அதிசய நாணயம்… பூச்சாண்டி விமர்சனம் 3.25/5

அதிசய நாணயம்… பூச்சாண்டி விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

நம் அம்மாக்கள் குழந்தைக்கு சோறு ஊட்டும் போது பூச்சாண்டி கிட்ட புடிச்சி கொடுத்துடுவேன் என பயமுறுத்தி உணவளிப்பார்கள்.. ஆனால் பூச்சாண்டி என்றால் யார்? என்றே நமக்கே தெரியாது. ஆனால் நம்முடைய முன்னோர்கள் அதற்கான காரணத்தை வைத்திருப்பார்கள். அது என்ன என பூச்சாண்டிக்கு அழகான விளக்கம் கொடுத்து நம்மை அசர வைத்துள்ளனர்.

மதுரையில் இருந்து மலேசியா நோக்கி கதை நகர்கிறது. படத்தின் கதை முழுவதும் மலேசியாவில் மலேசிய மக்களுடன் படமாக்கப்பட்டுள்ளது.

கதைக்களம்..

சங்க கால வரலாறுகளை தெரிந்துக் கொள்வதிலும் ஆர்வம் உள்ளவர் முருகன். மேலும் அமானுஷ்ய சக்திகளை பற்றி அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் மலேசியா மக்களை சந்திக்கிறார்.

அங்கு சங்கர் என்பவரை சந்தித்து அவர் சந்தித்த அமானுஷ்யத்தை பற்றி கேட்கிறார். சங்கர் தனது நண்பர்கள் அன்பு மற்றும் குருவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கிறார்.

அதில்… நாங்கள் ஆவியுடன் பேச ஒரு முறை முயற்சித்தோம். சங்க கால நாணயத்தை வைத்து எங்கள் விளையாட்டை ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் விளையாட்டு விபரீதமாகி அந்த மல்லிகா ஆவி எங்கள் நண்பன் குருவை கொன்றுவிட்டது.

அந்த நாணயம்தான் எங்கள் வாழ்க்கையில் விளையாடியது. எனவே அந்த நாணயம் ரகசியம் தெரிய வேண்டும். அப்படி என்றால் நாங்கள் மல்லிகாவின் மரணத்திற்கு யார்? காரணம் என்பதை அறிய வேண்டும் என்கின்றனர் மற்ற நண்பர்கள்..

அதன்படி முருகனுடன் இணைந்து சங்கர் அன்பு ஆகிய மூவரும் ஆவியின் உண்மைகளை கண்டறிய முற்படுகின்றனர்.

அதன்பின்னர் என்ன ஆனது? ஆவி யார்? அதை குருவை கொல்ல என்ன காரணம்.? யார் அந்த மல்லிகா? அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது.? என்பதே இந்த பூச்சாண்டியின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

முருகனாக மிர்ச்சி ரமணா நடித்துள்ளார். இவர் மட்டும்தான் மதுரையை சேர்ந்தவர். மற்ற நடிகர்கள் அனைவரும் மலேசியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் நாம் தினம் பார்க்கும் நண்பர்களை போல யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஆவியுடன் பேசும்போது கலகலப்பாக தொடங்கி பின்னர் திகிலாக மாறும்போது நம்மையும் சீட் நுனிக்கே கொண்டு வந்துள்ளனர்.

தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் மூவரும் நண்பர்களாக நடித்துள்ளனர்.

சங்கர் கேரக்டரில் நடித்தவர் (தினேஷ்) சபாஷ் போட வைத்துள்ளார். உயிர் நண்பனை இழந்துவிட்ட சோகத்தை உணர்ந்து நடித்திக்கிறார். அதே சமயம் உயிருடன் இருக்கும்போது அவரை கலாய்ப்பதிலும் குறையில்லை. அதுபோல் மல்லிகாவின் கணவனுடன் நண்பனுக்காக சண்டை போடுவதிலும் கைத்தட்டல் பெறுகிறார்.

மாற்றுத் திறனாளியான லோகன் நாதன். நீங்க எல்லாம் ஒரு நாள் எங்களை போல வாழ முடியுமா?. மலம் கழிக்க கூட அடுத்தவரை நாங்கள் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. எழுந்து நடந்துவிட மாட்டோமா? என ஏங்குகிறோம் என பேசும்போது நம்மை அறியாமல் கண்கள் குளமாகும். க்ளைமாக்ஸில் இவரது ட்விஸ்ட் ஹைலைட்.

மல்லிகா வேடத்தில் வரும் ஹம்சினி பெருமாள் கொஞ்சம் நேரமே என்றாலும் கேரக்டரின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் ஒரு காட்சியில் சொல்லப்படுவது போலவே சில காட்சிகளில் சமந்தாவின் சாயலில் உள்ளார்.

