‘தெய்வமச்சான்’ டைட்டில் ஏன்.? மார்ட்டின் நிர்மல் குமார் ஓபன் டாக்

‘தெய்வமச்சான்’ டைட்டில் ஏன்.? மார்ட்டின் நிர்மல் குமார் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத், தீபா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘தெய்வ மச்சான்’.

இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் பேசுகையில்..

” இந்த கதை மீது நம்பிக்கை வைத்து, எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் உதயகுமார் மற்றும் வத்சனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தின் கதைக்கு பொருத்தம் என்பதால் ‘தெய்வ மச்சான்’ என பெயர் சூட்டி இருக்கிறோம். படத்தின் முன்னோட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. படத்திற்கும் ஆதரவளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Why Deivamachan title Director Martin Nirmal Kumar reveals reason

மச்சான் உறவு மகத்தானது.. ‘தெய்வ மச்சான்’ அதைவிட சிறப்பானது – பாண்டியராஜன்

மச்சான் உறவு மகத்தானது.. ‘தெய்வ மச்சான்’ அதைவிட சிறப்பானது – பாண்டியராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத், தீபா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘தெய்வ மச்சான்’.

இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் பாண்டியராஜன் பேசுகையில்…

‘ மச்சான் என்ற ஒரு வார்த்தையில் அற்புதமான ஒரு உறவொன்று இருக்கிறது. மனைவியின் தம்பி அல்லது அண்ணன். தூத்துக்குடி பகுதியில் மீனவர்கள் முத்து குளிக்க கடலுக்குள் இறங்கும்போது இடுப்பிற்குள் கயிறு கட்டி கடலுக்குள் குதிக்கும் முன், அதன் மறுமுனையை மச்சான் எனும் உறவின் முறையில் இருப்பவரிடம் தான் நம்பிக்கையுடன் அளித்துவிட்டு குதிப்பர்.

கடலுக்குள் முத்துக்காக குதித்தவர் முத்து கிடைத்தாலும்… கிடைக்கவில்லை என்றாலும்… கயிறை இழுத்து விட, அதன் நுட்பம் அறிந்து கடலுக்குள்ளிருந்து மேலே வரவழைப்பவர் மச்சான்.

இதே தருணத்தில் அண்ணன் – தம்பி என்ற உறவாக இருந்தால், சொத்து விசயத்தில் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கடலுக்குள் குதித்தவரை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவர். ஆனால் மச்சான் என்ற உறவு தான், தன் தங்கையின் தாலி பாக்கியம் நீடித்து நிலைக்க வேண்டும் என்ற பரிதவிப்புடன் நுட்பமாக கவனித்து கடலுக்குள் குதித்தவரை காப்பாற்றுவர். அந்த வகையில் மச்சான் என்ற உறவு அழுத்தமானது. மேலும் தெய்வ மச்சான் என்பது அதைவிட சிறப்பானது.

ஒரு முறை நண்பர் ஒருவருக்கு திருமண பத்திரிகையை வைத்து அழைப்பு விடுத்தார் மற்றொரு நண்பர். அந்த நண்பர் பத்திரிக்கையில் உறவினர்களின் பெயரையும் வாசித்துக் கொண்டே வந்தார். இவரை மட்டும் ‘உயர்திரு’ என்று குறிப்பிட்டும், மற்றொருவரை ‘தெய்வத்திரு’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பாக அவர் வருத்தப்பட்டு புகார் தெரிவிக்க… அவரிடம் இந்த ‘தெய்வத்திரு’விற்கான விளக்கத்தை சொன்ன பிறகு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த தெய்வ மச்சான் படமும் யதார்த்தமான ஜாலியான அனைத்து தரப்பு ரசிகர்களும் சிரித்து மகிழக்கூடிய ஜனரஞ்சகமான படமாக உருவாகி இருக்கிறது.

இப்படத்தின் நாயகனான விமல் படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களிலும் எளிமையாக பழகக்கூடியவர். அவர் ஒரு முறை என்னிடம் 20 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் ஒரு போக்குவரத்து நெரிசல் மிக்க நேரத்தில் காருக்குள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தது பார்த்தேன் என விவரித்தார்.

மற்றொரு முறை என்னுடைய பிறந்தநாளன்று திடீரென்று வருகை தந்து மாலை அணிவித்து, பரிவட்டம் சூட்டி, புகைப்படம் எடுத்து ஆசி கேட்டார். அந்த அளவுக்கு எளிமையான மனிதர் விமல்.

அவர் மட்டுமல்ல படத்தின் தயாரிப்பாளரும் இயல்பாக பழகக் கூடியவர். ஒட்டுமொத்த படக் குழுவும் படப்பிடிப்பு தளத்தில் மறக்க இயலாத அனுபவத்தை வழங்கினார்கள். ” என்றார்.

