தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாண்டோம் ஃபிலிம்ஸ் மற்றும் குவான் ஆகிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வருமான வரித்துறைக்கு புகாா்கள் வந்துள்ளன.
அப்புகாா்களின் அடிப்படையில் இரு நிறுவனங்களுடன் தொடர்புடைய நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்தவர் டாப்சி.
தற்போது பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
அதேபோல் பிரபல பாலிவுட் இயக்குனர்களான அனுராக் கஷ்யப் மற்றும் விகாஷ் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறதாம்.
மும்பை மற்றும் புனே நகர்களில் உள்ள 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
இயக்குநர் அனுராஜ் காஷ்யப், இயக்குநர் விக்ரமாதித்யா, தயாரிப்பாளர் மது மண்டேனா, விகாஷ் பால் ஆகிய நால்வரும் இணைந்து 2011-ல் பாண்டோம் ஃபிலிம்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினர்.
2015ம் ஆண்டு மார்ச் மாதம் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் அந்த நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்கியது.
இந்த நிறுவனம் தயாரித்த மன்மர்சியான் படத்தில் டாப்ஸி நடித்திருந்தார். மேலும் தற்போது அனுராக் கஷ்யப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
பல படங்களை தயாரித்த நிலையில் விகாஸ் பெஹல் மீது முன்னாள் ஃபேன்டம் ஊழியை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இதனையடுத்து கடந்த 2018-ல் இந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டதாம்.
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் உள்பட பல பிரச்சனைகளுக்கு அனுராக் கஷ்யப்பும், டாப்ஸியும் குரல் கொடுத்துள்ளனர்.
இவர்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தான் இந்த ஐடி ரெய்டு நடந்துள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
IT department searches properties of celebrities Anurag Kashyap and Taapsee Pannu