டெக்னிஷியன்கள்…

பேய் படங்களுக்கு பாடல்கள் தேவையில்லை என்பதை உணர்ந்து இருக்கிறார் டைரக்டர். அதே சமயம் க்ளைமாக்ஸில் புரோமோ சாங் வைத்து படத்தின் உயிரோட்டத்தை சொல்லியிருப்பது சிறப்பு. இசையமைப்பாளர் டஸ்டின் ரிதுவன் ஷா தன் பணியில் பாராட்டைப் பெறுகிறார்.

அசல் இஸம் பின் முகமது அலியின் ஒளிப்பதிவு படத்தின் பலம். மலேசிய அழகையும் இருளையும் காட்டியிருப்பது சிறப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் இன்னும் கவனம் செலுத்தி படமாக்கியிருக்கலாம்.

சங்க கால நாணயம் முதன்முறையாக மல்லிகாவின் கையில் கிடைக்கும்போது ஏதோ கீழே போட்டு எடுத்தது போல உள்ளது. மண் கிடந்த நாணயம் கரை கூட இல்லாமல் போனது ஏனோ..?

அதே சமயம் ஒரு நாணயத்தில் உள்ள வரைப்படங்கள் குறித்து முருகனின் அப்பா பேசும் வசனங்கள் ஆச்சரியப்பட வைக்கிறது.

வழக்கமான பேய் படமாக இல்லாமல் ராஜேந்திர சோழன் மற்றும் களப்பிரர் ஆட்சிக் காலத்தையும் நமக்கு புரியும் படி சொல்லிருப்பது இயக்குனர் ஜேகே விக்கியின் நல்லதொரு முயற்சி.

ஒரு சின்ன பட்ஜெட்டில் அமானுஷ்ய சக்திகளின் நிராசைகளை சொல்லிய விதம் அருமை.

இந்த படம் மலேசியாவில் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. விரைவில் தமிழ்நாட்டிலும் காணலாம்.

ஆக.. இந்த பூச்சாண்டி பார்க்க தகுந்தவன் தான்.

Poochandi movie review and rating in Tamil

FIRST ON NET கலையாத கனவுகள்… கார்பன் விமர்சனம் 3.75/5

FIRST ON NET கலையாத கனவுகள்… கார்பன் விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்ணாதுரை படத்தை இயக்கிய சீனிவாசன் இந்த கார்பன் படத்தை இயக்கியுள்ளார். ஜோதி முருகன் – பாக்கியலட்சுமி இணைந்து தயாரித்துள்ளனர். இது விதார்த்தின் 25வது படமாகும்.

ஒன்லைன்..

CARBON என்பது நாம் எழுதியவற்றின் நகல் ஆகும். இதில் நாயகன் காண்கின்ற கனவுகள் அப்படியே நிஜமாக நடக்கிறது.

கதைக்களம்..

அம்மாவை இழந்தவர் விதார்த். இவரின் அப்பா மாரிமுத்து. ஒரு பிரச்சினையில் அப்பா மகன் இருவரும் பேசிக் கொள்வதில்லை. ஒரு நாள் இவரின் அப்பா ஒரு காரில் அடிப்படுவதாக கனவு காண்கிறார்.

அந்த விபத்தை தடுக்க நினைப்பதற்குள் அது நடக்கிறது. இதனால் தந்தை நினைவிழந்து போகிறார், இதனால் விபத்திற்கான காரணம் தெரியாமல் தவிக்கிறார் விதார்த். தந்தையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ரூ. 10 லட்சம் தேவைப்படுகிறது.

அப்படி என்றால் அந்த கனவில் விபத்தை நிகழ்த்தியவர் யார்? என தெரிந்ததா,? அது தற்செயலாக நடந்த விபத்தா.? ப்ளான் செய்யப்பட்ட விபத்தா.? 10 லட்சம் கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் விதார்த்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அண்மையில் வெளியான அன்பறிவு படத்தில் இவரது வில்லன் கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் நம்மை கவர்கிறார்.

பல படங்களில் நாயகியின் தோழியாக வருவார் தன்யா. ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் காலேஜ் தோழியாக வருவாரே அவரேதான். கதையின் தேவையை உணர்ந்து தாராள நடிப்பை தந்துள்ளார் தன்யா.

இடைவேளையில் தான் அறிமுகமாகிறார். க்ளைமாக்ஸ் வரை தெறிக்கவிட்டுள்ளார் தன்யா. சுடிதாரிலும் செம.. பனியன் போட்ட மாடர்ன் டிரெஸிலும் செம. எங்கேம்மா இருந்தீங்க தன்யா இவ்வளவு நாளா..? கண்களிலே கனிவையும் மிரட்டலையும் கொடுத்திருப்பது வேற லெவல்.

பல படங்களில் போலீஸ் ஆக மிரட்டியிருப்பார் மாரிமுத்து. இதில் அன்பான நேர்மையான பாசமான அப்பாவாக மிரட்டியிருக்கிறார். தன் மகன் விதார்த் வேலைக்கு செல்லும் முதல்நாள்.. பேச சொல்லி கெஞ்சுவது சூப்பர் சார்.

