கெமிஸ்ட்ரி காதலும் கேடான நட்பும்..; குட்டி ஸ்டோரி விமர்சனம்

கெமிஸ்ட்ரி காதலும் கேடான நட்பும்..; குட்டி ஸ்டோரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

4 குறும்படங்களை இணைத்து அதை பெரிய படமாக தொகுத்து ‘குட்டி ஸ்டோரி’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

எதிர்பாரா முத்தம்:

ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக மட்டுமே இருக்க முடியுமா?. இது தான் எதிர்பாரா முத்தம் பட அவுட் லைன்.

கெளதம் மேனன் நாயகனாக நடித்து அவரே இயக்கியும் இருக்கிறார்.

கெளதம் மேனன் மற்றும் அமலா பால் இருவரும் கல்லூரியில் நண்பர்கள்.

ஒரு பிரச்சனையால் பிரியும் இவர்கள் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கின்றனர்.

திருமணமாகி, வெளிநாட்டில் செட்டிலான மிர்ணாளினி (அமலா) ஆதியை (கௌதம்) சந்தித்தால் என்ன நடக்கும்? என்பதே மீதிக்கதை.

இந்த கதை ஓட்டத்தை எளிமையாக சொன்னாலும் பொறுமையை சோதிக்கின்றனர்.

அவனும் நானும்:

இயக்கம் : விஜய்

கல்லூரியில் படிக்கும் ப்ரீத்தி (மேகா ஆகாஷ்), தனது காதலன் விக்ரமிடம் (அமிதாஷ் பிரதான்) உறவு வைத்து கர்ப்பமடைகிறார்.

ஒரு கட்டத்தில், காதலன் விபத்தில் இறந்து விட, அதன்பிறகு மேகா ஆகாஷ் எடுத்த முடிவுகளே படத்தின் மீதிக் கதை..

க்ளைமாக்ஸ் காட்சிகளும் யாரும் யூகிக்க முடியா வண்ணம் எடுத்துள்ளனர்.

வித்தியாசமான கதைக்களம் கொடுத்த இயக்குனர் விஜய்க்கு பாராட்டுகள்.

லோகம்:

இயக்கம்: வெங்கட் பிரபு ..

கம்ப்யூட்டரில் ஆன்லைன் கேம் விளையாடும் இளைஞன் வருண்.

ஆன்லைனில் விளையாட்டில் மறுபக்கம் ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது.

அந்த பெண்ணை வருண் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.

ஒரு கட்டத்தில் விளையாட்டில் அவள் அவுட்டாகி விட, பெண்ணின் தொடர்பு இல்லாமல் போகிறது. இழக்கிறார் வருண்.

யார் அந்த பெண்.? மீண்டும் தொடர்பு உருவானதா? என்பதே படத்தின் மீதிக் கதை.

இந்த ஆந்தாலஜியில் லோகம் எபிசோட்தான் தான் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை.்

வித்தியாசமான கதைக்காக இதை பார்க்கலாம்.

ஆடல் பாடல்

இயக்கம்: நலன் குமாரசாமி

விஜய் சேதுபதி மற்றும் அதிதி பாலன் இருவரும் தம்பதிகள். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை.

விஜய் சேதுபதிக்கு தனது செல்போனில் ஒரு பெண் தொடர்பு கிடைக்கிது. இறுதியில் தான் அந்த பெண் தன் மனைவி அதிதி பாலன் என தெரிந்து கொள்கிறார்.

விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்க அதிதி பாலனும் ஒரு தவறு செய்து விட்டதாக கூற இருவருக்குள்ளும் பிரச்சினை வெடிக்கிறது.

பின், இருவரும் இணைந்தார்களா.? என்பதே மீதிக் கதை.

விஜய் சேதுபதி தனது கேரக்டரை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதிக்கும் அதிதி பாலனுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி சரியாக சில இடங்களில் வொர்க் ஆகவில்லை.

ஆனால் இருவருக்கும் நல்ல கேரக்டர். எனவே நடிப்பிலும் குறையில்லை.

