தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1980கள் இறுதியில் தொடங்கி இந்தாண்டு 2021 வரையிலும் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக தன் நகைச்சுவையாலும் சிந்திக்க வைக்க காமெடியாலும் ரசிகர்களை கவர்ந்தவர் விவேக்.
இறப்பதற்கு முன் முதன்முறையாக கமலுடன் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்து நடித்து இருந்தார். அந்த படம் இன்னும் முடிவடையவில்லை.
மேலும் லெஜண்ட் சரவணா ஸ்டோர் அருள் உடனும் ஒரு படத்திலும் நடித்துள்ளார். அந்த படமும் இன்னும் ரிலீசாகவில்லை.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் கருத்துகளை தீவிரமாக பின்பற்றி வந்தவர் இவர்.
ஒருமுறை அப்துல் கலாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஒரு கோடி மரம் நடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து லட்சக்கணக்கான செடிகளை தன் வாழ்நாளில் நட்டுவந்தார் விவேக்.
கொரோனா தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடுவதில் அச்சம் இருந்த வகையில் சென்னை அரசு மருத்துவமனையில் ஏப்ரல் 15-ம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
ஆனால், அதற்கு அடுத்த நாளே மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு அடுத்த நாள் உயிரிழந்தார்.
இது தடுப்பூசி அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியது.
எனவே விவேக்கின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன.
அந்த சமயத்தில் ‘தடுப்பூசி போட்டதால் விவேக் இறந்துவிட்டார் என்பது தவறானது. விவேக்கின் மரணத்துக்கும் தடுப்பூசிக்கு எந்த தொடர்பும் இல்லை” என விளக்கம் அளித்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,
ஆனாலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார்.
இந்த நிலையில், நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
The national human rights comission to investigate actor Vivek’s death