இரண்டுவில்லன்கள் இருந்தாலும் பெரிதாக வேலையில்லை.

போலீசாக வரும் மூனார் ரமேஷ் அசத்தல். இவர் இடம் மாறும் காட்சிகள் படத்தின் ஹைலைட் ட்விஸ்ட். வார்டு பாய் வினோத் சாகரும் சிறப்பு.

மறைந்த நடிகர் நித்தீஷ் வீரா, வெங்கட் உள்ளிட்டோர் சில காட்சிகளில் வந்துள்ளனர். இவர்களின் மரணம் நம் கண்முன்னே வந்து செல்கிறது.

சின்ன சின்ன கேரக்டர்களில் வருபவர்கள் அசத்தல்.. பிச்சைக்காரன் மூர்த்தி, ஆயா அம்மா, பூக்கார பெண், இளநீர் வியாபாரி, பார்வையற்ற சிறுமி ஆகியோர் பாராட்டும்படியான நடிப்பை கொடுத்துள்ளனர்.

டெக்னிஷியன்கள்…

சாம் சிஎஸ் இசையில் பின்னணி இசை சிறப்பு. டூயல் பாடல் ஓகே ரகம். மற்ற பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை.

ஒளிப்பதிவில் குறையில்லாமல் படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்தம் சந்தோஷம். எடிட்டர் பிரவீன் கேஎல் தன் பணியில் கச்சிதம்.

ஒரு வித்தியாசமான கதையை விருந்தாக்கியுள்ளார் இயக்குனர். நாயகியை இடைவேளையில் காட்டுகிறார். இதற்கே ஒரு தைரியம் வேண்டும்.

கனவு… திரும்ப திரும்ப வரும் காட்சிகள்.. என ஓரிரு காட்சிகள் மாநாடு படத்தை நினைவுப்படுத்துகிறது.

கலைந்த கனவு ஒன்று மீண்டும் மீண்டும் வருமா? எனத் தெரியவில்லை. அதே சமயம் க்ளைமாக்ஸில் நாயகி ஒரேடியாக மனசு மாறுவது நம்பும்படியாக இல்லை.

அதுபோல் செக்யூரிட்டி, டவுட் செந்தில், இளநீர் வியாபாரி, பார்வையிழந்த சிறுமி செய்யும் க்ளைமாக்ஸ் காட்சிகளை இன்னும் நம்பும்படியாக எடுத்திருக்கலாம். ஆனால் க்ளைமாக்ஸ் சமயத்தில் போலீஸ், சிசிடிவி காட்சிகள், ட்விஸ்ட் அனைத்தையும் எதிர்பாராத ஒன்று. வேற லெவல் திக்கிங் சீனிவாசன்.

ஆக.. இந்த கார்பன் நமக்கு ஒரு பொங்கல் விருந்து..

Carbon movie review and rating in tamil

அறிவார்ந்த படமெடுக்க அன்பான அட்வைஸ்..; அன்பறிவு விமர்சனம் 2/5

அறிவார்ந்த படமெடுக்க அன்பான அட்வைஸ்..; அன்பறிவு விமர்சனம் 2/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்.. இரட்டை குழந்தைகள் பிரிகிறார்கள். பின்னர் உண்மை தெரிகிறது.. இருவரும் இடம் மாறுகிறார்கள்.. பின்னர் இணைகிறார்கள்.. எண்ணிடலங்கா படங்களில் பார்த்த அதே இரட்டை வேட கதைதான்.

கதைக்களம்..

ஊர் பெரியவர் நெப்போலியனின் மகள் ஆஷாசரத் (லட்சுமி) சாய்குமாரை காதலிக்கிறார்.

முதலில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நெப்போலியன் பின்னர் சாய்குமார் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தால் சம்மதிக்கிறேன் என்கிறார்.

அதன்படி திருமணம் நடக்க இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் (அன்பு & அறிவு) பிறக்கிறது.

நெப்போலியன் வீட்டில் வேலை பார்க்கும் விதார்த் ஒரு கட்டத்தில் மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் கலகம் மூட்டி கணவன் மனைவியை பிரிக்கிறார்.

அன்றைய தினம் நள்ளிரவில் தனக்கு பிறந்த இரடைக் குழந்தைகளில் ஒரு குழந்தையை (அறிவு) சாய்குமார் எடுத்து செல்கிறார்.

மற்றொரு குழந்தை (அன்பு), தனது அம்மா ஆஷா மற்றும் தாத்தா நெப்போலியுடன் வளர்கிறார். மதுரைக்கே உரிய வீரத்துடன் வளர்கிறார். அடி தடி வெட்டு குத்து என எதையும் யோசிக்காமல் வளர்க்கப்படுகிறார்.

உன் அம்மா இறந்துவிட்டார் என அறிவை வளர்கிறார் சாய்குமார். இவர்களின் குடும்பம் கனடாவில் பெரும் பணக்காரர்களில் ஒன்று.

