தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகம் & புதுச்சேரியை போல மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
வருகிற மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது.
திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து அதகாரி போட்டியிடுகிறார்.
அதன்படி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு , மாலையில் ரியாபாரா என்ற பகுதியில் பிரசாரம் செய்ய வந்துள்ளார் மம்தா.
அதற்கு முன்பு அங்குள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு வந்த மம்தா தன்னை சிலர் (4-5 பேர்) தாக்கியதாக கூறினார்.
இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கி கொண்டு காரில் ஏற்றினர்.
கொல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
மம்தா மீது ஏற்பட்ட தாக்குதல் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.
மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை கண்டித்து, திரிணமுல் கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தே மம்தா வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் … “என் காரின் அருகே செல்லும்போது மர்ம நபர்களால் தள்ளப்பட்டேன்.
அதில், கை, கால் உள்ளிட்ட உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஓரிரு நாள்களில் மீண்டும் பணிக்கு திரும்புவேன்.
என் காயத்தால் பிரசாரம் பாதிப்படைய கூடாது. சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரசாரம் செய்வேன்.
அனைத்து தொண்டர்களும் அமைதி காக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது”.
இவ்வாறு வீடியோவில் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
West Bengal CM Mamata Banerjee ‘attacked’ in Nandigram