54321 விமர்சனம்

54321 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஷபீர், அரவிந்த், பவித்ரா, ரவி ராகவேந்திரா மற்றும் பலர்.
இசை : ஜோஸ்வா ஸ்ரீதர்
ஒளிப்பதிவு : பானு முருகன்
எடிட்டிங் : எம்ஆர் ரஜீஷ்
இயக்கம் : ராகவேந்திர பிரசாத்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : மெயின் ஸ்ட்ரீம் புரடக்ஷன்ஸ் (ஜிவி கண்ணன்)

54

கதைக்களம்…

அடுத்த வீட்டு குழந்தைகளை நம் வீட்டு குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், நம் பிள்ளைகள் எப்படியெல்லாம் திசை மாறுவார்கள் என்பதே இதன் ஒன்லைன்.

எந்தவொரு விஷயத்திற்கும் அடுத்த வீட்டு பையன் வினோத்தை உயர்வாக சித்தரித்து பேசுகின்றனர் விக்ரமின் பெற்றோர்.

ஒரு சூழ்நிலையில் வினோத்தின் தாயை கொல்கிறார் விக்ரம். இதனால் வினோத்தை தத்தெடுத்து வளர்க்கின்றனர் விக்ரம் பெற்றோர்.

இதனால் மேலும் இந்த பகை வன்மமாக மாறி சொந்த குடும்பத்தையே எப்படி சீரழிக்கிறான் விக்ரம் என்பதே கதை

543

கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தில் மொத்தமே நான்கு ஐந்து கேரக்டர்கள் மற்றும் ஒரு ஒரு வீட்டின் சிறிய அறைதான். அதற்குள் தன் கற்பனைகள் மற்றும் அழகான பதிவை செய்திருக்கிறார் இயக்குனர் ராகவேந்திர பிரசாத்.

ஷபீர், அரவிந்த், பவித்ரா, ரவி ராகவேந்திர உள்ளிட்ட அனைவரும் அந்த சூழ்நிலைக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கும் காட்சிகள் அருமை.

ரோகினி மற்றும் பசங்க சிவக்குமார் ஆகியோர் ஓரிரு காட்சிகளில் வந்து செல்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் நாயகனை ஒரு கொலை செய்ய வற்புறுத்த வில்லன் கவுண்ட்டவுன் கொடுப்பது நிச்சயம் நம்மை சீட் நுனியில் அமர வைக்கிறது.

அதற்காக அவர் குழந்தையே கொல்ல வைக்கும் அந்த காட்சி பதறவைக்கிறது.

54321 movie stills

திரைக்கதையில் ஒரு அறையை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தால், நிச்சயம் போரடிக்கும்.

ஆனால் அதற்குள் சிறிய சிறிய ப்ளாஷ்பேக்குகள் என கொண்டு சென்று, கதைக்கு என்ன காரணம்? என ஒவ்வொன்றையும் சொல்லியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

இக்கதைக்கு ஜோசுவா ஸ்ரீதரின் பின்னணி இசையும், பானு முருகனின் ஒளிப்பதிவும் கை கொடுத்துள்ளன.

54321 இந்த கவுண்ட் டவுன் நிச்சயம் ஏறுமுகம்தான்

மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் உள்ளிட்ட தனுஷின் மூன்று படங்களை தொடர்ந்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த தட்டத்து மறையத்து என்று படத்தை ரீமேக் செய்து தமிழுக்கு கொண்டு வந்துள்ளார் மித்ரன் ஜவஹர்.

