தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : ஷபீர், அரவிந்த், பவித்ரா, ரவி ராகவேந்திரா மற்றும் பலர்.
இசை : ஜோஸ்வா ஸ்ரீதர்
ஒளிப்பதிவு : பானு முருகன்
எடிட்டிங் : எம்ஆர் ரஜீஷ்
இயக்கம் : ராகவேந்திர பிரசாத்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : மெயின் ஸ்ட்ரீம் புரடக்ஷன்ஸ் (ஜிவி கண்ணன்)
கதைக்களம்…
அடுத்த வீட்டு குழந்தைகளை நம் வீட்டு குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், நம் பிள்ளைகள் எப்படியெல்லாம் திசை மாறுவார்கள் என்பதே இதன் ஒன்லைன்.
எந்தவொரு விஷயத்திற்கும் அடுத்த வீட்டு பையன் வினோத்தை உயர்வாக சித்தரித்து பேசுகின்றனர் விக்ரமின் பெற்றோர்.
ஒரு சூழ்நிலையில் வினோத்தின் தாயை கொல்கிறார் விக்ரம். இதனால் வினோத்தை தத்தெடுத்து வளர்க்கின்றனர் விக்ரம் பெற்றோர்.
இதனால் மேலும் இந்த பகை வன்மமாக மாறி சொந்த குடும்பத்தையே எப்படி சீரழிக்கிறான் விக்ரம் என்பதே கதை
கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்…
படத்தில் மொத்தமே நான்கு ஐந்து கேரக்டர்கள் மற்றும் ஒரு ஒரு வீட்டின் சிறிய அறைதான். அதற்குள் தன் கற்பனைகள் மற்றும் அழகான பதிவை செய்திருக்கிறார் இயக்குனர் ராகவேந்திர பிரசாத்.
ஷபீர், அரவிந்த், பவித்ரா, ரவி ராகவேந்திர உள்ளிட்ட அனைவரும் அந்த சூழ்நிலைக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கும் காட்சிகள் அருமை.
ரோகினி மற்றும் பசங்க சிவக்குமார் ஆகியோர் ஓரிரு காட்சிகளில் வந்து செல்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் நாயகனை ஒரு கொலை செய்ய வற்புறுத்த வில்லன் கவுண்ட்டவுன் கொடுப்பது நிச்சயம் நம்மை சீட் நுனியில் அமர வைக்கிறது.
அதற்காக அவர் குழந்தையே கொல்ல வைக்கும் அந்த காட்சி பதறவைக்கிறது.
திரைக்கதையில் ஒரு அறையை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தால், நிச்சயம் போரடிக்கும்.
ஆனால் அதற்குள் சிறிய சிறிய ப்ளாஷ்பேக்குகள் என கொண்டு சென்று, கதைக்கு என்ன காரணம்? என ஒவ்வொன்றையும் சொல்லியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
இக்கதைக்கு ஜோசுவா ஸ்ரீதரின் பின்னணி இசையும், பானு முருகனின் ஒளிப்பதிவும் கை கொடுத்துள்ளன.
54321 இந்த கவுண்ட் டவுன் நிச்சயம் ஏறுமுகம்தான்