தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த தனது ரோல் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் அவர்கள் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்தார்.
அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அந்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பல தகவல்கள் வெளிவருகின்றன.
அதாவது நடிகர் விஜய் 8 ஆண்டுகளுக்கு முன்பு வரி செலுத்தியுள்ளார். அதற்கு தான் தற்போது வரி விலக்கு கேட்கிறார்.
அது தொடர்பான வரி கட்டிய ரசீதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காருக்கான ஆயுட்கால வரியை கட்டிய பிறகே வரியை குறைக்க விஜய் கேட்டுள்ளார் என்கின்றனர்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.
எனவே ரோல்ஸ் ராய்ஸ் காரில் நடிகர் விஜய் வருவது போல காட்சியை வைக்க வேண்டும் என நெல்சனுக்கு விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Thalapathy Vijay fans support on Rolls Royce issue