ஆக கெமிஸ்ட்ரி காதலும் கேடான நட்பும்..; குட்டி ஸ்டோரி விமர்சனம்

Kutty story Review Rating

பெண்கள் பாதுகாப்பு…; ஆட்கள் தேவை விமர்சனம்

பெண்கள் பாதுகாப்பு…; ஆட்கள் தேவை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ME TOO மீ டூ… இதை 80% பெண்கள் சொல்லி வருகின்றனர். அந்தளவு பெண்கள் பாதுகாப்பின்மையால் தவிக்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கதைக்களம்…

ஒரு பெண்ணை ஒரு கும்பல் கடத்தி அவளுக்கு போதை ஏற்றி அவளை சீரழிக்கின்றனர்.

இந்த கும்பல் தலைவன் ஈசனுக்கு பக்க பலமாக இருக்கிறார் அரசியல்வாதி மைம் கோபி.

ஹீரோ சக்தி சிவன் & ஹீரோயின் சந்திரலேகா இருவரும் காதலிக்கின்றனர். அவர்கள் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய காத்திருக்கும் நிலையில் சந்திரலேகாவை அதே கும்பல் கடத்தி விடுகிறது.

ஹீரோ சக்தி சிவன் தன் தேடுதல் வேண்டிய துவங்குகிறார். தன் காதலியை மீட்டாரா? என்பது படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

இயக்குனர் & நாயகன் இருவரும் ஒருவரே. எனவே கேட்கவே வேண்டாம்.. தனக்காக நிறைய காட்சிகளை வைத்துள்ளார். சில காட்களில் பாராட்டும்படியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

நாயகி சந்திரலேகா மிகையில்லாத நடிப்பு. காதலிலும் சரி கடத்தலிலும் சரி அந்த காட்சிகள் இவருக்கு கை கொடுத்துள்ளன.

வில்லன் ஈசன் மற்றும் அரசியல்வாதி தம் கோபி இருவரும் கச்சிதம். வில்லத்தனத்தில் குறையில்லை்.

மற்றொரு வில்லன் ஆமோஸ் ஜாக் என்பவரும் நம் கவனத்தை ஈர்க்கிறார்.. இனி இவருக்கான வாய்ப்புகள் பெருகும்

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கார்த்திக் ராஜாவின் இசையை நம்பினாலும் நமக்கு ஏமாற்றமே. ஒரு முறை கேட்கும் ரக பாடல்கள்..

சுரேஷ்குமாரின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.

கையில் எடுத்த கதையை இன்னமும் சுவாரஸ்யமாக சொல்லும் விதத்தில் தடுமாறிவிட்டார். காமெடி கலந்து சொல்லியிருந்தால் கூட எடுப்பட்டிருக்கும்.

மற்றபடி… பெண்களை அவர்கள் அனுமதியில்லாமல் தொடுவது குற்றம். அதற்கு கடுமையான தண்டனை வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார் டைரக்டர் சக்தி சிவன். எனவே அவரை வெகுவாக பாராட்டலாம்.

ஆக… ஆட்கள் தேவை – பெண்கள் பாதுகாப்பு

Aatkal Thevai movie review and rating

JD vs KD டபுள் மாஸ்..; மாஸ்டர் விமர்சனம்

JD vs KD டபுள் மாஸ்..; மாஸ்டர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, கௌரி, அர்ஜுன் தாஸ், மகேந்திரன், தீனா, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, ஸ்ரீமன் மற்றும் பலர்.

இயக்கம் – லோகேஷ் கனகராஜ்

இசை – அனிருத்

ஒளிப்பதிவு – சத்யன் சூரியன்

கதைக்களம்

போதை பழக்கத்துக்கு அடிமையானவர் பேராசிரியர் JD விஜய்…

பவானியாக வரும் விஜய்சேதுபதியோ ஒரு பக்கா KD.

இவர்கள் இருவரின் மோதல் தான் மாஸ்டர்.

கேரக்டர்கள்..

ஜே.டி. எனும் வாத்தியாக மாஸ் காட்டியிருக்கிறார் தளபதி விஜய்.

விஜய்யின் இன்ட்ரோ வேற லேவல்.. வெய்ட் பண்ண வச்சி வச்சி வெறி ஏத்தீட்டாங்க…

குட்டி ஸ்டோரி டான்ஸ் முதல் வாத்தி கம்மிங் வரை அசத்தல்.. ஸ்டைலிஷ் புரோபசர்..

