தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் தன் சினிமா பயணத்தை ஆரம்பித்து 6 வருடங்களே ஆகிறது. இதில் இதுவரை 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
அவரின் அசாத்திய திறமையால் இன்று முன்னணி நடிகர்களின் வரிசையில் அவரின் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்க தற்போது தயாரிப்பாளராகி விட்டார்.
அவரது சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற சொந்த பேனரில் தயாரிக்கும் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.
இவர் ரஜினியின் கபாலி படத்தில் இடம் பெற்ற நெருப்புடா என்ற பாடலை எழுதி பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இயக்கவுள்ள இந்த படத்த்தில் சத்யராஜ் மற்றும் இளவரசு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
இந்த படத்தின் சூட்டிங் இன்று காலை லால்குடியில் தொடங்கியுள்ளது.
இந்த தகவல்களை சிவகார்த்திகேயனின் நண்பரான தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.