நடிகர்கள் :
வால்டர் ப்லிப்ஸ், இஷா தல்வார், மனோஜ் கே ஜெயன், சிங்கமுத்து, ஷான், நாசர், தலைவாசல் விஜய், அர்ஜீனன், வித்யூலேகா ராமன், வனிதா மற்றும் பலர்.
இசை : ஜிவி. பிரகாஷ்
ஒளிப்பதிவு : விஷ்னு ஷர்மா
படத்தொகுப்பு : தியாகராஜன்
இயக்கம் : மித்ரன் ஜவஹர்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : சங்கிலி முருகன்

Meendum-Oru-Khadhal-Kathai-movie-still

கதைக்களம்…

ஒரு இந்து பையன் இஸ்லாமிய பெண்ணை காதலிக்கிறார். ஒரே மதம் என்றாலே பல பிரச்சினைகள் இருக்கும்.
இது இரண்டு மதங்கள் என்பதால் என்னென்ன பிரச்சினைகள் வருகிறது. அதை அவர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

மலையாளத்தில் நிவின் பாலி இஷா தல்வார் நடித்திருந்தனர். ஆனால் இங்கு நாயகன் மாற்றப்பட்டு இருக்கிறார்.

அறிமுக நாயகன் ல்டர் ப்லிப்ஸ் நடனங்களில் அசத்தியிருக்கிறார். நடிக்கவும் சில சமயம் முயற்சித்திருக்கிறார்.

காதல் காட்சிகளில் அழகாய் வர்ணித்து உருகுவது யதார்த்தம் என்றாலும், கொஞ்சம் ஓவராய் வழிவதாய் தெரிகிறது.

இஷா தல்வாரின் துப்பட்டா பற்றியும், காதலியை பற்றியும் ஜெயிலில் பேசிக் கொண்டே இருப்பது சலிப்பை தட்டுகிறது.

meendum5

முஸ்லீம் பெண்ணாக இஷா தல்வார். கண்களால் கவிதை பேசியிருக்கிறார். வீட்டிற்கு தெரியாமல் காதலை மறைப்பதும், பின்னர் வெளிப்படுத்தும் காட்சியும் நச்.

போலீஸின் கம்பீரம் எல்லாம் காமெடியாகி இருக்கிறது. மனோஜ் கே ஜெயன், சிங்கமுத்து இருவரும் கதை கேட்டுக் கொண்டே இருப்பது எல்லாம் ரொம்ப ஓவரோ ஓவர்.

அர்ஜீனன் மற்றும் வித்யூலேகா ராமன் வழக்கம்போல காதலுக்கு உதவுகிறார்கள்.

நாசர், தலைவாசல் விஜய், வனிதா என பெரிய நட்சத்திரங்கள் இருந்தும் அவர்களுக்கான காட்சிகள் இல்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் விஷ்னு ஷர்மா… இவர்கள் இல்லை என்றால் படமே இல்லை என்கிற அளவுக்கு படத்தை தங்கள் பணிகளால் தாங்கி நிற்கிறார்கள்.

சில பாடல்கள் கேட்ட டியூன்களாக இருந்தாலும், மெலோடியில் ரசிக்க வைக்கிறது. ஹீரோயின் வீடு முதல் கல்லூரி இடங்கள் வரை ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

படத்தின் ப்ளஸ்…

  • ஒளிப்பதிவு மற்றும் மெலோடி பாடல்கள்
  • கேரக்டர்கள் தேர்வு

படத்தின் மைனஸ்…

  • காதல் கதை தெரிந்த ஒன்றுதான். அதில் எந்த ட்விஸ்டும் இல்லை.
  • முதல் பாதி முழுவதும் பாடல்கள் வந்து கொண்டே இருக்கிறது.

Meendum Oru Kadhal Kadhai Movie Stills

இதற்கு முன் மித்ரன் ஜவஹர் எடுத்த படங்களில் இருந்த செண்டிமெண்ட், காமெடி இதில் மிஸ்ஸிங்.

முஸ்லிம் வீடு, கல்யாண பாடல், கேரளாவையே ஞாபகப்படுத்துகின்றன.

காவல் நிலையத்தை காதல் நிலையமாக மாற்றி, போலீஸ் அதிகாரிகள் அட்வைஸ் செய்ய வைத்திருப்பதெல்லாம் டூ மச்.

பெண்களின் பர்தா, உடலை மூடுவதற்குதான். மனசை மூடுவதற்கு அல்ல என்று முடித்திருப்பதால் இயக்குனர் சபாஷ் பெறுகிறார்.

