தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றது.
எனவே கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு நிதி வழங்குமாறு முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனவே பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் ரூ.1 கோடியை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்…
“இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.
நாடார் பேரவை, நாடார் சங்கங்கள் சார்பாக 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அளித்துள்ளோம்.
எம் ஜி ஆர் , ஜெயலலிதா நினைவிடங்கள் போல் காமராஜர் நினைவிடமும் புதுப்பொலிவு பெற வேண்டும்” என்றார் எர்ணாவூர் நாராயணன்.
Ernavur Narayanan donated Rs 1 crore to CM corona relief fund