டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு விக்ரம் – சூர்யா இரங்கல்…

டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு விக்ரம் – சூர்யா இரங்கல்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் அஜித், சூர்யா, விக்ரம் முதல் ஷாருக்கான் வரை இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு குரல் கொடுத்த டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி.

தெலுங்கு டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தி உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று (ஜன. 27) காலமானார்.

தற்போது சீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு விக்ரம்,சூர்யா இருவரும் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.

விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆரம்பகால நண்பன், சக திறமையானவருமான ஸ்ரீனிவாச மூர்த்தியின் சீக்கிரம் மறைவு அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. அவரது காந்தக் குரல் தெலுங்கில் எனது கதாபாத்திரங்களுக்கு நம்பகத்தன்மையையும் அழகையும் அளித்தது. குறிப்பாக உங்கள் பயணத்தை என்னால் மறக்கவே முடியாது. அது எப்போதும் அன்புடன் நினைவில் இருக்கும். நன்றி எஸ்.எம்.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு சூர்யா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து, “இது மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பு! சீனிவாச மூர்த்தி காருவின் குரலும் உணர்ச்சிகளும் தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. இறந்து போன உங்களை மிஸ் செய்வேன் சார்! சீக்கிரம் சென்றுவிட்டார்.”டப்பிங் மட்டுமின்றி, சீனிவாச மூர்த்தி ஓரிரு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார், மேலும் அவர் தனது நேர்காணல்கள் மூலம் டப்பிங் கலைஞர்கள் எதிர்கொள்ளும் நிதி பிரச்சனைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பினார்.

Vikram mourns the demise of dubbing artist Srinivasa Murthy

மம்முட்டியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்…

மம்முட்டியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’.

இப்படத்தில் நடிகர்கள் அசோகன், ரம்யா பாண்டியன் மற்றும் விபின் அட்லி ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி 19 அன்று பெரிய திரையரங்குகளில் வெளியாகியது.

மேலும் இப்படம் முதல் நாளில் கேரளா பாக்ஸ் ஆபிஸில் ரூ 93 லட்சங்களை வசூலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தை பார்த்த பிறகு தனது ட்விட்டரில் பாராட்டி எழுதியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் போஸ்டரை ‘மஹான்’ இயக்குநர் பகிர்ந்தார், ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ மிகவும் அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கிறது.மம்முட்டி சார் மிகவும் அருமையாக இருந்தார். லிஜோவின் மேஜிக்கை திரையரங்குகளில் காணத் தவறாதீர்கள் என கூறிருந்தார்.

Karthik Subbaraj praises Mammootty’s ‘Nanpakal Nerathu Mayakkam’

BREAKING ரஜினி & அஜித் படங்களில் நடித்த ‘டிக் டாக்’ புகழ் டான்சர் ரமேஷ் தற்கொலை

BREAKING ரஜினி & அஜித் படங்களில் நடித்த ‘டிக் டாக்’ புகழ் டான்சர் ரமேஷ் தற்கொலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கோடிக்கணக்கான திறமையானவர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதா? என ஏங்கிய காலம் அன்று.

ஆனால் இன்றளவில் டிக் டாக்.. இன்ஸ்ட்டாகிராம், ரீல்ஸ்.. குறும்படம் யூடியூப்.. உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

மிருனாளிணி, முல்லை கோதண்டம், கோபி சுதாகர், புளூ சட்டை மாறன், இட்ஸ் பிரசாந்த், பிஜிலி ரமேஷ், ஜி பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா உள்ளிட்ட பல நபர்களை நாம் இந்த வரிசையில் சேர்க்கலாம்.

அதுபோல டிக் டாக் மற்றும் ரீல்ஸ் மூலம் புகழ் பெற்றவர் டான்ஸர் ரமேஷ். இவருக்கு சிறு வயது முதலே நடன திறமை இருந்தாலும் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. 40 வயதிலேயே இவருக்கு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றார். நடிகைகள் சினேகா சங்கீதா ஓவியா & நடன இயக்குனர் பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலரும் இவரது நடனங்களை கண்டு பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில் டான்சர் ரமேஷ் இன்று தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை கேபி பார்க் குடியிருப்பு பகுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் டான்சர் ரமேஷ்.

சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் ‘துணிவு’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்திலும் டான்சர் ரமேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது..

