தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை வனிதா விஜயகுமார்… இந்த பேர கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல என்ற ரஜினி வசனத்திற்கு ஏற்ப சோஷியல் மீடியாக்களை அதிர வைத்து வருபவர் இவர்.
இவர் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஏதாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்திவிடுவார்.
சில மாதங்களுக்கு முன் 3வது திருமணம் செய்து பின்னர் சில நாட்களிலேயே பீட்டர் பாலை வெறுப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.
மற்றொரு புறம் பவர் ஸ்டார் சீனிவாசன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் வனிதா. இவையில்லாமல் சில படங்களிலும் கமிட்டாகி உள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
அதில்… ‘விஜய்யுடன் நான் நடித்தபோது அவரிடம் எப்படி பேசி பழகினேனோ அப்படிதான் இன்றைக்கும் பேசுவேன். நான் திமிராக ஏதோ மரியாதை குறைவாக பேசுவதாக பலருக்கு தோன்றலாம். விஜய்யை அவர் இவர் என திடீரென மரியாதையாக மாற்ற முடியாது.” என பேசியுள்ளார் வனிதா.
‘சந்திரலேகா’ என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக வனிதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vanitha Vijayakumar talks about Thalapathy Vijay