25 வருடங்களுஙக்கு பிறகு தாய் உயிரோடு இருப்பதை அறியும் அறிவு மதுரைக்கு வருகிறார்.

மதுரையில் காலடி வைத்த அன்றே ஒரு பிரச்சினையில் அன்பு அறிவு இருவரும் இடம் மாறுகின்றனர். அதாவது அன்பு இடத்தில் அறிவு வருகிறார். கனடாவிற்கு அன்பு கடத்தப்படுகிறார்.

இறுதியில் பிரிந்த குடும்பம் ஒன்றானதா.? வில்லன் விதார்த்தை பழி வாங்கினாரா? தாத்தா பேரன்களை ஏற்றுக் கொண்டாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ரஜினி படங்களுக்கே உரிய செம பில்டப்போடு அறிமுகம் ஆகிறார் ஹிப்ஹாப் ஆதி. ஆனால் பார்க்கத்தான் நம்மால் முடீயல. ஒரு ஆதி வந்தாலே தாங்காது இதுல ரெண்டு ஆதி வேற.. மனுசன் வச்சி செஞ்சிட்டார்.

நிறைய காட்சிகளில் ஓவர் ஆக்டிங். நல்லவேளை இந்த படத்தில் அவரது வழக்கமான ப்ரெண்ட் கேரக்டர்களை பயன்படுத்தவில்லை. இரண்டு கேரக்டர்களை வேறுபடுத்த (பாடி லாங்குவேஜ்) கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாமே ப்ரோ.. அடுத்த படத்திலாவது உங்க ஹேர் ஸ்டைலை மாத்துங்க ஆதி.

தீனாவின் டைமிங் காமெடிகள் சில இடங்களில் கை கொடுத்துள்ளன.

2 ஹீரோ இருந்தா 2 ஹீரோயின்கள் இல்லாமலா.? காஷ்மிரா மற்றும் ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளனர்.

இதில் காஷ்மீராவை கனடாவில் வசிக்கும் பெண்ணாக காட்டியிருக்கலாம். அவரின் கலருக்கு கால் சட்டை போட்டு வந்தால் கூட ஓகே. அதுபோல ஷிவானியை மதுரை பெண்ணாக காட்டியிருக்கலாம். இரண்டு பேர் இருந்தும் நம்மை யாருமே கவரவில்லை. காஷ்மிரா கொஞ்சம் ஓகே.

3 கேரக்டர்களை நிச்சயம் பாராட்டலாம். நெப்போலியன் தன் கேரக்டரில் செம கெத்து காட்டியிருக்கிறார். பைட் சீனிலும் வருகிறார்.

அதுபோல பல படங்களில் மிரட்டலாக வரும் ஆஷா இதில் அம்மாவாக அசத்தல். அதிலும் சின்ன கம்பீரம் காட்டியிருப்பது சிறப்பு. இவரது டப்பிங் இவருக்கு பொருந்தவில்லை. (ரோகினி வாய்ஸ்..??)

மைனா, குரங்கு பொம்மை என பல படங்களில் ஹீரோவாக நடித்த விதார்த் இதில் வில்லனாக வித்தியாசமாக தோன்றியிருக்கிறார். பாராட்டுக்கள்.

விதார்த் பேருக்குதான் அமைச்சர். எப்போதுமே நெப்போலியன் வீட்டில்தான் அடிமையாக வருகிறார். இதான் அமைச்சரின் முழுநேரப் பணியா.?

போலீஸ் அதிகாரியாக சீரியல் நடிகர் சஞ்ஜீவ் வருகிறார் அவ்வளவுதான்.

காஷ்மிராவின் தந்தையாக மாரிமுத்து மாமாவாக அர்ஜெய். இருவரும் தங்கள் பங்கெளிப்பில் கச்சிதம். ஆரவாரமில்லாத நடிப்பில் சாய்குமார்.

ரேனுகா, ஆடுகளம் நரேன், சரத் ரவி ஆகியோருக்கு பெரிதாக வேலையில்லை.

டெக்னீஷியன்கள்..

பாவம் சத்யஜோதி பிலிம்ஸ். ஹிப் ஹாப் ஆதியுடம் மாட்டிக் கொண்டதா? தெரியல. இதுல கதை வேற ஆதியே எழுதி இசையமைத்துள்ளார்.

பொதுவாக இவரது படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும். ஆனால் கேட்ட பாட்டு மெட்டுக்களை போட்டு தள்ளிவிட்டார். கிராமத்துக்கு இசையை கிராமத்து காட்சிகளுக்கு கொடுத்திருக்கலாம். அதிலும் இவரது ஹிப் ஹாப் இசையை திணறுகிறது.

பொன் பார்த்திபன் வசனம் எழுதியிருக்கிறார். க்ளைமாக்சில் மட்டும் ஸ்கோர் செய்கிறார். மற்றபடி வசனங்கள் மனதில் நிற்கும்படி இல்லை.