பவானியாக விஜய்சேதுபதி. வில்லனாக மிரட்டல். விஜய்க்கு இணையாக விஜய்சேதுபதிக்கும் அனல் பறக்கும் காட்சிகள்.. பின்னணி இசையும் தெறி.

அர்ஜுன் தாஸ் கேரக்டரும் அசத்தல்.

மாளவிகா முதல் மகேந்திரன், சாந்தனு, கவுரி, தீனா, ஆண்ட்ரியா, ஸ்ரீமன், விஜே ரம்யா உள்ளிட்டோர் கச்சிதம். கதைக்கு பக்கபலமாக உள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அனிருத் இசையில் பாடல்கள் இளைஞர்களின் பேவரைட்.

மாஸான பின்னணி இசையும் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில், ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்து. படத்தை ஒன்ற வைக்கிறது.

மெட்ரோ பைஃட் சீன் முதல்… விஜய் & விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் ரசிகர்களை சீட் நுனிக்கு கொண்டு செல்லும்.

ரசிகர்களுக்கு எது புடிக்குமோ அதை படமாக்கி சுவையான பொங்கல் விருந்தளித்துள்ளார் டைரக்டர்.

வழக்கமான தன் பாணியில் மாஸான படம் கொடுத்துள்ளார் லோகேஷ்.

படம் முழுவதும் ஆக்சனே இருந்தால் பேமிஃலி ஆடியன்ஸை முழுவதும் கவராது.

கிட்டத்தட்ட படம் 3 மணி நேரம். நீளத்தை குறைத்திருக்கலாம்.. இன்டர்வெல் வரை கூட உட்கார முடியல.. பொறுமையை சோதிக்கிறது.

மாநகரம் & கைதி படத்தை அடுத்து ஹாட்ரிக் அடிப்பார் லோகேஷ் என நினைத்தோம்.. ஆனால் அதை ஜஸ்ட் மிஸ் செய்துள்ளார்.

ஆக மாஸ்டர்… JD vs KD டபுள் மாஸ்

Vijay Master Review Rating

filmistreet Review

காவலர்களை கவனி… காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம் 3.5/5

காவலர்களை கவனி… காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம் கோபி, ஆர்ஜே முன்னா, சூப்பர்குட் சுப்ரமணி,
இயக்குனர்: ஆர்டிஎம்

கதைக்களம்..

நாயகன் சுரேஷ் ரவி.. நாயகி ரவீனா.. உணவை டோர் டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறார் சுரேஷ் ரவி.

இவர் காதலிக்கும் பெண் ரவீனாவை பெற்றோர் எதிர்ப்பு மீறி திருமணம் செய்கிறார். ரவீனாவும் வேலைக்கு செல்கிறார்.

ஒரு நாள் ரவீனா பணிமுடிந்து வரும்போது, வழிப்பறி கொள்ளையர்கள் அவரின் நகைகளை பறித்து விடுகின்றனர்.

இதனையடுத்து கணவரும் சம்பவ இடத்திற்கு வர. அங்கிருந்து கிளம்பும் போது வாகன சோதனையில் போலீசிடம் சிக்குகின்றனர்.

ஏற்கெனவே மன உளைச்சலில் இருக்கும் நாயகன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைம் கோபியிடம் தவறாக பேசுகிறார்.

இதனால் கோபம் அடைந்த போலீஸ் அவரை காவல் நிலையம் அழைத்துச் செல்கின்றனர்.

அதன்பிறகு என்ன நடக்கும் என்பதை நீங்கள் யூசிக்க முடியும். ஆனால் அவற்றை காட்சிகளாக பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த படத்த நிச்சயம் பார்க்க வேண்டும்.

கேரக்டர்கள்…

நாயகன் சுரேஷ் ரவிக்கு இப்படம் தான் முதல்படம். டிவி நிகழ்ச்சிகளில் விஜே’வாக இவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.

நான் என்ன சார் தப்பு பண்ணினேன்? என்று அப்பாவியாகக் கேட்கிறார். அப்போதே நம் அனுதாபம் அவருடன் ஒட்டிக் கொள்கிறது.

