தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரையுலகினர் நடத்திய மவுன அறவழிப் போராட்டம் நடத்தினர்.
இதில் ரஜினி, கமல், சிவகுமார், இயக்குனர் எஸ்பி முத்துராமன், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
இது மௌன போராட்டம் என்பதால் யாரும் பேசவில்லை. நடிகர் சங்கத் தலைவர் நாசர் இந்த நிகழ்ச்சி தொடங்கும்போது பேசினார்.
பின்னர் இறுதியாக இயக்குனர் ஆர்கே. செல்வமணி நடிகர் சங்க கோரிக்கைகள் குறித்து அப்போது பேசினார்.
மக்களுக்கான அரசு என்றால் மக்களின் உணர்வுகளை மதியுங்கள் என திரையுலகினர் முழக்கமிட்டனர்.
எவரும் எதிர்பாரா நேரத்தில் நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசினார்.
அவர் பேசும்போது…
நாம் என்றுமே தமிழர்களின் பக்கம்; தமிழ் உணர்வுகளின் பக்கம் இயற்கை அன்னை கொடுத்த வளத்தை அரசியலாக்கி கெடுக்க வேண்டாம்.
எந்த அரசாக இருந்தாலும், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம்.
காவிரிக்காக குரல் கொடுக்க தைரியம் இருந்தால் வாருங்கள்..! இல்லையெனில் ஓடி, ஒளிந்து கொள்ளுங்கள்” என்று பேசினார் சத்யராஜ்.
Tamilan wont fear for Central Force says Sathyaraj