தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தமிழகமே கொந்தளித்துள்ள நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியால் மக்களை திசை திருப்பக் கூடாது என பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் திட்டமிட்டபடி போட்டிகள் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.
ஆனால் காண செல்லும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜி.வி. பிரகாஷ்,
“அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்ல முடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?
தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..?” என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Actor GV Prakash statement against IPL in Chennai today