பேய்கள் முன்னேற்ற கழகத்தில் அட்மிஷன்.. ; அஞ்சலிக்கு ஜோடியாகும் யோகி பாபு

பேய்கள் முன்னேற்ற கழகத்தில் அட்மிஷன்.. ; அஞ்சலிக்கு ஜோடியாகும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babu anjali‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் யோகி பாபு.

அந்த படம் சூப்பர் ஹிட்டாகவே சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

தற்போது அஞ்சலிக்கு ஜோடியாக பூச்சாண்டி என்ற படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு.

‘பூச்சாண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரை தன் ட்விட்டரில் வெளியிட்டு “மக்களே பேய்கள் முன்னேற்ற கழகத்தில் அட்மிஷன் ஆரம்பித்துள்ளது. அதற்கு சில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் (T&C) உள்ளன” என பதிவிட்டுள்ளார் யோகி பாபு.

கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைப்பாளராகவும், மருது ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர்.

சந்தானம் நடித்த ’டிக்கிலோனா’படத்தை தயாரித்த கேஎஸ் சினிஷ் ‘பூச்சாண்டி’ படத்தை தயாரிக்கிறார்.

Yogi Babu and Anjali joins for Poochandi

சிங்கிள் ஷாட்டில் ‘இரவின் நிழல்’.; இன்னும் வாடகை வீட்டில் இருந்து படமெடுக்கும் பார்த்திபன்

சிங்கிள் ஷாட்டில் ‘இரவின் நிழல்’.; இன்னும் வாடகை வீட்டில் இருந்து படமெடுக்கும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthiban iravin nizhalசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி பரிசு வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டார் நடிகர் பார்த்திபன். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது…

செய்யாமல்செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது,,,,

வணக்கம்,

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். பத்திரிக்கையாளர்களை எப்போதும் நான் பிரஸ் மக்கள் என்று அழைத்ததே இல்லை எப்போதும் பிளஸ் மக்கள் என்றே அழைப்பேன். முப்பது வருடங்களுக்கும் மேல் என் முதல் படம் துவங்கி இப்போதும் அடுத்த படம் வரையிலும்கூட பத்திரிக்கையாளர்களின் கருத்துக்களும் பாராட்டுக்களையும் எப்போதும் எதிர்பார்ப்பவன் நான். வெகுஜன மக்களின் விமர்சனங்களை காட்டிலும் பத்திரிக்கையாளர்களின் விமர்சனங்களை எதிர் பார்த்து காத்திருப்பவன் நான்.

ஏனெனில் பத்திரிக்கையாளர்கள் கொடுக்கும் விமர்சனங்கள் என் அப்பாவும் அம்மாவும் எனக்கு கொடுக்கும் பாராட்டு போன்றது.

எனது அடுத்த படம் முழுமையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் இப்படத்திற்கு இரவின் நிழல் என்று பெயர். இதற்கு முன்பும் நிறைய சிங்கிள் ஷாட் படங்கள் வந்திருக்கின்றன ஆனால் இந்த படம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். இப்படத்திற்கான முதலமைச்சர் சந்திப்பு கூட இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.

அதாவது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள ரயில் டிக்கெட் துவங்கி அனைத்து செலவையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். அதைப்போல் சினிமாவிலும் இம்மாதிரியான வித்தியாசமான முயற்சிகள் எடுக்கும் கலைஞர்களை படம் எடுத்த பின் ஒரு கேடயம் கொடுத்து பாராட்டுவதற்கு பதிலாக எடுத்துக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கொடுக்கலாம் என்னும் திட்டத்திற்காக முதலமைச்சரை சந்திக்க இருந்தேன்.

அந்த வேலைகளில் மும்முரமாக இருந்த காரணத்தினாலேயே இந்த சங்க விழாவில் கலந்து கொள்ள சற்று தயங்கினேன். ஆனால் அதையும் மீறி இந்த நிகழ்ச்சியில் எப்படியேனும் கலந்து கொள்ள வேண்டும் என்று நேரம் ஒதுக்கி கலந்து கொண்டேன்.

சமீபத்தில் OTP என்னும் ஒரு வெடி பிரபலமாகி வருகிறது. அதாவது திரியைப் பற்ற வைத்தவுடன் நம் மொபைலுக்கு ஒரு OTP எண் வரும் அந்த அளவிற்கு இன்று டிஜிட்டல் மயம் எங்கும் எதிலும் அதிகரித்துவிட்டது.

இப்படியான வேளையில் தீபாவளி போன்ற பண்டிகையிலாவது குடும்பமாக இப்படி ஒரு சங்கம் இருப்பின் சங்க உறுப்பினர்களோடு என இணைந்து பண்டிகைகளை கொண்டாடுவது தான் மகிழ்ச்சி.

அப்படி ஒன்றிணைந்து இருக்கும் இந்த சங்கத்தின் விழாவில் நானும் ஒருவனாக இருப்பதில் மேலும் மகிழ்ச்சி.

