தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்த ‘ஆடுகளம்’ படத்தில் நாயகியாக நடித்தவர் டாப்சி.
இதனையடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2, வைராஜா வை ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
அதன் பின்னர் தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் தனக்கு வந்த காதல் கடிதங்களிலேயே ஒரு கடிதம் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாக டாப்சி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
“பல ரசிகர்களிடமிருந்து காதல் கடிதங்கள் வருகின்றன.
ஒவ்வொரு கடிதத்திலும் ஒவ்வொருவரின் ஆழமான அன்பை காண்கிறேன்.
அதில் ஒரு ரசிகர் “நான் மது அருந்த மாட்டேன். மாமிசத்தை தொட மாட்டேன்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் மிகவும் தூய்மையானவனாக வாழ்கிறேன்.
உன்மேல் நான் வைத்திருக்கும் அன்பை நிரூபிக்க தயாராக இருக்கிறேன்.
உண்மை கண்டறியும் சோதனைக்கு கூட தயாராக இருக்கிறேன்.
என் மூளையை பரிசோதிக்க மறந்து விடாதே அன்பே. என் மனது முழுவதும் நீதான் இருக்கிறாய்” என்று எழுதியிருந்தார்.
அந்த கடிதம் என்னை கவர்ந்த ஒன்று” என டாப்சி தெரிவித்துள்ளார்.