Tik Tok Reels fame Dancer Ramesh committed Suicide

‘வாரிசு’ தயாரிப்பாளர் மீம்ஸ் டயலாக்கை மேரேஜ் பேனராக அடித்த விஜய் ரசிகர்கள்

‘வாரிசு’ தயாரிப்பாளர் மீம்ஸ் டயலாக்கை மேரேஜ் பேனராக அடித்த விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ படம் அண்மையில் வெளியானது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையின் நடைபெற்ற போது இந்த படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ மேடையில் பேசினார்.

அவர் பேசும்போது…

“வாரிசு படத்தில் காமெடி வேணுமா.. காமெடி இருக்கு.. ஆக்ஷன் வேணுமா ஆக்ஷன் இருக்கு… பாட்டு வேணுமா பாட்டு இருக்கு.. டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு… என தெலுங்கு கலந்த தமிழில் பேசினார்.

இதை பலர் மீம்ஸ் செய்தும் கிண்டல் செய்தும் ட்ரோல் செய்தும் வந்தனர்.

ஒரு சில சமூக ஆர்வலர்கள் இதனை கடுமையாக கண்டித்தனர்.

கொஞ்சமே தமிழ் தெரிந்த ஒரு நபர் தமிழை கற்றுக்கொண்டு பேசி வருகிறார். அவரை கிண்டல் செய்யக்கூடாது என தெரிவித்தனர்.

இந்த நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் தில்ராஜ் பேசிய வசனத்தை பிளக்ஸ் பேனரில் டிசைன் செய்துள்ளனர்.

“இனி பொண்டாட்டி கிட்ட.. அடி வேணுமா அடி இருக்கு../குத்து வேணுமா குத்து இருக்கு../மொத்தத்துல உனக்கு ஆப்பு இருக்கு.. ஹாஃப்பி மேரேஜ் லைஃப் நண்பா..” என கிண்டலாக நண்பனை வாழ்த்தி பேனர் அடித்துள்ளனர்.

Dil raju memes dialogue in Vijay fans flex banner

தனுஷ் – செல்வராகவன் மோதல்.; அண்ணன் – தம்பி இப்படி செய்யலாமா.?

தனுஷ் – செல்வராகவன் மோதல்.; அண்ணன் – தம்பி இப்படி செய்யலாமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அல்லோரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வாத்தி’.

இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. தெலுங்கில் சார் என தலைப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாக இருந்த இந்த படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளால் தாமதமானது.

இதனால் 2023 பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதே நாளில் தனுஷின் அண்ணனும் இயக்குனரும் நடிகருமான செல்வராகனின் ‘பகாசூரன்’ படம் வெளியாக உள்ளதாக சற்று முன் அறிவிக்கப்பட்டது.

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பகாசூரன்’ படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நட்டி நடித்துள்ளார்.

தம்பி தனுஷின் ‘வாத்தி’ படம் ரிலீஸாகும் நாளில் அண்ணன் செல்வராகவன் அவரின் ‘பகாசூரன்’ படத்தை ரிலீஸ் செய்யலாமா.? எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

பகாசூரன்

Dhanush Vaathi and Selvaraghavans Bakasuran clash on same day

பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்ட 9 பேருக்கு பத்மபூஷன் விருது.; பத்ம விருதுகள் முழு விவரம்..

பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்ட 9 பேருக்கு பத்மபூஷன் விருது.; பத்ம விருதுகள் முழு விவரம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மத்திய அரசின் உயரிய விருதாக கருதப்படும் பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவதை நாம் அறிந்திருப்போம்.

அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதனடிப்படையில் பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு…

கலைத் துறையைச் சேர்ந்த ஜாகிர் உஷைன், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, அமெரிக்காவைச் சேர்ண்டஹ் அறிவியல் பொறியியல் துறை வல்லுநர் சீனிவாச வரதன் என மொத்தம் 6 பேருக்கு பத்மவிபூஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறை – மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்-க்கு பத்ம விபூஷன் விருது.

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மறைந்த முலாயம் சிங் யாதவ்வுக்கு பொது வாழ்க்கையில் சேவையாற்றியதற்காக பத்மவிபூஷன் விருது.

குஜராத்தைச் சேர்ந்த மறைந்த புகழ்பெற்ற கட்டிடக்கலை பொறியாளர் பால்கிருஷ்ணா தோஷிக்கு பத்ம விபூஷன் விருது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகிய இருவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்பட 9 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26.. குடியரசு தினத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ விருது மொத்தம் 91 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vani Jayaram to be honoured with Padma Bhushan

More Articles
Follows