என்னடா என்னை ரெண்டுபேரும் சேர்ந்து அசிங்கப்படுத்துறீங்களா? என அர்ஜெய் கேட்கும் போது.. இல்லையே.. தனி தனியாதானே அசிங்கப்படுத்துனாங்க என வக்கீலாக வரும் முல்லை கேட்கும் போது ரசிக்க வைக்கிறார்.

மதுரை முதல் கனடா காட்சிகளில் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு ஆறுதல் தந்துள்ளது. ஆனால் மதுரையை காட்டிய அளவுக்கு கனடாவை காட்டவில்லையே..

ஒரு சண்டை காட்சியில் அறிவை அடிக்க ஓடி வருகிறார் அடியாள். ஆனால் அது அன்பு என்று அவருக்கு தெரிகிறது. எனவே அடிக்கவில்லை. அடுத்த காட்சியில் அன்பு யார் என தெரியாமல் பேசுகிறார் நெப்போலியன். அடியாளுக்கு தெரிந்த ஒன்று கூட 25 வருடமாக வளர்த்த தாத்தாவுக்கு தெரியல. இப்படி சிரிப்பாய் சிரிக்கும் சிறப்பான காட்சிகள் படத்தில் உள்ளது.

இப்படத்தை இயக்கியிருக்கிறார் அஸ்வின் ராம். இவர் அட்லியின் உதவியாளராம். இவரின் குரு சுட்ட கதையாக இருந்தாலும் சுவையாக தருவார். ஆனால் பல இரட்டை வேட படங்களில் அரைத்த மாவை இப்படி புளிக்க வைத்துவிட்டாரே அஸ்வின் ராம்.?

அறிவை நன்றாக பயன்படுத்தி அடுத்த படத்தையாவது கிரியேட்டிவ்வாக எடுங்கள் என அன்பான வேண்டுகோள் வைக்கிறோம்.
அன்பு தான் எல்லாம்… அதுவே அறிவார்ந்த செயல் என அட்வைஸ் செய்து படத்தை முடிக்கிறார்கள். இதை முதலில் சொல்லியிருந்தால் அப்போதே முடிச்சிட்டு கிளம்பியிருக்கலாம் போல…

Hip Hop Aadhis Anbarivu review rating

பெண்களுக்கு எச்சரிக்கை..; பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்

பெண்களுக்கு எச்சரிக்கை..; பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..
நவீன செல்போன் உலகத்தில் HIDDEN CAMERA வைத்து இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்களை குறி வைத்து பணம் பறிக்கும் சில நேரம் உயிரை பறிக்கும் கும்பலின் கதை இது.

வரதாஜ் இயக்கத்தில் ராஜ்கமல், மது, ஷ்வேதா பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்களம்..

ஆண் நண்பர்களுடன் பெண்கள் சுற்றும்போது.. காதலனுடன் தனிமையில் பூங்காக்களில் தடவும்போது.. பெண்கள் குளிக்கும் போது… இதுபோன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அவர்களுக்கு தெரியாமல் “ஹிட்டன் கேமரா” பொருத்தி அந்தரங்கங்களை வீடியோ எடுக்கிறது ஒரு கும்பல்.

பிளம்பர் வேலைக்கு வரும் நபர்கள் முதல்நாள் வந்து பைப் சரி செய்வதுபோல் கேமராவை பொருத்தி செல்கின்றனர். நாளை மீண்டும் வந்து செக் செய்கிறேன் என கூறி அடுத்த நாள் ரெக்கார்ட்டிங் கேமராவை எடுத்து செல்கின்றனர்.

வழி வராத பெண்களிடம் காதல் வலை வீசி அவளுடன் செக்ஸ் வைக்கும்போது கேமராவை வைத்து படம் எடுக்கின்றனர்.

பிறகு அந்த பெண்களுக்கே அனுப்பி, மிரட்டி பணம் பறிக்கிறது அந்த கும்பல். சிலர் மானத்திற்கு பயந்து தற்கொலை செய்கின்றனர்.
இந்த தற்கொலைகள் தமிழகத்தில் தொடர்கதையாகிறது. எனவே இதை விசாரிக்க போலீஸ் விரைகிறது. சில இடங்களில் HIDDEN CAMERA மர்ம நபர்களால் பொருத்தி வைக்கப்பட்டதை அறிந்தபின்னர் விசாரணை சூடு பிடிக்கிறது.

இதுபோன்ற கும்பலிடம் நாயகி எப்படி சிக்கினார்? நாயகன் ராஜ்கமல் யார்.? போலீஸ் எப்படி அவர்களை கண்டு பிடித்த்து? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

சீரியல்களில் கலக்கும் நடிகர் ராஜ்கமல் அடிக்கடி இதுபோல சினிமாவில் எட்டிப் பார்ப்பதுண்டு. இதில் எவரும் யூகிக்க முடியாத கேரக்டரை செய்துள்ளார். காதலியிடம் கெஞ்சும்போதும் மிரட்டும் போதும் ரசிக்க வைக்கிறார். ஒருசில இடங்களில் ஓவர் ஆக்டிங் ஓவர் லோட் ஆகிறது.