அவர் வாங்கும் ஒவ்வொரு அடியும் நமக்கு வலிக்கிறது. சில காட்சிகளை முக பாவனைகளை போதவில்லை என்றே தோன்றுகிறது.
இவர் அடிக்கடி போலீஸ் ஸ்டேசன் போகும்போதேல்லாம் நம் மனம் பதைக்கும்.

நடுத்தர குடும்பத்து பெண்ணாக பின்னி எடுத்துள்ளார் பிரவீணா. இவர் தான் பல நடிகைகளுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறார்.

தன்னால் கணவனுக்குப் பிரச்னை என நினைப்பதும் ‘பாப்பா போயிடுச்சு’ என அழும்போது நம்மையும் அழ வைக்கிறார்.

எல்லாம் போலீஸ் ஸ்டேசனிலும் நிச்சயம் ஒரு நேர்மையான நல்ல போலீஸ் இருப்பார். அப்படியொரு போலீஸ் சூப்பட் குட் சுப்ரமணி. தனக்கும் அதிகாரம் இருந்தாலும் தன் இயலாமையை அப்பட்டமாக நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் ஹீரோ வில்லன் எல்லாம்’மைம் கோபி’தான். தன் கேரக்டரை உணர்ந்து அதற்கு தன் உயிரை கொடுத்து நடித்துள்ளார்.

சே… இப்படியொரு போலீசா? இல்ல இல்ல பொறுக்கி என நீங்களை ‘மைம் கோபி’யை பார்த்து திட்டூவீர்கள். அப்படியொரு மிரட்டலான நடிப்பு.

kavalthurai ungal nanban

காவல்துறையினரை பகைத்தால் நாம் உயிரோடு வாழவே முடியாது என்பதாக இயக்குனர் காட்டியிருக்கிறார். விசாரணை படத்தின் 2ஆம் பாகம் என்று கூட இந்த படத்தைச் சொல்லலாம்.

படம் எடுக்கப்பட்ட விதத்திற்காகவே இயக்குனர் ‘ஆர் டி எம்’க்கு வாழ்த்துகள்.

கே எஸ் விஷ்ணுஸ்ரீ’யின் ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் கண்களுக்கு இனிப்பு.. காவல்துறை காட்சிகள் கண்களுக்கு காரம்.

ஆதித்யா மற்றும் சூர்யாவின் இசையில் பாடலும் பின்னனி இசையும் ரசிக்கலாம்.

நல்ல படத்தை எவர் எடுத்தாலும் ஒரு சில பிரபலங்களே அவர்களுக்கு ஆதரவு கரம் கொடுத்து அந்த படைப்பை பிரபலமாக்குகிறார்கள்.

இந்த படைப்புக்கு இயக்குனர் வெற்றிமாறன் & BOFTA தனஞ்செயன் தோள் கொடுத்து வெளியீட்டுக்கு உதவியுள்ளனர். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்…

ஆக.. அப்பாவி மனிதனை அதிகார வர்க்கம் மிரட்டும்.. ஆகவே காவலர்களை கவனிக்கவும்..

Kavalthurai Ungal Nanban review rating

சூப்பர் சூர்யா… அபாரம் அபர்ணா.; சூரரைப் போற்று விமர்சனம் – 4.25/5

சூப்பர் சூர்யா… அபாரம் அபர்ணா.; சூரரைப் போற்று விமர்சனம் – 4.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உண்மைக்கதை

இந்த படம் ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனத்தின் நிறுவனரான கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை பற்றி எழுதப்பட்ட “சிம்பிள் ஃப்ளை” என்ற நூலின் படைப்பாகும்.

நடிகர்கள் – சூர்யா, மோகன்பாபு, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, பூ ராமு, மற்றும் பலர்.
இசை – ஜிவி. பிரகாஷ்
ஒளிப்பதிவு – நிகேஷ்
இயக்கம் – சுதா கொங்கரா
தயாரிப்பாளர் – சூர்யா

கதைக்களம்..

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர்கள் பூ ராமு (ஆசிரியர்)-ஊர்வசி தம்பதி. இவர்களின் மகன் சூர்யா.

அந்த பகுதியில் ரயில் வசதி இல்லாத நிலையில் அதற்காக போராடி குடும்பத்தினர் ரயிலை வர வைக்கின்றனர். இப்படி ஊருக்கான சேவைகளையும் செய்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா) படித்து விமானப்படையில் சேர்கிறார்.

தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது அவசரமாக ஊருக்கு வர நினைக்கிறார். விமானப்படையில் பணி புரிந்த போதும் அவரிடம் பணமில்லாத காரணத்தினால் விமான பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.

சரியான நேரத்திற்கு சென்று தந்தையை காணமுடியவில்லை.

எனவே ஒருகட்டத்தில் அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு சொந்தமாக விமான நிறுவனம் தொடங்க திட்டமிடுகிறார் மாறன்.
அனைத்து ஏழைகளும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார்.

சூர்யாவின் திட்டத்தை தெரிந்துக் கொண்ட மற்றொரு விமான நிறுவன தொழிலதிபர் பரேஷ் ராவல் பிரச்சினைகள் கொடுக்கிறார்.
இறுதியாக அந்த சூழ்ச்சிகளை நெடுமாறன் ராஜாங்கம் எப்படி வென்றார்? என்பதே கதை.

கேரக்டர்கள்

தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளராகவும் சிறந்த நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதில் நடிகராகவும் ஜொலிக்கிறார் சூர்யா.

தொழிலபதிர்களாக வர துடிக்கும் வாலிபர்கள் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்.

விமான பயணம் செய்ய கையில் காசு இல்லாமல் கெஞ்சும் காட்சிகளாகட்டும் தந்தையை காண முடியாமல் தாய் காலில் விழும் காட்சிகளாகட்டும் அட..டா… என்னய்யா பின்னுறீயே… சூர்யா..

தன் ஊருக்கு ரயில் வரவேண்டி போராடும் 18 வயது இளைஞனாக வரும் காட்சியிலும் அருமை.

சூர்யா ஒரு பெரிய நடிகர்… இப்படி அடிக்கடி இவ்வளவு கெட்ட வார்தைகளை பேச வேண்டுமா? என்பதே கேள்வியாக உள்ளது. யதார்த்தம் என்றாலும் அதை மியூட் செய்திருக்கலாம்.

அபர்ணாவுடன் சூர்யாவுக்கு செம கெமிஸ்ட்ரி. இந்த ஜோடி இனி தொடர்ந்தாலும் ஆச்சரியமில்லை.

அபர்ணா கர்ப்பம் என்பதை வேறுமாதிரியாக சொல்ல… ஏண்டீ நீ சாதாரண பெண் போல பேசவே மாட்டியா? என கேட்பதிலும் ரசிக்க வைக்கிறார்.

அபர்ணா.. ஆஹா.. ஓஹோ.. என்று சொல்லுமளவுக்கு சூப்பர் நாயகி. என்னதான் கணவர் விமான நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தாலும் தனக்கு ஒரு பிசினஸ் வேண்டும் என பொம்மி பேக்கரி ஆரம்பித்து அதை விளம்பரப்படுத்து காட்சியில் சபாஷ் போட வைக்கிறார்.

ஜடையை முன்னாடி போட்டு முதுகு அழகை காட்டி அபர்ணா பேசும் அந்த கிராமத்து பாஷையில் சிட்டி இளைஞர்களே சொக்கி போவார்கள்.

படம் முழுவதும் ப்ளைன் சாரி டிசைன் ஜாக்கெட் என அதிலும் ஒரு நேர்த்தியான அழகை காட்டியிருக்கிறார்.

மோகன் பாபு மற்றும் பூ ராமு மற்றும் ஊர்வசி ஆகியோர் அருமையான நடிப்பை வழங்கியுள்ளனர்.

கத்தாமல் சண்டை போடாமல் மிரட்டாமல் அனைத்தையும் செய்கிறார் தொழிலதிபர் வில்லன் பரேஷ் ராவல். இவரின் பார்வையே செம கெத்து.

காளி வெங்கட், விவேக் பிரசன்னா, கருணாஸ், வினோதினி, ஞானசம்பந்தம், ஆர்எஸ். சிவாஜி, சூப்பர் குட் சுப்ரமணி என அனைவரும் கச்சிதம். கதைக்கேற்ற கதாபாத்திரங்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

அசுரனுக்கு பிறகு தனது இசை சாம்ராஜ்யத்தை அரங்கேற்றியிருக்கிறர் ஜி வி பிரகாஷ். படத்தின் ஆரம்ப காட்சி விமான தரையிரங்கும் அந்த காட்சியே நம்மை சீட் நுனிக்கு வரச் செய்யும். (வீட்டில் அமர்ந்திருந்தாலும் அதான்..)

இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்களும் அருமை. பின்னியிருக்கிறார்.

நிகேத் அவர்களின் ஒளிப்பதிவு பிரம்மிக்க வைக்கிறது. எந்த காட்சியும் தேவையில்லை என சொல்ல தோன்றாது. எனவே எடிட்டர் சதீஷ் சூர்யாவுக்கும் சபாஷ் போடலாம்.

இறுதிச் சுற்றி படத்தில் நம்மை ஈர்த்த இயக்குனர் சுதா கொங்கரா இதிலும் அதை தக்க வைத்துள்ளார்.

என்னதான் படத்தை ஆன்லைனில் பார்த்தாலும் எதையும் பார்வேட் செய்ய தோன்றவில்லை. அப்படியொரு திரைக்கதை அமைத்துள்ளார் சுதா.

பொதுவாக உண்மை கதைகளை எடுக்கும்போது அது ஒரு டாக்குமெண்ட்ரி படங்கள் போல இருக்கும். ஆனால் இதில் தேவையான கமர்சியலை கலந்து அதை சுவையாக தந்திருக்கிறார் சுதா.

சில காட்சிகளை பார்த்தால் ஒரு நடுத்தர குடும்பம் எப்படி கோடிகளில் புரளும் ஒரு விமான நிறுவனத்தை ஆரம்பிக்க முடியும்? என்ற கேள்வி எழலாம். ஆனால் இது நிஜக்கதையை தான் படமாக்கியிருக்கிறார்கள். எனவே அந்த சந்தேகம் வேண்டாம்.

இந்த படம் தியேட்டரில் வெளியானால் சூர்யா ரசிகர்கள் தீபாவளியை இன்னும் சிறப்பாக கொண்டாடியிருப்பார்கள்.

தற்போது ஆன்லைனில் ரிலீஸ் செய்து அனைத்து தரப்பு மக்களையும் குடும்பத்துடன் போற்ற செய்துவிட்டார் தயாரிப்பாளர் சூர்யா.
ஆக.. சூப்பர் சூர்யா சுதா.. அபாரம் அபர்ணா என சொல்லாம்.

SOORARAI POTTRU FILMI STREET RATING 4.25/5

Soorarai Pottru Review rating

மனசை ரணமாக்கிய தமிழச்சி.. க/பெ ரணசிங்கம் விமர்சனம் 3.75/5

மனசை ரணமாக்கிய தமிழச்சி.. க/பெ ரணசிங்கம் விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

இராமநாதபுரத்து மாவட்ட இளைஞராக ரணசிங்கம் (விஜய்சேதுபதி).

தண்ணீர் பிரச்சினை முதல் ஊர் பிரச்சனைகளுக்கெல்லாம் முதல் ஆளாக குரல் கொடுக்கிறார். இதனால் (அலட்சியமான) அரசு அதிகாரிகளின் பகையைச் சம்பாதிக்கிறார்.

நாயகி அரியநாச்சி (ஐஷ்வர்யா ராஜேஷ்) உடன் ஒரு பக்கம் காதல் செய்கிறர்.

என்னதான் ஊர் பிரச்சினைக்காக ரணசிங்கம் போராடினாலும் சுயநலமான மக்கள் ஒரு கட்டத்தில் ரணசிங்கத்தை விட்டு விலகிவிடுகின்றனர்.

தன்னுடன் யாரும் நிற்கவில்லையே என வருத்தப்படும் ரணசிங்கம் இனி இது வேலைக்கு ஆகாது என மனைவியின் பேச்சை கேட்டு துபாய் நாட்டுக்கு வேலைக்கு செல்கிறார்.

ஆனால் அங்கு ஒரு கலவரத்தில் ரணசிங்கத்திற்கு பிரச்சினை.

