சூரி ஹீரோவாகும் படத்தில் விஜய்சேதுபதிக்கு வெயிட்டான ரோல்.!

சூரி ஹீரோவாகும் படத்தில் விஜய்சேதுபதிக்கு வெயிட்டான ரோல்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soori vijay sethupathi‘அசுரன்’ படத்தை அடுத்து சூரி ஹீரோவாக நடித்து வரும் படத்தை இயக்கி தயாரித்தும் வருகிறார் வெற்றிமாறன்.

இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிகிறார்.

ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையின் தழுவல் இப்படம் என கூறப்படுகிறது.

இப்பட சூட்டிங் சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது.

இப்பட முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

கடும் குளிரில் படப்பிடிப்பு நடைபெறுவதால் பாரதிராஜா விலகிவிட்டார். பின்பு கிஷோர் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் அத்தகவல் உறுதியாகவில்லை.

இந்நிலையில், பாரதிராஜா நடிக்கவிருந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய்சேதுபதி கமிட்டான உடன் அவருக்கான காட்சிகளை படமாக்கி வருகிறார் வெற்றிமாறன்.

Vijay Sethupathi plays important role in Vetrimaan’s next

சிலரின் பேராசைக்கு நாங்கள் பலிகடா.? மக்களுடன் ஹீரோக்கள் படம் பார்ப்பார்களா..? விஜய் & சிம்புக்கு டாக்டர் கடிதம்

சிலரின் பேராசைக்கு நாங்கள் பலிகடா.? மக்களுடன் ஹீரோக்கள் படம் பார்ப்பார்களா..? விஜய் & சிம்புக்கு டாக்டர் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Simbuசென்னை: தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி அல்ல, கொலை என்று நடிகர்கள் விஜய், சிம்புவுக்கு இளம் மருத்துவர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் வைரலாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவலுக்கு தீர்வு காணப்படாத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது தொடர்பாக டாக்டர் ஒருவர் நடிகர்கள் விஜய், சிம்புக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவரின் பெயர் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதி உள்ள கடிதம் சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது.

அதன் விவரம் வருமாறு: டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசுக்கு. நான் சோர்வாக இருக்கிறேன்.

நாங்கள் அனைவரும் சோர்வாகவே உள்ளோம். என்னை போன்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சோர்வாக இருக்கின்றனர்.

சுகாதாரத் துறை ஊழியர்கள் சோர்வாக உள்ளனர். போலீஸ் அதிகாரிகள் சோர்வாக இருக்கிறார்கள். தூய்மை பணியாளர்கள் சோர்வாக உள்ளனர்.

கொரோனா தொற்றுக் காலத்தில் நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாகவும் தெரிய வில்லை.

எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சு விட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.

தொற்றுநோய் இன்னமும் முடியவில்லை. இந்த நோயால் இன்னும் மக்கள் இறக்கிறார்கள். தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது என்பது தற்கொலை முயற்சி இல்லை கொலை. கொள்கையை வகுப்பவர்களோ ஹீரோக்களோ மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை.

பணத்திற்காக வாழ்க்கையை வர்த்தகம் செய்தல் போன்று இது ஒரு அப்பட்டமான பண்டமாற்று முறை. உயிருக்கு பணத்தை வியாபாரம் செய்கிறார்கள். நாம் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்த தொற்று நோய் காலத்தில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வர முயற்சிக்கலாமே?

மெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே, அது இன்னும் முழுதாக அணையவில்லை. நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன். ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் என்று அரவிந்த் அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்…

A doctor pens an open letter to Actors Vijay and Simbu

doctor open letter to vijay and simbu

‘தளபதி 65’ படத்தில் விஜய்யுடன் ஜோடி போடும் தெலுங்கு நடிகை

‘தளபதி 65’ படத்தில் விஜய்யுடன் ஜோடி போடும் தெலுங்கு நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 65விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’ படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

‘கோலமாவு கோகிலா’ என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து, ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் நெல்சன்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அண்மையில் சூப்பர்ஹிட்டான ‘புட்ட பொம்மா’ பாடலில் அல்லு அர்ஜுனுடன் நடனம் ஆடியவரே பூஜா.

மேலும் பிரபாஸுடன் ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

Famous telugu actress is part of Thalapathy 65

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு சம்பளம்..; கமலின் யோசனைக்கு ஜெயலலிதா கண்டனம்

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு சம்பளம்..; கமலின் யோசனைக்கு ஜெயலலிதா கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்.