காதலியுடன் ரொமான்ஸ் போதவில்லை. ஒருவேளை நாயகியை பார்த்தால் ஒன்றும் தோனவில்லையோ… நாயகி தேர்வில் இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கலாம். ராஜ்கமலின் மனைவி நடிகை லதாவே நாயகியாக நடித்திருக்கலாம். அவர்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.

நாயகி ஸ்வேதா பாண்டி உடல் அழகில் நம்மை சூடேற்றுகிறார். இவரை பேபி மா.. பேபி மா.. என முதலில் அழைப்பது முதலில் ரசிக்க வைத்தாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் போரடிக்கிறது.. பேபி மா சொல்லு.. பேபி மா எப்படி என அடிக்கடி கேட்டு நமக்கே போராச்சு.

ஆப்பிரிக்க வில்லன் நடிகர் அசத்தல். அப்பாவியாக வந்து அசத்தியிருக்கிறார். போலீஸ் கேரக்டரில் வருபவர் நம் கவனம் ஈர்க்கிறார்.

நாம் லாட்ஜில் தங்கும்போது ஒய்ஃபை WIFI பாஸ்வேர்ட் போட்டு நம் செல்போனில் நுழைந்தால் அதன் மூலம் செல்போன் தகவல்கள் திருடப்படுவது எதிர்பாராத ஒன்று. இடைவேளை ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்றுதான்.

கொடைக்கானல் காட்சிகள் அழகு. சதீஷ்குமார் மற்றும் கார்வ மோகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. டூயட் பாடலில் அந்த இயற்கை அழகு மனதை கொள்கிறது.

விவேக் சக்ரவர்த்தியின் இசை ஓகே ரகம். பாடல் வரிகளில் இருந்த உணர்வு இசையில் இல்லாதது வருத்தமே.

செல்போன்கள் பெண்கள் வாழ்க்கையை எப்படி சீரழிக்கிறது என்பதை சின்ன பட்ஜெட்டில் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் வரதராஜ். காட்சிகளின் தரத்தை உயர்த்தி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வை இந்த படம் தரும் என நம்பலாம்.

Pen Vilai Verum 999 Rupaai Mattume review rating

திருட ஏங்கும் ஆம்பள புத்தி…; ஓணான் விமர்சனம்

திருட ஏங்கும் ஆம்பள புத்தி…; ஓணான் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

எவருக்கு தீங்கு விளைவிக்காத உயிரினம் ஓணான். ஆனால் அதை கண்டாலே சிலர் அடிப்பார்கள். அப்படி தீங்கு நினைக்காத ஒரு குடும்பத்தை ஒருவன் வஞ்சிக்கும் கதையே இந்த படம்.

களவாணி படத்தில் ஓவியாவின் அண்ணனாக மற்றும் ஈட்டி படத்தில் ஸ்ரீதிவ்யாவின் அண்ணனாக நடித்தவர் திருமுருகன். இந்த படத்தின் கதையின் நாயகன். இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத்.

கதைக்களம்…

பைத்தியகாரன் போல இருக்கும் திருமுருகன் ஒரு ஊருக்கு பிழைப்பு தேடி செல்கிறார். யார் என்ன பேசினாலும் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.

ஒரு பிரச்சினையில் சரவணன் சக்தியை அடித்து துவைத்து பூ ராம் குடும்பத்தை காப்பாற்றுகிறார். இதனால் ராம் குடும்பத்தினர் இவருக்கு அடைக்கலம் கொடுக்கின்றன்ர.

அந்த குடும்பத்தினருக்கு திருமுருகனை பிடித்துவிட்டதால் தனது மகள் ஷில்பாவுக்கு திருமுருகனை 2வதாக மணமுடித்து வைக்கிறார்.

வெளிநாட்டில் இருக்கும் ஷில்பாவின் அண்ணன் காளி வெங்கட் தங்கை திருமணத்திற்கு வருகிறார். தங்கை முதலிரவின் போதுதான் திருமுருகனைப் பற்றி தெரிந்து கொள்கிறார்.

உன் குடும்பத்தையே வெட்டி சாய்க்க வந்திருக்கிறேன் நான் என்கிறார் திருமுருகன்.

காளி வெங்கட் என்ன செய்தார்.? திருமுருகன் ஏன் மனைவி குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்? குடும்பத்தினர் என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

கதையின் நாயகனாக திருமுருகன் சதாசிவின்… படம் முழுக்க சைக்கோவாக காட்டியிருக்கிறார். ப்ளாஷ்பேக் காட்சியில் பொறுப்பான கணவனாக மாறியிருக்கிறார்.