பாண்டியராஜன்

Machan relationship is great says Actor Pandiyarajan

இந்து தர்மத்தின் லெஜண்ட் ராமானுஜர்.; இளையராஜாவுடன இணைந்து கிருஷ்ணன் உருவாக்கிய காவியம்

இந்து தர்மத்தின் லெஜண்ட் ராமானுஜர்.; இளையராஜாவுடன இணைந்து கிருஷ்ணன் உருவாக்கிய காவியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hyagreeva cine Arts என்ற பட நிறுவனம் சார்பில் T. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து ராமானுஜராக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஸ்ரீ ராமானுஜர்’.

இவருடன் ராதாரவி, கோட்டா சீனிவாச ராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன், அனு கிருஷ்ணா, காயத்ரி, சோனியா சிங் வாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துளார்.

ஸ்ரீ ராமானுஜர்

பாடல்கள் – வாலி
ஒளிப்பதிவு – மாதவராஜ்
வசனம் – ரங்கமணி
எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ்
கலை இயக்கம் – மஹேந்திரன்
நடனம் – சிவசங்கர், அஜெய்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
இணை இயக்கம் – வனோத் கண்ணா
இயக்கம் – ரவி V. சந்தர்
திரைக்கதை எழுதி,தயாரித்துளார் T. கிருஷ்ணன்.

இந்த படம் பற்றி ராமானுஜராக வாழ்ந்த T. கிருஷ்ணன் கூறியதாவது….

“இது முழுக்க முழுக்க ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படம்.

ஸ்ரீ ராமானுஜர்

மகான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எங்கள் நிறுவனத்தின் மூலம் திரைப்படமாக எடுத்ததை பெருமையாக நினைக்கிறோம்.

ராமானுஜர் இந்து மதத்தில் புரட்சி செய்த மகான் மட்டுமல்ல இந்து தர்மத்தின் லெஜண்ட் ஆவார்.

சாதி வேறுபாடு அற்ற சமுதாயம் வேண்டும் என்றும், எல்லா மதத்தினருக்கும் நற்கதி என்ற உணர்வையும் மக்களிடையே உருவாக்கியவர்.

இந்த மாபெரும் மகானின் வாழ்க்கை வரலாற்றை இசைஞானியின் இசையோடு இணைத்து காவியமாக உருவாக்கியுள்ளோம்.

மேலும் கவிஞர் வாலியின் பாடல் வரிகள் சிறப்பாக இருக்கும். பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கும். வரலாற்று படம் என்பதால் மிகுந்த சிரமப்பட்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட இருக்கிறோம்” என்றார் கிருஷ்ணன்.

ஸ்ரீ ராமானுஜர்

Sri Ramanujar biopic directed and Produced by Actor Krishnan

கார்த்திக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி.; PS2 Anthem விழாவில் த்ரிஷா

கார்த்திக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி.; PS2 Anthem விழாவில் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வன் – 2 கீதம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (15.04.2023) நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகை த்ரிஷா பேசும்போது…

“பொன்னியின் செல்வன் 1 ஆம் பாகத்தில் எனது கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பும் ஆதரவும் காட்டியதற்கு நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இரண்டாம் பாகம் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். கார்த்திக்கும் எனக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி பற்றி அனைவரும் பேசினர்.

இந்தத் திரைப்படத்தில் அதிகமான வெறித்தனம் கொண்ட சண்டைக் காட்சிகள் இருக்கும். திரையரங்கில் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

த்ரிஷா

நடிகர் ஜெயராம் பேசும்போது…

“இந்த மாலையை ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி, விக்ரம், நடிகை த்ரிஷா போன்ற சிறந்த கலைஞர்கள் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸின் அனைத்து முக்கிய பிரமுகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.

கடந்த ஆண்டு 2022 பிஎஸ் 1 நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நான் ஷூட்டிங்கில் நடந்த சில சம்பவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு மணிரத்னம் சார் கேட்டார். அப்போதுதான் முழு வேடிக்கையான நாடகம் நடந்தது.

ஜெயராம்

இந்த படம் தொடங்கியதும், எம்.ஆர்.சி.நகரில் பயிற்சி பெறும் மற்ற நடிகர்கள் போல் குதிரை சவாரி கற்கும்படி மணி சார் என்னிடம் கேட்டார். தாய்லாந்தில் காட்சிகளை படமாக்க முடிவு செய்தபோது, குதிரைகள் புதியவை, அனைத்து நடிகர்களும் நிறைய சிரமங்களை அனுபவித்தனர்.

அப்போதுதான் பிரபு சாரிடம், சிறு வயது முதலே குதிரை சவாரி செய்து அதில் நிபுணராக இருக்கும் பிரபு சார் என்பதால் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அதில் நிறைய வேடிக்கையான அனுபவங்கள் இந்த படப்பிடிப்பின் போது நடந்தது.

