தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்தாண்டு 2020ல் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அமைப்பை தேர்தல் கமிஷனில் பதிவு செய்தார்.
தலைவராக இயக்குனர் சந்திரசேகர், பொருளாளர் ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
ஆனால் தனது பெயர் மற்றும் புகழை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தி வருவதாக எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா உள்ளிட்ட 11 பேர் மீது விஜய் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் தன் பெயரில் கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நேற்று இந்த வழக்கில் நடந்த விசாரணையில் கடந்த வருடம் தொடங்கப்பட்ட அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக விஜய் தந்தை சந்திசேகர் தரப்பினர் கோர்ட்டில் தெரிவித்தனர்.
இத்தரப்பு பிப்ரவரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்த இயக்கத்தை கலைத்துவிட்டோம் என்று எஸ்.ஏ சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் இந்த முறை ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது.
9 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். ஏற்கனவே விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் வேட்புமனுவும் தாக்கல் செய்தும் விட்டனர்.
இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம் மட்டுமே கலைக்கப்பட்டது எனவும் எனது தலைமையில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் தரப்பில் கூறப்பட்ட இந்த விளக்கத்தால் இப்போது ரசிகர்கள் மத்தியில் குழப்பம் உருவாகியுள்ளது.
அப்படியென்றால் இதுநாள் வரை எங்களுக்கே தெரியாமல் எஸ்ஏசி தலைமையில் ஒரு மக்கள் இயக்கம் & விஜய் தலைமையில் மற்றொரு மக்கள் இயக்கம் என 2 இயங்கி வந்ததா? என தல-யில் அடித்துக் கொள்கின்றனர் தளபதி ரசிகர்கள்.
Vijay Makkal Iyakkam Dissolved: Actor’s Father Informs Chennai Court