாத்தை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்தனர்.
தற்போது வெற்றியை நோக்கி பயணிக்க தயாராகி வருகிறார் பூரி ஜெகந்நாத்.
இவர் புதிய படத்திற்கான ஸ்கிரிப்டை ரெடி செய்யுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானிடம் அந்த கதையை பூரி ஜெகந்நாத் சொன்னதாகவும், அவரும் ஓகே சொன்னதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
எனவே விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நாம் எதிர்ப்பார்க்கலாம்..