இந்த படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படம் ஏப்ரல் 28 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. மேலும், படத்தைப் பார்த்து மகிழும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

சுமார் 6,000 மாணவர்கள் முன்னிலையில், ‘பிஎஸ்கீதம்’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார் . பெருத்த கைதட்டல்களுக்கிடையே ஒன்ஸ் மோர் கேட்டு மீண்டும் பாடல் பிளே ஆனது.

முடிவில், இப்பாடல் ஆசிரியரும் மெட்ராஸ் டாக்கீஸ் இணை தயாரிப்பாளருமான சிவா ஆனந்த் நன்றி தெரிவித்து பேசினார்.

த்ரிஷா

Super chemistry between me and Karthi says Trisha

எதிர்கால இந்தியாவாக மாறும் கூட்டத்தைப் பார்த்து பயப்படுகிறேன் – ஏஆர்.ரஹ்மான்

எதிர்கால இந்தியாவாக மாறும் கூட்டத்தைப் பார்த்து பயப்படுகிறேன் – ஏஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வன் – 2 கீதம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (15.04.2023) நடைபெற்றது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது…

“நான் இதுவரை கல்லூரிக்குச் சென்றதில்லை, எதிர்கால இந்தியாவாக இருக்கப்போகும் இங்குள்ள கூட்டத்தைப் பார்த்து பயப்படுகிறேன். ஆரம்பத்தில் இந்த கீதத்தை உருவாக்கியதன் பின்னணியில் எந்த உள்நோக்கமும் இல்லை. மணிரத்னம் சார் இந்த ஆல்பத்தை இயக்கும்படியாக ஒரு பாடலை விரும்பினார். அப்போதுதான் இந்த கீதம் உருவாகியது” என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி பேசும்போது,

” அலை கடலா.. பாடல் போன்ற பாடல் முதல் பாகத்தில் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்தப் பாடலையும், இந்த பிஎஸ் கீதத்தையும் எழுதியவர் சிவா ஆனந்த் சார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

ஐஸ்வர்யா லெக்ஷ்மி

I’m getting afraid of next generation says AR Rahman

விக்ரம் ஸ்டைல்.. ஜெயம் ரவி ப்ரெண்ட்.. ஜெயராம் இம்சை.. த்ரிஷா குன்னு – கார்த்தி கலகல

விக்ரம் ஸ்டைல்.. ஜெயம் ரவி ப்ரெண்ட்.. ஜெயராம் இம்சை.. த்ரிஷா குன்னு – கார்த்தி கலகல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வன் – 2 கீதம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (15.04.2023) நடைபெற்றது.

இந்த விழாவில் கார்த்தி பேசும்போது…

“நானும் ஜெயம் ரவியும் நெருங்கிய நண்பர்கள். அவருடன் நான் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வேன். விக்ரம் சார் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவார். அவருடைய ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இங்கே இருக்கும் பொன்னியின் செல்வன் குழுவில் உள்ளவர்கள் எனக்கு போன் செய்தால் என்ன ரிங் டோன் வைத்திருப்பீங்கன்னு கேட்டாங்க..

கார்த்தி

ஜெயம் ரவிக்கு என்னுடைய போன் ரிங்டோன், டண்டணக்கா.. பாடல், விக்ரம் சார்க்கு ஒ…போடு.. பாடல், திரிஷாக்கு காதலே காதலே தனிப்பெருந்துணையே… பாடல் மற்றும் உலக அழகியே.. பாடலும் பொருந்தும், ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு நிலா அது வானத்து மேலே.. பாடல், ஐஸ்வர்யாராய் அவர்களுக்கு அன்பே அன்பே என்னை கொல்லாதே பாடல்..,
இசைப்புயல் சார்க்கு பாம்பே படத்தின் பின்னணி இசை தான் இருக்கும். ( அந்த ராகத்தை பாடி காட்டினார் ). அந்த பின்னணி இசை கேட்டாலே ல்வ் பண்ணாம இருக்க முடியாது.

ஜெயராம் சாருக்கு… அவர் எப்போதுமே இம்சை… படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார் என்று கலாய்த்தார்.

மேலும், நான் குந்தவையை குன்னு (த்ரிஷா) என்று தான் மொபைலில் வைத்திருக்கிறேன். (கார்த்தி மேடையிலிருந்தே த்ரிஷாவுக்கு கால் செய்து, நான் படத்தில் நீங்கள் சொல்வதைத் தான் செய்வேன். ஆனால், இங்கு நான் சொல்வதை செய்ய வேண்டும் என்றார். த்ரிஷாவும் சொல்லுங்கள் என்றார். மேலே வாங்க என்று அழைத்தார்.

த்ரிஷாவும் மேடைக்கு வந்தார்). முதல் பகுதியில் எனக்கும் த்ரிஷாவுக்கும் ஒரு காதல் காட்சி இருக்கும். சூப்பராக இருக்கும். அதுபோலவே, இந்த பாகத்திலும் இருக்கிறது” என்றார்.

கார்த்தி

Jayam Ravi is my friend and i like Vikram style says Karthi

More Articles
Follows