மீண்டும் ஒரு காதல் கதை… காதலர்களை கவரும்

நம்பியார் விமர்சனம்

நம்பியார் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஸ்ரீகாந்த், சுனைனா, சந்தானம், ஜான்விஜய், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு மற்றும் பலர். ஆர்யா மற்றும் பார்வதி ஓமனக்குட்டன் (சிறப்பு தோற்றம்).
இசை : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு : எம். எஸ். பிரபு
படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்
இயக்கம் : கணேசா
பிஆர்ஓ : ஜான்
தயாரிப்பாளர் : கோல்டன் ப்ரைடே பிலிம் (வந்தனா ஸ்ரீகாந்த்)

கதைக்களம்…

மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாதிரியான நல்ல மனிதர்களை நாம் பார்த்து இருக்கிறோம்.

ஆனால் அவர்களுக்குள் இருக்கும் நம்பியாரின் (சினிமாவில் வரும் அந்த வில்லன் நம்பியாரை மட்டுமே சொல்கிறோம்.) கெட்ட எண்ணங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதே இப்படத்தின் கதை.

nam 1

கதாபாத்திரங்கள்…

எம்ஜிஆர் மாதிரியான நல்ல மனிதராக ஸ்ரீகாந்த், அவரது கேடு கெட்ட மனசாட்சியின் உருவமாக சந்தானம் நடித்துள்ளனர்.

சுனைனாவின் காதலுக்காக ஏங்குவது, தண்ணி அடித்துவிட்டு ரகளை செய்வது, பொறுப்பில்லாமல் திரிவது என நம்பியார் குணத்தால் ரசிக்க வைக்கிறார் ஸ்ரீகாந்த்.

நல்லவனாக வாழ முடியாமல் தவிக்கும் காட்சிகளில் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இன்னும் ஸ்மார்ட்டாகவே இருக்கீங்களே பாஸ் எப்படி?

நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தானத்தின் கல கல. ஆனால்… நிறைய காட்சிகளில் எரிச்சலை செய்யும் விதமாக ஓவராகவே பேசியிருக்கிறார். குறைத்திருக்கலாம்.

தன் உதடுகளாலும் கண்களாலும் ரசிகர்களை சுண்டி இழுக்கிறார் சுனைனா. ஒரு காட்சியில் நைட்டியில் வந்து கிறங்கடிக்கிறார்.

இவர்களுடன் ஜான்விஜய், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்டோரும் கொடுத்த பணியை செய்துள்ளனர்.

கௌரவ தோற்றத்தில் வந்து நண்பேன்டா ஆக வந்து செல்கிறார்கள் ஆர்யா மற்றும் பார்வதி ஓமனக்குட்டன். ஒரு பாடலுக்கு விஜய் ஆண்டனியும் வருகிறார்.

nambi

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஜய் ஆண்டனியின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. இரண்டு பாடல்கள் தாளம் போட வைக்கிறது.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு ‘பளிச்’ பதிவு. விவேக் ஹர்சன் சில காட்சிகளுக்கு கத்திரி போட்டு இருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

  • விஜய் ஆண்டனியில் இசையில், “தூங்கும் பெண்ணே தூங்காதே…”  பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
  • ஸ்ரீகாந்த் – சந்தானத்தின் கெமிஸ்ட்ரி
  • கண்களுக்கு விருந்தாக கலர்புல் ஹீரோயின் சுனைனா
  • சில காட்சிகளில்….  ஸ்ரீகாந்த் டீசர்டில் Together சந்தானம் டீசர்டில் To Get Her, Now Here – No Where என்ற க்ரியேட்டிவ்வாக யோசித்து இருக்கிறார் கணேஷா.

படத்தின் மைனஸ்…

  • சந்தானத்தை ஒரு கேரக்டராக உருவாக்கி கலாய்க்க விட்டிருந்துதால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
  • எல்லா காட்சிகளிலும் ஸ்ரீகாந்துக்கும் சந்தானத்திற்கும் ஒரே உடையாக இருக்கும்போது ஒரு சில காட்சிகளில் மனசாட்சியின் உடை மாறியது ஏன்? உதவி இயக்குனர்கள் கவனிக்க வில்லையா?

nam 2

இயக்குனர் பற்றி…

கெட்ட எண்ணங்களை அழித்தால் மட்டுமே நல்ல மனிதனாக வாழமுடியும் என்பதை  நீளமாக சொல்லிவிட்டார் இயக்குனர் கணேஷா.

