தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2019ஆம் ஆண்டில் 87 வயதான சாருஹாசனை ஹீரோவாக்கி படம் இயக்கியவர் விஜய்ஸ்ரீ ஜி. அப்போதே சினிமா ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்.
இதன்பின்னர் பிரபல பிஆர்ஓ நிகில் முருகனை கதையின் நாயகனாக்கி பவுடர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் வித்தியாசமான போஸ்டர்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகிறது. ஜீன் இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து 14 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகிய மோகனை மீண்டும் நாயகனாக்கி ஹரா என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகியாக குஷ்பூ நடிக்கிறார்.
இவர்களுடன் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ஆதவன், ஜெயக்குமார், ரயில் ரவி, மனோபாலா, ஸ்வாதி, பிருந்தா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.
மனோ பிரஹத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, லியாண்டர் லீ மார்ட்டி இசையைமத்து வருகிறார். குணா எடிட்டிங் செய்து வருகிறார்.
கோவையை சேர்ந்த மோகன் என்பவருடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கி வருகிறார் விஜய்ஸ்ரீ. ஹரா படத்தை தீபாவளி சமயத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் விஜய்ஸ்ரீ.
இந்த படம் இந்திய அரசியல் மற்றும் உலக மருத்துவ அரசியலை உலுக்கும் படமாக உருவாகி வருகிறது.
அவரின் ட்விட்டர் பதிவில்…
தசைநார் சிதைவு நோய்க்கான ஊசி 16 கோடி ருபாய்! மருந்தின் விலையுடன் இறக்குமதி வரி, 6 கோடி சேர்த்து, 22 கோடி ரூபாய் !!செலவாகும் என அறிந்தேன்? #பவுடர் #ஹராவுக்கு பிறகு 4 தமிழக குழந்தைகளின் வலி வேதனையை பணத்திற்காக போராடியதை படமாக்காவுள்ளேன்.
என பதிவிட்டுள்ளார்.
இந்த படம் வெளியாகும்போது இது இந்திய மருத்துவம் மற்றும் அரசியல் உலகில் பேசும் பெருளாக இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.
கூடுதல் தகவல்….
கடந்த 2021 செப்டம்பரில்… முதுகெலும்பு தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தங்களின் 9 மாத குழந்தையை காப்பாற்ற தமிழக அரசு உதவ வேண்டுமென சேலத்தைச் சேர்ந்த பூபதி-ஜெயந்தி தம்பதி முதல்வருக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். குழந்தையை காப்பாற்ற 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை உடனடியாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
Vijay Sri g’s next is based on true story