பிரச்சாரத்தின் போது… “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதச் சம்பளம் வழங்கப்படும்” என்றார்.

இது நிறைய இல்லத்தரசிகளின் பாராட்டைப் பெற்றது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

வீட்டு வேலையையும் ஒரு பணியாக அங்கீகரித்து அவற்றை செய்யும் பெண்களுக்கு அரசாங்கமே சம்பளம் தருவது நல்ல யோசனை என பாராட்டி இருந்தார்.

ஆனால் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கமல்ஹாசனின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கங்கனா கூறுகையில்….

எங்கள் குடும்பத்தாருக்கு பணிவிடை செய்ய விலை..? நாங்கள் தாயைப் போல கவனித்து கொள்வதற்கு ஊதியம் தர வேண்டாம்.

எங்கள் மாளிகையில் இல்லத்து அரசிகளாக இருப்பதற்கு கூலி தேவையில்லை. இதை வியாபாரமாக பார்க்க வேண்டாம்

உங்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். அதற்கு பதிலாக எங்கள் எதிர்பார்ப்பு எல்லாம் அன்பும் மரியாதை மட்டும்தான்” என கூறியுள்ளார்.

விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kangana Thalaivi

Thalaivi heroine opposes Kamal Haasan’s idea to make household work a paid job

மறைந்த நடிகை சித்ரா கணவர் ரூ 1 கோடி மோசடி வழக்கில் மீண்டும் கைது

மறைந்த நடிகை சித்ரா கணவர் ரூ 1 கோடி மோசடி வழக்கில் மீண்டும் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vj chithra husband photosடிவி நடிகை விஜே. சித்ரா கடந்தாண்டு டிசம்பர் 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவருக்கு தொழிலதிபர் ஹேமந்துடன் பதிவு திருமணம் நடந்த நிலையில் திருமணமாகி இரண்டே மாதத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதில் சித்ராவின் தற்கொலைக்கு கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டு. பின்னர் அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி இரண்டு பேரிடம் ரூ.1 கோடி மோசடி செய்துள்ளார் ஹேமந்த்.

இந்த வழக்கிலும் தற்போது ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ சீட்டு மோசடி குறித்து 2015இல் அளிக்கப்பட்ட புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

VJ Chithra husband arrested in one more case

தியேட்டர்களில் 100% சீட்… சினிமா வைரஸ் பரவல்…; நடிகைகள் குஷ்பூ-கஸ்தூரி மோதல்

தியேட்டர்களில் 100% சீட்… சினிமா வைரஸ் பரவல்…; நடிகைகள் குஷ்பூ-கஸ்தூரி மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kasthuri khushbooகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர் 10 முதல் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது.

50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது.

எனவே இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்தும் தியேட்டர்கள் இயங்கி வந்தன.

இதனால் சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீசாகின.

இந்த நிலையில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என விஜய், சிம்பு உள்ளிட்ட திரையுலகினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்

இவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இதனால் தமிழ் திரைத்துறையினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த அனுமதிக்கு எதிராக சிலர் விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.

நடிகை கஸ்தூரி… ” தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதிக்கப்படுவது ஆபத்தான ஒன்று. ஒரு சினிமாக்காரி ஆக சிந்திக்கவில்லை.

‘கொரோனா வைரஸை சைனா வைரஸ் என்று அழைக்கிறோம். இந்த அனுமதியால் சினிமா வைரஸ் என்ற பெயரை நாம் பெற வேண்டுமா? இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரையும் திரையுலகையும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு….

“தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து மாற்றுக் கருத்து உடையவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

நீங்கள் தியேட்டருக்கு சென்றால் கொரோனா பரவும் என்று கவலைப்பட்டால் தியேட்டருக்கு செல்ல வேண்டாம். உங்கள் பயம் புரிகிறது.. உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை’ என கூறியுள்ளார்.

இதனையடுத்து நடிகை கஸ்தூரி… ‘நான் மக்களை பற்றி கவலைப்படுகிறேன். அவர்கள் உடல் நலன் முக்கியம் என நினைக்கிறேன்.

தியேட்டருக்கு செல்பவர்களால், வீட்டில் இருப்பவர்கள் கூட பாதிக்கப்படுவார்கள். நட்சத்திர ஓட்டல்களிலேயே பாதிக்கப்படும்போது தியேட்டர்களால் எப்படி பாதுக்காக்க முடியும்? என கேட்டுள்ளார்.

khushboo and kasthuri fight in social media

More Articles
Follows