அதற்கு ஒரு உருவம் கொடுத்து நடிக்க வைத்திருப்பது கொஞ்சம் வித்தியாசமான முயற்சிதான். ஆனால் ஸ்வாரஸ்யமான திரைக்கதையில் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார்.

இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து கொண்டிருப்பதை விட நிகழ்காலத்தை நினைத்து வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என சொல்லி முடிக்கிறார் இயக்குனர்.

மிரட்டாத இந்த நம்பியாரை பார்க்கலாம்.

 

தர்மதுரை விமர்சனம்

தர்மதுரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்ட்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்.கே.சுரேஷ், ராஜேஷ், ராதிகா சரத்குமார், கஞ்சா கருப்பு, மதுவந்தி அருண், சௌந்தரராஜா மற்றும் பலர்.
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு : எம். சுகுமார்
படத்தொகுப்பு : காசி விஸ்வநாதன்
இயக்கம் : சீனு ராமசாமி
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : ஆர் கே சுரேஷ் (ஸ்டூடியோ 9)

dd 1

கதைக்களம்…

ராதிகாவின் மகன்களில் ஒருவரான விஜய் சேதுபதி (தர்மதுரை) டாக்டர். ஆனால் வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு, வீட்டிலும் கலாட்டா செய்து கொண்டு இருக்கிறார்.

இதனால் அவமானப்படும் இவரது சகோதரர்கள், இவரை தீர்த்துக்கட்ட முடிவெடுகின்றனர்.

எனவே தர்மதுரையை வீட்டை விட்டு தற்காலிகமாக போக சொல்கிறார் ராதிகா.

அதன்பின்னர்…. ஒரு டாக்டர் ஏன் இப்படி ஆனார்? என்பதை அழகான குடும்பம் மற்றும் நட்புடன் பரிமாறி இருக்கிறார் சீனுராமசாமி.

dd 6

கதாபாத்திரங்கள்…

விஜய் சேதுபதி தனக்கான உரிய கேரக்டர்களை தேர்ந்தெடுக்கிறாரா? அல்லது தேர்ந்தெடுக்கும் கேரக்டருக்கு தன்னை மாற்றிக் கொள்கிறாரா? எனத் தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் ஸ்கோர் செய்து விடுகிறார் மனிதர்.

குடித்துவிட்டு இவரை போன்று மற்ற ஹீரோக்கள் கலாட்டா செய்வார்களா? என சொல்லமுடியாது. அப்படியொரு யதார்த்தத்தை கொடுத்து இருக்கிறார்.

அதுவும் ஸ்டைலாக இவர் இங்கிலிஷ் பேசுவதே தனி அழகுதான்.

நட்புக்காக உருகுவதும், காதலை இழந்து அழுவதும் என பிரித்து மேய்ந்து இருக்கிறார்.

dd 4

தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே இருவரும் அழகு என்றால் அவர்களின் நடிப்பு அதைவிட அழகு. தோழிகளாக வந்து படத்திற்கும் தோள் கொடுத்து இருக்கிறார்கள்.

அதிலும் ஒரு துளி கூட க்ளாமர் இல்லாமல் தங்கமாக ஜொலிக்கிறார் தமன்னா.

சீனியர் என்றால் விட்டுவிடுவோமா? நானும் இருக்கேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கிராமத்து பெண்ணை ஜெராக்ஸ் எடுத்து வந்திருக்கிறார்.

மாமா நான் உனக்கு செட் ஆவேனா? என் கேட்கும்போது தகுதி மீறிய கல்யாணத்தை அருமையாக சொல்கிறார். அதிலும் அம்மா முன் நின்று கொண்டு அழும் காட்சிகளில் கலங்கடிக்கிறார்.