உறுப்பினர்களுக்கு பெரிதாக நான் ஏதும் செய்யவில்லை என்னால் முடிந்த உதவியை ஒரு மனிதனாக சக மனிதனுக்கு செய்து இருக்கிறேன் அவ்வளவே. என்னைப்பொருத்தவரை எப்போதும் நான் வாடகை வீட்டில் இருக்கும் ஒரு இயக்குனர் தான். அதற்காக நான் எப்போதும் வருத்தப்பட்டதில்லை காரணம் நான் இப்போதும் படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன்.

இவர் ஒரு பெரிய ஓய்வு பெற்ற இயக்குனர் இந்த தெருவே அவருடையதுதான் நிறைய பங்களாக்கள் வாங்கிப் போட்டிருக்கிறார் என்னும் பெயரை விட இப்போதும் அவர் படம் செய்து கொண்டிருக்கிறார் என்னும் வார்த்தைதான் எனக்கு வேண்டும்.

இப்போதும் நான் தடையின்றி படம் செய்து கொண்டிருக்கிறேன் என்றால் அது பத்திரிக்கையாளர்கள் நீங்கள் கொடுக்கும் உற்சாகமும் உத்வேகமும் மட்டுமே அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Parthiban’s next film is titled Iravin Nizhal

ரஜினி வாழ்க்கை படத்தில் தனுஷை நடிக்க வைக்க விரும்பும் இயக்குனர்

ரஜினி வாழ்க்கை படத்தில் தனுஷை நடிக்க வைக்க விரும்பும் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Dhanushமகாத்மா காந்தி, பாரதி, காமராஜர், பெரியார் ஆகிய தலைவர்களின் படங்கள் திரைப்படமாக வெளியாகியுள்ளது.

தற்போது ஜெயலலிதா வாழ்க்கையும் தி ஐயன் லேடி, தலைவி, குயின் ஆகிய பெயர்களில திரைப்படமாக வளர்ந்து வருகின்றன.

இந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க விரும்புவதாக இயக்குனர் லிங்குசாமி தன் விருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

நான் ரஜினியின் தீவிர ரசிகர். என் பட ஹீரோக்களிடம் ரஜினி ஸ்டைல் இருக்கும்.

ஆனால் இதுவரை ரஜினியை வைத்து படம் இயக்கவில்லை.

ஆனால் அவருடைய வாழ்க்கையைப் படமாக்க விரும்புகிறேன்.

ரஜினி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.” என லிங்குசாமி கூறியுள்ளார்.

Dhanush to act in Rajinikanth’s biopic?

தீபாவளிக்கு சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன் ட்ரீட்..; ‘மாஸ்டர்’ மௌனம் கலைப்பாரா?

தீபாவளிக்கு சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன் ட்ரீட்..; ‘மாஸ்டர்’ மௌனம் கலைப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay dhanush simbu sivakarthikeyanஇந்தாண்டு 2020ஐ உலக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.

எத்தனையே பேரழிவுகளை நாம் இதற்கு முன்பு பார்த்திருந்தாலும் இதுபோல முடக்கத்தை மக்கள் எவருமே எதிர்பார்க்கவில்லை.

கிட்டத்தட்ட 1 வருடத்தை கொரோனா வைரஸ் முடக்கியுள்ளது.

இதிலிருந்து மக்கள் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டாலும் சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

நாளை நவம்பர் 10 முதல் சினிமா தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

சமூக இடைவெளியுடன் 50% பார்வையாளர்களை மட்டுமே தியேட்டரில் அனுமதியளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் தீபாவளிக்கு படங்களை திரையிட தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை.

எனவே தீபாவளிக்கு புதுப்படங்களை காண முடியாத ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளிக்கு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம், சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன், நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் ஆகிய படங்களின் டீசரை வெளியிடவுள்ளதாக அந்தந்த படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இவையில்லாமல் இன்னும் ஒரு சில படங்கள் டீசர் அல்லது ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் பட டீசர் வெளியாகும் எனவும் சில தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இவையில்லாமல் சூர்யா நடித்துள்ள சூர்ரைப் போற்று (நவம்பர் 12) மற்றும் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் (நவம்பர் 14 தீபாவளியன்று) ஆகிய படங்கள் ஆன்லைன் ஓடிடி தளத்தில் வெளியாகின்றன.

top celebrities movie teaser to release on diwali

நவ.10ல் தியேட்டர்கள் திறப்பு.; KKK-OMK ரீ-ரிலீஸ்.. தீபாவளி ரிலீஸ் இல்லை

நவ.10ல் தியேட்டர்கள் திறப்பு.; KKK-OMK ரீ-ரிலீஸ்.. தீபாவளி ரிலீஸ் இல்லை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

OMK and KKKகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு நாடெங்கிலும் பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு கிடந்தன.

மற்ற வணிகங்களுக்கு தளர்வுகளுடன் அனுமதியத்த தமிழக அரசு தியேட்டர்கள் திறக்க அனுமதியளிக்கவில்லை.

இதனையடுத்து ஒரு வழியாக நாளை நவம்பர் 10ந் தேத முதல் தியேட்டர்களை திறந்துக் கொள்ளலாம் என அனுமதியளித்துவிட்டது.