இதனால் இந்தியாவில் கையில் குழந்தையுடன் கணவரை பார்க்க முடியாமல் போராடுகிறார். எத்தனை அரசு அதிகாரிகளை பார்த்தாலும் கணவரின் முகம் காணமுடியவில்லை. இறுதியில் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

ka pae ranasingam stills

கேரக்டர்கள்…
‘சீதக்காதி’ படத்தை போல சிறப்பு தோற்றத்தில் வருகிறார் விஜய்சேதுபதி. அதே சமயத்தில் தன் டிரேட் மார்க் நடிப்பை கொடுத்துள்ளார். முதல் பாதியில் ரணசிங்கம் என்றால் 2ஆம் பாதி அரியநாச்சி தான்.

கதையை தன் தோள்களில் தாங்கி அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. காக்கா முட்டை, கனா படங்கள் வரிசையில் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும்.

விவசாய விக்கெட்… கனா திரை விமர்சனம்

படத்தின் மெயின் ஹீரோ ஐஷ்வர்யா ராஜேஷ் தான் என சொல்லிவிடலாம். கல்யாணம் முதல் கணவனை மீட்க போரட்டம் வரை சிக்ஸர் அடித்துள்ளார் அரியநாச்சி. இதுபோன்ற நடிகைகள் தமிழ் சினிமாவில் ‘அரிய’வர்களே..

விஜய் சேதுபதியின் தங்கையாக வரும் ஜி.வி.பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ நடித்துள்ளார். முதல் படத்திலேயே நல்ல நம்பிக்கையளித்துள்ளார்.

மாவட்ட கலெக்டராக ரங்கராஜ் பாண்டே வருகிறார். இவரின் 2வது படத்திலும் நல்ல ரோல் கிடைத்துள்ளது. அதையும் சரியாக செய்துள்ளார்.

பந்தா எம்எல்ஏவாக நமோ நாராயணா கலக்கியிருக்கிறார்.

மனிதர்களாக பூ ராமு, வேல ராமமூர்த்தி, முனிஸ்காந்த், அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா என ஒவ்வொருவரும் அவரவர் கேரக்டர்களில் கச்சிதம்.

ka-pae-ranasingam-movie-pooja-photos-3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பின்னணி இசையிலும் சரி பாடல்களிலும் சரி நம் கவனம் ஈர்க்கிறார் ஜிப்ரான். கதைக்கு ஏற்ற இசையை மண்வாசத்துடன் கலந்துக் கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்… காட்சிகளை மீண்டும் பார்க்க மாட்டோமா? என ஏங்க வைத்துள்ளார். நேர்த்தியான படப்பிடிப்பு. வறண்ட நிலமாகட்டும் இரவு நேர கிராமத்து காட்சிகளாகட்டும் இரண்டையும் திறம்பட கொடுத்துள்ளார்.

எடிட்டர் தன் கத்திரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம். படத்தின் நீளம் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது-

சண்முகம் முத்துசாமியின் வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்க்கிறது.

இயக்குனர் விருமாண்டி.. தன் பெயருக்கு ஏற்ப தன் கதையிலும் காட்சியிலும் வசனத்திலும் கம்பீரத்தை கொடுத்துள்ளார்.

பல படங்களில் குணச்சித்ர நடிகராக நடித்த பெரிய கருப்பத் தேவரின் மகன்தான் இந்த இயக்குனர்.
தன் முதல் படத்திலேயே தமிழக தண்ணீர்ப் பிரச்சினையை துணிச்சலாக பதிவு செய்துள்ளார்.

தண்ணீர்ப் பஞ்சம் எப்படி ஏற்பட்டது? கருவேல மரங்களால் வரும் பிரச்சினைகள்… விவசாயிகள் நஷ்டம்.. வேளாண்மை செய்ய முடியாமல் போக என்ன காரணம்? என்பதையெல்லாம் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

கிராமத்து பக்கமே போகாத பலருக்கும் இது புது அனுபவத்தை கொடுக்கும்.

வசதியாக வாழ நினைத்தும் இந்தியாவில் பிழைக்க வழியில்லாமலும் தங்கள் பிள்ளைகளை, தங்கள் கணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பார்க்க வேண்டிய பாடம் இது.

ஆக… கணவர் பெயர் ரணசிங்கம் திரைப்படம்.. நிச்சயம் மனசை ரணமாக்கும்.

Ka Pae Ranasingam movie review rating

More Articles