இவர்களுடன் ராஜேஷ், ராதிகா, அருள்தாஸ், கஞ்சா கருப்பு, மதுவந்தி அருண், எம்எஸ் பாஸ்கர், சௌந்தரராஜா என அனைவரும் சிறப்பான தேர்வு. சரியான நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.

தர்மதுரையின் சகோதரி மகளாக வரும் சிறுமியும் அழகான தேர்வு.

dd 3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுவனின் இசையில் மக்க கழங்குதுப்பா செம்ம குத்து பாட்டு. அதற்கு தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் வந்து ஆட்டம் போடுகிறார். ,

எந்தப் பக்கம் கானும்போது வானம் ஒன்று…. ஆண்டிப்பட்டி ஆகிய பாடல்கள் அருமையான மெலோடி. இனி நிச்சயம் அடிக்கடி கேட்பீர்கள்.

கலை இயக்குனர் மற்றும் சுகுமாரின் ஒளிப்பதிவில் அத்தனையும் யதார்த்தம். கிராமத்துக்கே இருவரும் நம்மை அழைத்து சென்றுள்ளனர்.

dd 2

படத்தின் ப்ளஸ்…

  •  இயக்குனரின் திரைக்கதை மற்றும் கேரக்டர்கள் தேர்வு
  • கலை இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் படத்தின் பலம்
  • யுவனின் இசையில் இசைஞானியின் பாடல்களை கேட்ட திருப்தி. வைரமுத்துவின் வரிகள் கூடுதல் அழகை சேர்த்துள்ளது.

படத்தின் மைனஸ்…

  • எல்லாம் இருந்தும், படத்தின் நீளம் பெரும் குறையாக உள்ளது.
  • நிறைய நட்சத்திரங்கள் இருப்பதால் அவர்களுக்காக ஒவ்வொன்றையும் சொல்ல முற்பட்டு இருக்கிறார். அதிலும் ஸ்ருஷ்ட்டி டாங்கே காட்சியில் நிறைவு இல்லை.

dd 5

இயக்குனரை பற்றி….

  • காலேஜ் சண்டை நிரந்தரமல்ல. வாழ்க்கையில் மீண்டும் சந்திக்கும்போது கைகொடுப்பான் தோழன் என்பதை உணர்த்தும் காட்சி நச்.
  • உண்மையான டாக்டர் நிச்சயம் உயிர்களை காப்பாற்றுவார் என்பதை சொல்லும் சிறுவனுக்கு ஊசி போடும் காட்சி
  • மருத்துவம் படித்த மாணவர்கள் கிராமத்தில் பணிபுரிவது
  • ஆதரவற்ற திருநங்கைக்கு வேலை கொடுத்து, அவர்களையும் மதிப்பது.
  • தமன்னாவின் திருமண வாழ்க்கை சிசு கொலை
  • ஐஸ்வர்யா ராஜேஷ் மீன் பிடிக்கும் காட்சி கூட ரசிக்க வைக்கிறது
  • மணமகன் வரதட்சணை கேட்காவிட்டாலும் அவர்களது குடும்பத்தினர் கேட்பதால் வரும் பிரச்சினைகளை ஆணித்தரமாக அடித்துச் சொல்லியிருக்கிறார்.

என ஒவ்வொரு காட்சியிம் முத்திரை பதித்து இருக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி.

மொத்தத்தில் தர்மதுரை :  எப்பவும் ’வசூல்’ துரைதான்

 

ஜோக்கர் விமர்சனம்

ஜோக்கர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா, மு.ராமசாமி, பாவா செல்லத்துரை மற்றும் பலர்.
இசை : சியோன் ரோல்டன்
ஒளிப்பதிவு : செழியன்
படத்தொகுப்பு : சண்முகம் வேலுசாமி
இயக்கம் : ராஜீ முருகன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : டரீம் வாரியர்ஸ் (எஸ்ஆர் பிரகாஷ்பாபு, எஸ்ஆர் பிரபு)

joker ramya

கதைக்களம்…

இது ஒரு கதை என்பதை விட இதான் நாம் இன்றும் வாழும் வாழ்க்கை என்றே சொல்லலாம். நாட்டில் எது நடந்தாலும் கண்டுக்காமல் செல்லும் நம்மில், ஒருவர் அநியாயமாக நியாயத்திற்காக போராடினால் அவரை பிழைக்கத் தெரியாதவன் என்போம்.