ஹீரோ கேரக்டர் செய்கிறோம். உடல் இளைத்திருக்கலாம். இன்னும் வில்லன் லுக்கிலேயே இருக்கிறார் திருமுருகன். படத்தில் கொஞ்சமே பேசி நடித்துள்ளார்.

சேலையில் அழகு காட்டி நடித்திருக்கிறார் நாயகி ஷில்பா மஞ்சுநாத். திருமணம் ஆன பின்பும் தன்னுள் காதல் வருவதை தன் கண்களில் உணர்த்தி நடித்திருக்கிறார்.

மற்றொரு நாயகியாக சனுஜா சோமந்த். அழகும் திறமையும் உள்ள நடிகை.

பல படங்களில் காமெடியில் கலக்கி ஒரு படத்தில் நாயகனாக நடித்தவர் , காளி வெங்கட். இதில் வில்லனாக அவதாரம் எடுக்க முயற்சித்துள்ளார். வீட்டில் நல்லவனாக வெளியில் கெட்டவனாக திரியும் சில ஆண்களை போல் நடித்திருக்கிறார். சில இடங்களில் ஓவர் ஆக்ட்டிங்.

சிங்கம் புலி காமெடி ஓரிரு இடங்களில் சிரிக்க வைக்கிறது. திரிபு.. திரிபு.. என இவர் பேசி கடலை போடும் காட்சிகளில் இவரது பாஷை ரசிக்க வைக்கிறது.

சரவணன் சக்தி அறிமுகமாகும்போது நல்லவனா? கெட்டவனா? வில்லனா? என வாய்ஸ் ஓவர் வருகிறது. அதுபோல் நமக்கும் கடைசி வரை தெரியவில்லை. தந்தையாக பூ ராம், தனது கேரக்டரில் கச்சிதம். இவரது மனைவி கேரக்டரும் நல்ல தேர்வு.

காளி வெங்கட்டின் குழந்தைகளும் சிறப்பான தேர்வு.

டெக்னிஷீயன்கள்..

ராஜேஷ் ராமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பசுமையாக காட்டியிருக்கிறார்.. அந்தோணி ஆபிரகாம் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

முதல் பாதி கதை என்னவென்றே தெரியவில்லை. யாருனே தெரியாதவரை ஒருவரை குடும்பமே தம்பி.. தம்பி.. என கொண்டாடுவது நெருடல். ஆனால் அவர் (திருமுருகன்) செய்த உதவி அப்படி என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.

2ஆம் பாதியில் தான் கதையின் ஆழத்தை காட்டியிருக்கிறார் இயக்குனர் சென்னன். இதுபோன்ற கதை பல இடங்களில் உண்மையாகவே நடக்கிறது. எனவே அதை அப்பட்டமாக காட்சிகளாக காட்டிய இயக்குனரை பாராட்டலாம்.

ஆக… இந்த ஓணான்.. திருட ஏங்கும் ஆம்பள புத்தி…

Onaan movie review and rating in Tamil

முதல் படத்திலேயே மூவேந்தர் முத்திரை..; வேலன் விமர்சனம்

முதல் படத்திலேயே மூவேந்தர் முத்திரை..; வேலன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மினி தகவல்..

தயாரிப்பாளர் கலைமகன் முபாரக்… இயக்குனர் கவின்… பிக்பாஸ் முகேன் ஆகியோருக்கு இதான் முதல்படம். தங்கள் முதல் படத்திலேயே முத்திரை பதித்த மூவேந்தர்கள் இவர்கள்.

சிறுத்தை சிவாவின் உதவி இயக்குனராக பணிபுரிந்த கவினின் இயக்கத்தில் உருவான “வேலன்”

கதைக்களம்..

ஊரில் மரியாதைமிக்க குடும்பம் பிரபு பரம்பரை. இவரின் மனைவி ஸ்ரீரஞ்சனி. இவர்களின் மகன் முகேன். அப்பாவிடம் நல்ல பெயர் வாங்கி வெளியில் அட்டகாசம் செய்கிறவர் முகேன்.

ஒரு கட்டத்தில் +2வில் பெயில் ஆனதால் அப்பாவின் கோபத்தை சம்பாதிக்கிறார். இதனால் இவர்கள் சரியாக பேசிக் கொள்வதில்லை.

ஒருவழியாக +2 தேர்வை 3 முறை எழுதி காலேஜ்ஜில் சேர்கிறார். அங்கு நாயகி மீனாட்சியை கண்டதும் காதல் கொள்கிறார்.

மீனாட்சியை இம்ப்ரஸ் செய்ய ஒரு ஆளை வைத்து மலையாளத்தில் காதல் கடிதம் எழுதுகிறார்.

இந்த மலையாள காதல் பிரச்சினையால் ஆள் மாறி தம்பி ராமையா தன் மகளுக்காக பிரபுவிடம் வந்து மாப்பிள்ளை கேட்கிறார். மகனுக்காக வாக்கு கொடுக்கிறார் பிரபு.

