தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
டாக்ஸி டிரைவரின் வாழ்வியலையும் அவர்களின் போராட்டத்தையும் சொல்லும் 4554.
அறிமுக இயக்குனர் கர்ணன் மாரியப்பன் இயக்கத்தில் அசோக், ஷீலா, ஜாக்குவார் தங்கம், பெஞ்சமின், கோதண்டம் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதைக்களம்…
முருகா படத்தில் நடித்த அசோக் இதில் நாயகன்.
இவர் ஜாக்குவார் தங்கம் வைத்திருக்கும் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிகிறார். இவரது சொந்த வண்டியை அந்த நிறுவனத்திற்கு ஓட்டுகிறார்.
அசோக்கும் நாயகி ஷீலா நாயரும் காதலிக்கின்றனர். பெற்றோர் சம்மதத்துடன் நாளை மறுநாள் திருமணம்.. நாளை திருமண நிச்சயதார்த்தம் என்று இருக்கும் நிலையில் இவருக்கு திடீரென பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டி சவாரி வருகிறது..
முதலில் மறுக்கும் அசோக் வேறு வழியில்லாமல் சவாரிக்கு செல்கிறார்.
அந்த பயணத்தில் நான்கு பயணிகள் பயணிக்கின்றனர். (அவர்கள் துபாய் செல்ல சென்னை ஏர்போர்ட் செல்கின்றனர்) அதில் கோதண்டம் டிரைவர் அசோக்கை வெறுப்பேற்றிக் கொண்டே வருகிறார். பல கட்ட பிரச்சனைகளுக்கு பிறகு அவர்களை இறக்கிவிட்டு தன் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு வேகமாக திரும்பி வருகிறார் அசோக்.
அப்போதுதான் கோதண்டம் தவறவிட்ட பாஸ்போர்ட் இவரது காரில் கிடப்பதை பார்க்கிறார். இந்த தகவலை கோதண்டத்திற்கு அசோக் தெரியப்படுத்த.. “தம்பி என்னுடைய வாழ்க்கையே அதில் தான் இருக்கிறது. நான் வெளிநாடு செல்ல வேண்டும்.. தயவு செய்து வந்து கொடுத்து விடு” என சொல்கிறார் கோதண்டம்.
தன்னை வெறுப்பேற்றிய கோதண்டத்தின் வாழ்வை பார்ப்பதா.? தன் காதல் திருமணத்தை பார்ப்பதா? என தவிக்கிறார்.
என்ன செய்தார் அசோக்.? என்பதே கதை.
கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…
நாயகன் அசோக் – நாயகி ஷீலா நாயர். இருவரும் கொடுத்த வேலையை செய்ய தங்களால் முடிந்த வரை முயற்சித்துள்ளனர்.
இவர்களது ரொமான்ஸ் பெரிதாக இல்லை.. காதலில் நெருக்கம் கூடியிருந்தால் நமக்கும் க்ளைமாக்ஸில் அடுத்தது என்ன நடக்குமோ? என்று எதிர்பார்ப்பு இருந்திருக்கும். ஆனால் அது மிஸ்ஸிங்.
காரில் பயணிக்கும் சக பயணிகளாக காமெடி நடிகர்கள் பெஞ்சமின் கோதண்டம் உள்ளனர். காமெடி ரசிக்கும் படி இல்லை.
இயக்குனர் தன் குடும்பத்தில் உள்ளவர்களை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே சில காட்சிகளை வைத்துள்ளார். அது தவறில்லை.
ஆனால் அவர்களிடம் அதற்கு ஏற்ப வேலையை வாங்கி இருக்கலாம். அவர்களும் ஏனோ தானோ என வசனம் பேசி செல்வதாகவே உள்ளது.
பாடல்கள் கவனம் பெறவில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. படத்தின் டைட்டிலை அடிக்கடி காட்ட வேண்டும் என்பதற்காகவே.. கார் நம்பர் பிளட்டை காட்டிக் கொண்டே இருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதுவும் அடிக்கடி ஒரே ஆங்கிளில் காட்டிக் கொண்டிருப்பது ஏனோ.? தெரியல.
கர்ணன் மாரியப்பன் என்போர் இயக்கியிருக்கிறார்.. இதுவரை காட்டப்படாத டாக்ஸி டிரைவரின் வாழ்க்கையையும் போராட்ட களத்தையும் காட்டி இருப்பது சிறப்பு.
முக்கியமாக உடன் பயணிப்பவர்கள் டிரைவரை வெறுப்பேற்றுவதாலும் அவர்கள் மனநிலையை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வதும் எத்தகைய விளைவுகளை சந்திப்போம் என்பதை காட்டி இருக்கின்றார்.
க்ளைமாக்ஸில் பேசப்படும் வசனங்களும் காட்டப்படும் காட்சிகளும் செயற்கை தனமாக உள்ளது. அதை இன்னும் உணர்வுப்பூர்வமாக காட்டிருந்தால் இந்த கார் பயணம் சிறப்பாக அமைந்திருக்கும்.
ஆக இந்த 4554…. ஒரு டிரைவரின் சவாரிகளையும் சவால்களையும் சொல்ல முயற்சிக்கிறது…