தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பல புதுப்படங்கள் வெளியானாலும். பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம் நடிகை ஸ்ரீ ரெட்டியின் புகார்கள்தான்.
இவர் அண்மையில் முன்னணி நடிகரான பவன்கல்யாண் பற்றியும், அவரது அம்மா பற்றியும் அசிங்கமாகப் பேசியிருந்தார்.
அவரை அப்படி பேச வைத்தது நான்தான் என இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
தன்னுடைய அம்மாவைப் பற்றி அவதூறாகப் பேசியது மன்னிக்க முடியாதது என அதுபற்றி செய்தி ஒளிபரப்பிய சேனல்களைப் புறக்கணிக்கும்படி கேட்டுக் கொண்டார் பவர் ஸ்டார் பவன்கல்யாண்.
தற்போது இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இனி தெலுங்கு செய்தி சேனல்களுக்கு சினிமா சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சியையும் வழங்கக் கூடாதென முக்கிய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பெரும்பாலான செய்தி சேனல்கள்தான் சினிமா விளம்பரங்களால் நல்ல வருமானத்தை ஈன்று வருகின்றன.
தங்களிடம் வருமானத்தையும் வாங்கிக் கொண்டு திரையுலகத்தைச் சார்ந்தவர்களை தரக் குறைவாக விமர்சிப்பது சரியல்ல என தயாரிப்பாளர்கள் தரப்பு கடுப்பில் உள்ளதாம்.