தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்.
இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைக்கா தற்போது அறிவித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கூறும் போது…
ஜேசன் லண்டனில் திரைக்கதை எழுதுவதில் பிஏ (ஹானர்ஸ்) முடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பில் டிப்ளோமா பெற்றார்.
அவர் ஸ்கிரிப்டை சொன்ன போது பார்வையாளர்களாக எங்களுக்கு திருப்தி.
ஜேசன் சஞ்சய் விஜய்யுடன் இணைந்து பணியாற்றும் அற்புதமான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த படத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இருப்பார்கள். மேலும், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இந்தப் படத்தில் பணிபுரிய நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார்.
இயக்குநர் ஜேசன் சஞ்சய் விஜய் கூறுகையில்…
“லைக்கா போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது.
என்னைப் போன்ற இளம் திறமையாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு.
எனது ஸ்கிரிப்டை விரும்பி, அதை உருவாக்க எனக்கு முழு ஆக்கப்பூர்வமான சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். இந்த வாய்ப்புக்காக சுபாஸ்கரன் சாருக்கு நன்றி கூறுகிறேன். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் மிகப்பெரிய பொறுப்பையும் தருகிறது. உறுதுணையாக இருந்த தமிழ் குமரனுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி” என்றார்.
Vijay son Jason Sanjay entry in Cinema in Lyca Production