தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
நாம் நினைக்க முடியாத அளவில் சகாசங்களை தன் படங்களில் செய்து காட்டியவர் இவர்.
தற்போது இவரைப் போல தமிழிலும் ஒரு நடிகர் அறிமுகமாகிறார். அவர் பெயர் அரசு.
தொண்டியான் என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.
யுகே. முரளி இசையமைத்துள்ள இப்படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பாடகரும் பாடலை பாடியுள்ளார். அவர் பெயர் நாராயணன் மோகன்.
இவர்களின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் ஜிப்ஸி ராஜ்குமார் நாராயணன் மோகனை அறிமுகப்படுத்திப் பேசினார். அவர் பேசும் போது…
நான் இயக்கியுள்ள ‘அய்யனார்வீதி’ படத்தில் யு.கே.முரளி இசையில் ஒருபாடல் பாடியிருக்கிறார்.
அவரது இசையார்வம் சாதாரணமானதல்ல. சாதனைகளுக்கு வயது ஒரு தடையில்லை என்று கலாம் சொன்னதற்கு உதாரணமாக இருந்து வருகிறார்” என்றார்.
‘தொண்டியான்’ படத்தின் இயக்குநரும், நாயகனுமான அரசு பேசும் போது…
“நான் ‘தொண்டியான்’படத்தில் வெற்றுடம்புடன் 350 டியூப் லைட்டுகளை உடைத்திருக்கிறேன். வெற்றுடம்புடன் சரவெடிகளை உடம்பில் வெடிக்க வைத்திருக்கிறேன்.
நெருப்பு உடம்பில் எரிவது போல் நடித்திருக்கிறேன். ஜாக்கிசானைப் போல் சாகசங்கள் செய்ய காத்திருக்கிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் யு.கே. முரளி பேசும்போது…
“நாராயணன் மோகன் நல்ல திறமைசாலி. இசையில் அவருக்கு பெரிய ஆர்வம், ஈடுபாடு உண்டு. எங்கள் படங்களில் மட்டுமல்ல இசையமைப்பாளர்கள் அம்பிரிஷ், ரெஹானா இசையிலும் பாடியிருக்கிறார். அவர் சிறந்த பாடகராக வர வாழ்த்துகிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் ரெஹானா பேசும்போது…
“அண்மையில் நாராயணன் மோகன் நடத்திய கச்சேரியை நான் பார்த்து வியந்தேன். அதில் நானும் பாடினேன்.
அவரது மனைவி இறைவனின் வரம். சிறந்த பாடகராக வர வாழ்த்துகள்” என்றார்.
திருமதி நாராயணன் மோகன் பேசும்போது…
“எனக்கு ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் எல்லா பாடல்களும் பிடிக்கும். அவரது சகோதரி இங்கு வந்து இருப்பதை நாங்கள் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணர்கிறேன்.” என்றார்.
பாடகர் நாராயணன் மோகன் பேசும்போது…
“நாங்கள் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கிறோம். 1980ல் போய் 35 ஆண்டுகளாக அங்கே வசிக்கிறோம்.
நான் அங்கே ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறேன். அதில் எனக்குக் கீழ் 250 பேர் வேலை பார்க்கிறார்கள். பகலில் அலுவலகப் பணி முடிந்து மாலை வீடு வருவேன்.
மாலை 7 மணி முதல் இரவு10 மணி வரை பாடிக் கொண்டே இருப்பேன். இசைப் பயிற்சி செய்துகொண்டே இருப்பேன். சிலநேரம் இரவு முழுதும் பாடி காலை சூரியனின் வெயில் முகத்தில் அடித்தால்தான் நிறுத்துவேன். அவ்வளவு ஆர்வம் எனக்கு.
‘தொண்டியான்’ படத்தில் நான் பாடிய அம்மா பாட்டு பிரபலமாகும் என்று நம்புகிறேன்” என்றார்.
‘தொண்டியான்’ படத்தின் தயாரிப்பாளர் திருமதி சக்தியம்மா பேசும் போது…
“கலைக்கு மொழி இல்லை. சாதி மத வேறுபாடுமில்லாமல் ‘தொண்டியான்’ படம் உருவாகியுள்ளது” என்றார்.