அப்படியான ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கை இப்பதிவு.

நாயகன் குரு சோமசுந்தரம், தன்னை இந்த நாட்டின் ஜனாதிபதி என அழைத்து கொள்கிறார். நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக போரடுகிறார்.

இப்படியான ஒருவர் எதற்காக தன் மனைவியை கருணை கொலை செய்ய சொல்கிறார்? என கேள்விகளோடு இரண்டாம் பகுதி நகர்கிறது.

அதில் அழுத்தமான காரணங்களையும் உணர்வுகளையும் கொடுத்து இந்த சமூகத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜீமுருகன்.

joker tamil movie stills

கதாபாத்திரங்கள்…

ஆரண்யகாண்டம், ஜிகர்தண்டா ஆகிய படங்களில் நடித்த குரு சோமசுந்தரம், இதில் மன்னர் மன்னன் கேரக்டரில் ஒரு ஜனாதிபதியாக வாழ்ந்து இருக்கிறார்.

கொடுத்த கேரக்டரில் எந்தவொரு சமரசமும் இல்லாமல் அருமையாக வாழ்ந்திருக்கிறார். லுங்கி கட்டிக் கொண்டு சாதாரண மனிதனை கண் முன் நிறுத்தியிருக்கிறார்.

கோட் அணிந்துவிட்டு அவர் பேசும் பாவனைகள் சிரிக்க வைத்தாலும் நிச்சயம் உங்களை பல முறை யோசிக்க வைக்கும்.

ரம்யா மற்றும் காயத்ரி என இரண்டு நாயகிகள். இவர்களை நீங்கள் நேரில் பார்த்தாலும் உங்களால் அடையாளம் காண முடியாது. அப்படி ஒரு யதார்த்த பதிவை இவர்கள் வழங்கியுள்ளனர்.

கோண மண்டை புடிக்கல என நாயகனை உதறிவிட்டு, பின் கொஞ்சம் கொஞ்சமாக ரம்யா பாண்டியன் மனம் மாறுவது மலர்ச்சி.

புகுந்த வீட்டில் என்ன வசதி இருக்கிறது? கேட்டுவிட்டு டாய்லெட் பற்றி கேட்கும் இடத்தில் பெண்களின் உணர்வுகளை கண்களில் பிரதிபலிக்கிறார்.

என்னதான் கணவன் சந்தோஷமாக வைத்திருந்தாலும் அடிக்கடி கட்டி முடிக்கப்படாத டாய்லெட்டை பார்க்கும்போது  அவர்களின் மன உளச்சலையும் காட்டியிருக்கிறார்.

தங்கள் குழந்தை சூப்பர் சிங்கரில் பாடனும், நாம டிவியில அழனும் என கூறி டிவிக்களின் டிஆர்வி ரேட்டிங்கையும் சாடியிருக்கிறார்.

joker tamil movie 4

ஹீரோவுக்கு பக்கபலமாக இருந்து உதவும் காயத்ரி, க்ளைமாக்ஸில் நாளை போராட்டமா? நான் தயார் தோழரே என கூறும்போது இசை கேரக்டருக்கே பலம் சேர்த்திருக்கிறார்.

இன்று சமூகத்தில் அதிகளவில் மாற்றத்தை உண்டாக்கும் பேஸ்புக்கை ஒரு நற்பணிக்காக இவர் பயன்படுத்துவது நச்.

அதிலும்  டிவி நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி வருவாரா? என யுவகிருஷ்ணா, அதிஷா உள்ளிட்ட ஆர்வலர்கள் கமெண்ட்ஸ் போடுவதையும் விட்டு வைக்கவில்லை.

மு.ரா. என்று அழைக்கப்படும் மு.ராமசாமி. படத்தின் அடுத்த ஹீரோ. இவர் போல் ஒருவர் போராட நமக்கு துணையாக வரமாட்டாரா?  என எண்ணத் தோன்றும்.