ஆனால் அது மீனாட்சியின் தந்தையல்ல என்பது பின்னர் தெரிய வருகிறது. தன் தவறால் அப்பாவிற்கு கௌரவ பிரச்சினை வந்துவிடுமோ என முகேன் நினைக்கிறார்.

இறுதியில் என்ன ஆனது..? காதலியா..? அப்பாவா..? யார் பேச்சை கேட்டார் முகேன்.? மலையாள கடிதம் என்னாச்சு.-? இரு கடிதங்கள் எப்படி.? என்பதை மீதிக்கதை.

கேரக்டர்கள்…

முதலில் ஸ்கூல் பையன் முகேன்.. பிறகு முறுக்கு மீசை முகேன்.. இரண்டிலும் செம ஸ்மார்ட்டாக இருக்கிறார் முகேன். ஆட்டம் பாட்டம்.. பைஃட், கொஞ்சம் ரொமான்ஸ் என நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார்.

வழக்கம் போல தந்தையாக பிரபு. இதில் க்ளைமாக்ஸில் பிரபுவும் பைட் போட்டு தெறிக்கவிட்டுள்ளார். இந்த படத்தில் பிரபு சிகை அலங்காரம் சிறப்பு.

நாயகியாக மீனாட்சி.. மலையாள லுக்கில் அசத்துகிறார். ஆனால் மலையாள பேசுகிறோம் என நினைத்து ஏதோ பேசுகிறார்.

முகேனை சித்தப்பு என அழைக்கிறார் பிரிகிடா. இவர் முகேனிடம் குட்டு வாங்கும்போது திட்டு வாங்கும்போது துறுதுறு நடிப்பில் கவர்கிறார். சில நேரங்களில் கண்களாலே கவர்ந்துவிடுகிறார்.

இடைவேளையில்தான் வருகிறார் சூரி. இவர் வந்தபிறகு சிரிப்பு மழைதான். நீண்ட நாட்களாக சூரி காமெடி மிஸ்ஸிங். இதில் தனி ஆளாக அசத்திவிட்டார்.

அதிலும் தன் அக்கா கணவர் தம்பி ராமையா பத்தி பேசும்போது நிச்சயம் சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள்.. ஐயோ.. இவன் பிட் படம் எடுத்தா கூட நல்ல கிளாரிட்டி இல்லன்னு சொல்வானே என சொல்லும்போது செம சிரிப்பு.

வில்லனாக ஹரீஷ் பெராடி. எப்போதும் போல முறைத்த முகத்துடனே வருகிறார். இவரை மலையாளம் பேச வைத்திருக்கலாம். கேட்கும்படியாக இருந்திருக்கும்.

ஆனால் தம்பி ராமையாவை மலையாளியாக காட்டி நம்மை கொலையாளியாக மாற்றிவிடுவார் போல இயக்குனர். கத்தி கத்தி பேசி ஓவர் ஆக்டிங் தம்பி ராமையா.

காலேஜில் கூட்டாளியாக ப்ராங்க் ஸ்டார் ராகுல். ஓரிரு காமெடிகள் ரசிக்கும்படி உள்ளது. ஆனால் முகபாவனைகளை என்ன சொல்வது..? முடியல.

டெக்னீஷியன்கள்..

கோபி ஜெகதீஸ்வரன் தன் ஒளிப்பதிவில் வேலனை கலர்ஃபுல்லாக காட்டியிருக்கிறார். நேர்த்தியான பணியை செய்துள்ளது சிறப்பு.

ப்ளாஷ்பேக் காட்சிகள் ஓகே. ஆனால் முதல் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாமே எடிட்டர் சரத்குமார் சாரே.

கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே ஹிட் அடித்த முகேனின் பாடலை படத்தில் பயன்படுத்தியது இசையமைப்பாளரின் சாமர்த்தியம். பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு. குறிப்பாக முகேன் பாடிய ‘சத்தியமா சொல்றேண்டி’ என்ற பாடல் சிறப்பு.

வழக்கமான காதல் கலாட்டா கதைதான் என்றாலும் அதை ஜனரஞ்சமாக ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் கவின். ஆனால் அடிக்கடி வரும் பாடல் தேவையில்லாத ஒன்று. மேலும் தயவுசெய்து மலையாளத்தை அடுத்த படங்களில் கொல்லாதீர்கள் என வேண்டுகிறோம்.

தயாரிப்பாளராக கலைமகன் முபாரக். இவரும் இரண்டு காட்சிகளில் வந்து கவனம் பெறுகிறார். விரைவில் நாயகனாக நடித்தாலும் ஆச்சரியமில்லை.

வேலன்.. ஆக இயக்குனர் தயாரிப்பாளர் ஹீரோவுக்கு இது முதல் வெற்றி.

Mugens Velan movie review rating

More Articles
Follows