அறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா, சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடியில் உருவாகும் “டிரிப்”

அறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா, சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடியில் உருவாகும் “டிரிப்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trip Praveenயோகி பாபு , கருணாகரன் இணைந்து நடிக்க உள்ள சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் படமான டிரிப் படம் பற்றிய தகவல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இப்படத்தில் இளமையும் உற்சாகமும் இணைந்த இளம் நாயகி சுனைனா கதைநாயகனாக அறிமுகமாகும் பிரவீனுக்கு நாயகியாக நடிக்க உள்ளார். நாயகன் பிரவீன் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து தன் திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். தற்போது கதை நாயகனாக இப்படத்தில் மூலம் அறிமுகமாகிறார்.

இயக்குநர் டென்னிஸ் சுனைனா பற்றி கூறியது…

சுனைனா வின் கதாப்பாத்திரம் மிகவும் சவால் வாய்ந்த ஒன்று. இப்படத்தில் அவருக்கு உணர்ச்சிமிகுந்த பல சவலான தருணங்கள் உள்ளது. இந்தக் கதாப்பாத்திரத்தில் முன்னணி ஹிரோயின்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரை அணுகினோம். ஆனால் யாரும் ஒரு அறிமுக ஹிரோவுடன் ஜோடி சேர விரும்பவில்லை. ஆனால் சுனைனா கதையை கேட்டவுடன் கதையின் மையத்தை உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படம் அவரின் சினிமா வாழ்வில் முக்கியமானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு வலுவாக இருக்கிறது என்றார்.

இப்படம் பற்றி நடிகை சுனைனா கூறியது…
இப்படத்தில் முதலில் என்னைக் கவர்ந்தது படத்தின் திரைக்கதை, அதை இயக்குநர் டென்னிஸ் சொல்லிய விதம் படத்திற்குள் பயணம் செயத்து போலவே இருந்தது. அவர் சொல்லிய அந்தப் பயணத்தில் இப்படத்தில் என் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் மற்ற கதாப்பத்திரங்களை பற்றியும் தெரிந்து கொண்டேன். கதையின் பயணம் மிகவும் அற்புதமானதாக இருந்தது.

அறிமுக நாயகனுடன் நடிப்பது பற்றி அவர் கூறியது…
அனுபவம் வாய்ந்த நடிகர் புதிய நடிகர் என்பதெல்லாம் சினிமாவில் முக்கியமில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அவர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் தான் முக்கியம். படத்திற்காக நடந்த ரிகர்சலில் பிரவீன் தன் தனித்தன்மை வாய்ந்த சிறந்த நடிப்பை தந்தார். அவர் இப்படத்திற்கு மிகச் சிறந்த தேர்வாக தன்னை நிரூபிப்பார் என்றார்.

தயாரிப்பாளர் A விஸ்வநாதன் Sai Films Studios சார்பில் தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 11 பூஜையுடன் துவங்கியது.
இப்பூஜையில் தயாரிப்பாளர் A விஸ்வநாதன், நாயகன் நடிகர், தயாரிப்பாளர் பிரவீன், லக்‌ஷ்மி பிரியா, அதுல்யா , கருணாகரன், இயக்குநர் சாம் ஆண்டன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் சக்தி, இயக்குநர் தாஸ் ராமசாமி, இயக்குநர் சத்யமூர்த்தி, விஸ்வாசம் மற்றும் இரும்புத்திரை வசனகர்த்தா சவரிமுத்து, இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், ஒளிப்பதிவாளர் உதயசங்கர், எடிட்டர் தீபக், ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி, உடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், நடன அமைப்பாளர் சக்தி ராஜு, இசையமைப்பாளர் சித்து குமார், இணை தயாரிப்பாளர் கண்ணன் மற்றும் தயாரிப்பு மேற்பார்வையாளர் தேனி தமிழ் உட்பட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 16ல் இருந்து தலக்கோணம் காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது. தளக்கோணத்தின் தொடர்ச்சியாக 38 நாட்களும் மற்றும் கொடைக்கானலில் 2 நாட்கள் என
ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தை சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.