க்ளைமேக்ஸில் இவர் கேட்கும் கேள்விகளுக்கு எவராலும் பதில் சொல்லமுடியாது.

ப்ளாஷ்பேக் காட்சியில் வரும் எழுத்தாளர் பவா செல்லதுரை படத்தின் உயிர்நாடி. காட்சிகள் கொஞ்சம் என்றாலும் மனம் முழுவதும் நிறைந்து நிற்கிறார்.

joker 3

படத்தின் பிளஸ்…

  • மைனஸ் ஒன்றுமில்லாத இப்படத்தில் எல்லாமே ப்ளஸ்தான்.
  • செழியனின் கேமரா கவிதையாய் விரிந்து இருக்கிறது.
  • பறவை பார்வையில் நாயகன் கிராமத்துக்குள் உலா வருவதைக் காண்பித்தல் நச்.
  • ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். என்னங்க சார் உங்க சட்டம்? செல்லம்மா பாடல்கள் மனதில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
  • சதீஷ்குமார் கலையில் கிராமங்களும் அந்த வீடுகளும் கொள்ளை அழகு.
  • இவையில்லாமல்  வசனங்கள், காட்சி அமைப்பு, யதார்த்த பதிவு என அனைத்தையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

joker tamil movie pava

கைகொடுக்கும் முக்கியமான காட்சிகள்…

  • மினரல் வாட்டர் நிறுவனத்தின் பெயர் ‘AMA’, ‘
  • மதுவால் இறந்தவர் இங்கே… மதுவைத் திறந்தவர் எங்கே உள்பட பலர் பேனர்கள்
  • அரசு அலுவலகத்தில் ஆமையை விடுதல்
  • கக்கூஸ் கட்டியதாக அரசிடம் கணக்கு காட்டும் அந்த போட்டோ காட்சிகள்
  • டாய்லெட் இடிந்து விழும் அந்த கனமழை காட்சிகளும் அதன் பின்னணிகளும்

jo 2

கைகொடுக்கும் வசனங்கள்…

  • விமானத்தை கையெடுத்து கும்பிடுதல், அரை நாள் உண்ணாவிரதத்துக்கு ஏன் ஏர் கூலர்?
  • இஸ்லாம் பிறைக்கும் சிவன் பிறைக்கும் முடிச்சு போட்டு பேசும் மேடைபேச்சு
  • குண்டு வைக்கிறவன விட்டுங்க, கோயில்ல உண்டக்கட்டி வாங்குறவன் பிடிங்க?
  • கக்கூஸ்ல ஊழல் பண்ற உங்ககிட்ட கருணையை எப்படி எதிர்பார்க்கிறது?
  • ஹீரோவைவிட வில்லனைத்தான் இப்போ ஜனங்களுக்கு பிடிக்குது
  • நிம்மதியா வாழவும் விடல பேளவும் விடல இவிங்க
  • எந்த போலீஸ் ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா?’
  • கக்கூஸ் கட்டுன காசு நாறாது
  • சகாயம் பண்ணல.. அட்லீஸ்ட் சகாயம் மாதிரி பண்ணுங்க
  • நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?
  • உங்களுக்கு நல்லது பண்ணினா நான் பைத்தியக்கரனா? போங்கடா போய் பீயை தின்னுங்க.? லாட்ஜ்ல பிராத்தல் பண்ணுங்க
  • நாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்… அவன டிஸ்மிஸ் பண்ண உரிமை இல்லையா….?

இப்படியான சாட்டையடி வசனங்கள் கூடுதல் பலம்.

jo 1

இயக்குனர் ராஜீமுருகன்…

இப்படியான ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதற்கு ஒத்துழைத்த தயாரிப்பாளரையும் பாராட்டியே ஆகவேண்டும்.

பொதுவாக அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், போலீஸ் ஆகியோரை எதிர்க்கும் ஒருவரை மாஸ் ஹீரோவாக நாம் பார்த்திருப்போம். அதுதான் தமிழ் சினிமாவின் சக்ஸஸ் பார்முலாவும் கூட.