ஆனாலும் தியேட்டர்களில் புதுப்படங்களை திரையிடுவதற்கான விபிஎப் கட்டணத்தை இனி தியேட்டர் அதிபர்களே கட்ட வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இல்லாவிட்டால் புதிய படங்களை திரையிட மாட்டோம் எனவும் மறைமுக எச்சரிக்கை விடுத்தனர்.

இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் தீர்வு ஏற்படவில்லை.

இதனையடுத்து உங்கள் பிரச்சினையை பின்னர் வைத்துக் கொள்ளுங்கள். நாளை தியேட்டர்களை திறக்க வேண்டும் என அமைச்சர் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து நாளை முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது.

ஆனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே ஹிட்டான ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட ஹிட் படங்கள் ரி ரிலீஸ் ஆகின்றன.

மேலும் ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

KKK and OMK to re release in this diwali

அஜித் என்னை க்யூட் மாஸ்டர் என்றே அழைப்பார்.. – ‘பைட் மாஸ்டர்’ விக்கி

அஜித் என்னை க்யூட் மாஸ்டர் என்றே அழைப்பார்.. – ‘பைட் மாஸ்டர்’ விக்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Stunt master Vicky with Ajithதமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதற்கேற்றார் போல் இருக்கும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. இங்கு இருப்பவர்கள் பல மொழி படங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

அதற்கு படத்தின் யதார்த்தத்தை மீறாமல் இருப்பதே முக்கிய காரணம். அந்த வகையில் 2016ல் வெளியான “உரியடி” படத்தில் இடம் பெற்ற சண்டைக்காட்சிகள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக அந்தப் படத்தில் தாபாவில் நடக்கும் சண்டைக்காட்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சண்டைக் காட்சியை யதார்த்தமாகவும் தத்துரூபமாகவும் வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் விக்கிக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வீரம் படத்தில் இடம் பெற்ற அஜித்-அதுல் குல்கர்னி க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியை விக்கி அமைத்தார். இப்படத்தின் சண்டைக் காட்சியும் அதிக அளவில் பேசப்பட்டது.

இப்படத்தில் பயணித்த அனுபவம் பற்றி விக்கி கூறும்போது, நான் உரியடி படத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது, இயக்குனர் சிவா சார் தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. சிவா சாரை சந்தித்தபோது வீரம் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை அமைத்து தரும்படி கேட்டார். இரண்டாவதே அஜித் சார் படம் என்றவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. உடனே ஓகே சொல்லி மறுநாள் படப்பிடிப்புக்கு சென்றேன்.

அஜித் சாரை பார்த்தவுடன் புத்துணர்ச்சியும், தயக்கமும் ஏற்பட்டது. ஆனால் அவரோ என்னிடம் வந்து பேசி என்னுடைய தயக்கத்தைப் போக்கினார். அமராவதி படத்தில் இருந்த அதே அஜித் தான் தற்போதும். என்னிடம் எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்கலாம் என்று அவர் கூறினார். என்னுடைய தயக்கத்தைப் போக்கி சண்டைக்காட்சி அமைத்துக் கொடுத்தேன். சண்டைக் காட்சிக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்த அஜித் சார், என்னை க்யூட் மாஸ்டர் என்று சொல்லிவிட்டுச் சென்றார். எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

வீரம் படத்தை அடுத்து, உரியடி 2, அருவி, ஜோக்கர், மாயவன், சிலுக்குவார்பட்டி சிங்கம், விழித்திரு, அண்ணனுக்கு ஜே, ராட்சசன், வால்டர், சத்ரு போன்ற படங்களுக்கும், இதைத்தவிர பரத் நடிக்கும் நடுவண், அதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்திலும் பணியாற்றியிருக்கிறேன்.

தற்போது சூர்யா நடித்து வெளியாக இருக்கும் சூரரைப்போற்று படத்தில் சண்டைக்காட்சிகள் அமைத்து இருக்கிறேன். இப்படம் நவம்பர் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சண்டைக்காட்சிகள் அமைப்பது குறித்து விக்கி மேலும் கூறும்போது, நான் ஒவ்வோரு சண்டைக்காட்சி யையும் ஸ்டோரி போர்டு போட்டுதான் வேலை செய்வேன். அதுபோல் எந்த ஒரு சண்டைக் காட்சியை உருவாக்கும் போதும், ரிகர்சல் செய்து இப்படித்தான் திரையில் வரும் என்று இயக்குநருடன் காண்பிப்பேன். அது இயக்குனருக்கு பிடித்துப்போகவே சண்டைக் காட்சியை உருவாக்குவேன். இதுவே என்னுடைய மிகப்பெரிய பிளஸ் என்றார்.

சண்டை இயக்குனர் விக்கி தமிழ் மொழி மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், மராத்தி போன்ற பல மொழிப் படங்களிலும் பணியாற்றி வருகிறார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

Stunt master Vicky shared his working experience with Thala Ajith

More Articles
Follows