தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிய அணி பாரதிராஜா தலைமையில் அண்மையில் உருவானது.
தற்போது பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் இணைந்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில்…
சின்ன பட்ஜெட் முதல் 70 கோடி வரை ஷேர் வரும் படங்களைத் தயாரித்து வெளியிட்டிருப்பதாகவும், இனிவரும் காலத்தில் இதுபோல் திரைப்படங்கள் வருமா? என்பது இயலாத காரியம்.
எனவே இதைக் கருத்தில்கொண்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செலுத்தி வந்த கியூப் அல்லது யுஎப்ஓ-க்கான கட்டணத்தை இனி வரும் காலங்களில் செலுத்த முடியாது.
திரைப்படத்தின் இடைவேளைகளில்
தியேட்டர்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் அந்த நாளில் திரையிடப்படும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும்.
ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வருவாயில் ஒரு பகுதியைத் தர வேண்டும்.
இத்துடன் சில கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.
நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களை திடீரென நிறுத்துவதும், தரமான படங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதும் வேதனையளிப்பதாகக் கூறியுள்ளனர்.
நிறைய திரையரங்குகள் சிலரால் குத்தகைக்கு எடுத்து நடத்தப்படுவதால் தயாரிப்பாளர்களுக்கான வியாபார சுதந்திரம் பறிபோவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Tamil Film Active Producers teams conditions to release films