ஆனால் இங்கே இவர்களை எதிர்க்கும் ஹீரோவே நீங்கள்தான். நம்மை மறந்து பல முறை கைதட்டல்கள் அள்ளிச் செல்கிறார் இந்த ஹீரோ டைரக்டர்.

மொத்தத்தில் இந்த ஜோக்கர் – இந்தியாவின் ரியல் ஹீரோ

 

 

முடிஞ்சா இவன புடி விமர்சனம்

முடிஞ்சா இவன புடி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சுதீப், நித்யா மேனன், முகேஷ்திவாரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், சரத் லோகிஸ்தவா, நாசர், இமான் அண்ணாச்சி மற்றும் பலர்.
இசை : இமான்
ஒளிப்பதிவு : ராஜா ரத்தினம்
படத்தொகுப்பு : பிரவீண் ஆண்டனி
இயக்கம் : கேஎஸ் ரவிக்குமார்
பிஆர்ஓ : ரியாஸ் கே அஹ்மத்
தயாரிப்பாளர் : ராம்பாபு புரொடக்ஷன்ஸ் (சூரப்பா பாபு)

கதைக்களம்…

கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் ஒருவன் போலீஸ் துறைக்கே தண்ணி காட்டுகிறார். முடிஞ்சா இவன புடி என தன் திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

கதாபாத்திரங்கள்…

இதுநாள் வரை நாம் பார்த்த வில்லன் சுதீப், இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.  கன்னடத்தில் இவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது தங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

எனவே ஹீரோவுக்கே உரித்தான மாஸ், ஆக்ஷன், மசாலா, சென்டிமெண்ட் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். படு ஸ்டைலிஷாக உயர்ந்து நிற்கிறார்.

காதலிக்காக ஏங்கினாலும், டூயட் காட்சிகளில் கெமிஸ்ட்ரி இல்லை.

நாயகியாக நித்யா மேனன்… அழகு பதுமையாகவும் காதலனை நல்வழிப்படுத்தவும் வந்து செல்கிறார்.

நாசர், பிரகாஷ் ராஜ் ஆகிய இருவரும் தங்களுடைய காட்சிகளில் முத்திரை பதிக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் தந்தையாக தனித்து நிற்கிறார்.

காமெடி காட்சிகளில் சதீஷின் டைமிங் காமெடி கைகொடுக்கிறது.

வில்லன்களாக வரும் முகேஷ் திவாரி, சரத் லோகிஸ்த்வா இருவரும் கொஞ்சமே மிரட்டியிருக்கிறார்கள்.

போலீஸாக வரும் சாய்ரவி மிரட்டலும் காமெடியும் கலந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

இவர்களுடன் அவினாஷ், லதா ராவ், இமான் அண்ணாச்சி, டெல்லி கணேஷ் ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் ஓரிரு பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை பழைய தாளங்களை அடிக்கடி நினைவு படுத்துகிறது. ஆக்ஷன் காட்சிகளில் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது.

ராஜரத்தினம் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி.

படத்தின் ப்ளஸ்…

  • ஒருவரை இருவராக காட்டி கொஞ்சம் திரைக்கதையில் விளையாடியிருக்கிறார் கேஎஸ்ஆர்
  • வில்லனை ஹீரோவாக்கி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மாஸ்.

படத்தின் மைனஸ்…

  • வில்லன் + மன்மதன் படங்களை உல்டா செய்து இருக்கிறார். இரண்டிலும் சென்டிமெண்ட் டச்சிங்கா இருக்கும். இதில் மிஸ்ஸிங்.
  • பாடல்கள் கன்னடத்திற்கு  மேட்ச் ஆகும் போல. தமிழுக்கு அவ்வளவாக ஒட்டவில்லை.

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நாம் ரெகுலராக எதிர்பார்க்கும் விஷயங்கள் இதில் மிஸ்ஸிங். மற்றபடி  முடிஞ்சா இவன புடிச்சி ஒரு முறை பார்க்கலாம்.

மொத்தத்தில் முடிஞ்சா இவன புடி… ஆக்ஷன் பிரியர்களுக்கு புடிக்கும்

 

 

 

 

 

 

More Articles
Follows