தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவின் முக்கியமான வில்லன்களில் இருவர் பிரகாஷ் ராஜ் மற்றும் மன்சூர் அலிகான். இவர்கள் இருவரும் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில் யார் அதிகம் வாக்குகள் பெற்றார் என்று பார்ப்போம்…
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை சம்பவத்தை அடுத்து பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
இதனையடுத்து அவர் திடீரென மக்களை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் 28,906 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார் பிரகாஷ் ராஜ்.
இவரைப்போல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டார் நடிகர் மன்சூரலிகான்.
இவரின் பிரச்சாரம் வித்தியாசமாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது மீன் வெட்டுவது, ஓட்டலில் டீ போடுவது, பரோட்டா போடுவது என மக்களை கவர்ந்து வாக்குகளை சேகரித்தார்.
அதன்படி தேர்தலில் நான்காவது இடம் பெற்ற மன்சூரலிகான், 54,957 ஓட்டுகள் பெற்றுள்ளார்.
அந்த வகையில் பிரகாஷ்ராஜை விட அதிகப்படியான ஓட்டுகளை பெற்றுள்ளார் மன்சூரலிகான் என்பது குறிப்பிடத்தக்கது.