இப்படத்தின் கதை ஒரு பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத குழப்பமான சம்பவங்களை காமெடி கலந்து சொல்வதாக இருக்கும். யோகிபாபுவும், கருணாகரனும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக ஒரு பயணம் மேற்கொள்ள, இடையில் குறுக்கிடும் 5 பசங்களும் 4 பெண்களும் இணைந்த ஒரு டூரிஸ்ட் செல்லும் கும்பல் என இந்த இருவருக்கும் ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்வங்களை மையமாக கொண்டதே இப்படத்தின் கதை. தமிழுக்கு புதிதான ஒரு படமாக சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி கலந்து அனைவரையும் கவரும் வகையில் இப்படம் இருக்கும் என்றார் இயக்குநர்.

தெலுங்கிலும் பட்டைய கிளப்பும் ‘ஜிகர்தண்டா’ பட ரீமேக்

தெலுங்கிலும் பட்டைய கிளப்பும் ‘ஜிகர்தண்டா’ பட ரீமேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jigarthanda telugu remakeகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேன்ன் உள்ளிட்டோ நடிப்பில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’.

2014ல் வெளியான இப்படம் பாபி சிம்ஹாவுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை பெற்று தந்துள்ளது.

தற்போது 5 ஆண்டுகளுக்னு பிறகு ‘வால்மீகி’ என்ற பெயரில் தெலுங்கில்ரீமேக் செய்து கடந்த வாரம் வெளியிட்டுள்னர்.

அங்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

தமிழில் சித்தார்த் நடித்த கேரக்டரில் தமிழ் நடிகர் அதர்வா நடிக்க, பாபி சிம்ஹா கேரக்டரில் வருண் தேஜ் நடித்துள்ளார்.

பார்வையற்ற இளைஞருக்கு சினிமாவில் வாய்ப்பளிக்கும் இமான்

பார்வையற்ற இளைஞருக்கு சினிமாவில் வாய்ப்பளிக்கும் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music director Immanகிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் பார்வையற்ற சிறுவன்.

இவர் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் உள்ள கண்ணான கண்ணே… என்ற பாடலை பாடியுள்ளார்.

அதை ஒருவர் ரசித்து கேட்டு, அவரை பாட வைத்து அந்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை அந்த பாடலுக்கு இசையமைத்த இமான் இணையத்தில் பார்த்துள்ளார்.

உடனே அவரின் விவரம் வேண்டும் என அந்த நபரிடம் தெரிவித்துள்ளார்.

சில மணி நேரங்களிலேயே அந்த சிறுவன் குறித்த விபரம் கிடைத்து விட்டதாம்.

இதனையடுத்து விரைவிலேயே அவரை திரைப்படத்தில் பாட வைக்க உள்ளதாகவும் இமான் உறுதியளித்துள்ளார்.

பிகில் விழா ஒளிபரப்பு; சன் டிவி மேல் கடுப்பான விஜய் ரசிகர்கள்

பிகில் விழா ஒளிபரப்பு; சன் டிவி மேல் கடுப்பான விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayஇரு வேடங்களில் விஜய் நடித்துள்ள பிகில் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இப்பட வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள சன் டிவி பெற்றுள்ளதால் மற்ற மீடியாக்களுக்கு அனுமதியில்லை.

இந்த நிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நேற்று சன் டிவியில் ஒளிப்பரப்பினர்.

ஆனால் இதில் பெரும்பாலான நிகழ்ச்சிகளை அவர்கள் எடிட் செய்துள்ளனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் முழு நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லையே என்ற கடுப்பில் இருந்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியும் தன்னுடைய பேச்சையும் முழுவதுமாக காட்டவில்லை என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஜினியின் தர்பாரை லண்டனுக்கு ஷிப்ட் செய்த முருகதாஸ்

ரஜினியின் தர்பாரை லண்டனுக்கு ஷிப்ட் செய்த முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Darbar shooting in London updatesசில ஆண்டுகளாக 2 வருடத்திற்கு 1 படங்களை கொடுத்து வந்த ரஜினிகாந்த் தற்போது அதிரடியாக ஒரே வருடத்தில் 2 படங்களை கொடுத்து வருகிறார்.

எனவே நாளுக்கு நாள் அவரது படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

காலா, 2.0, பேட்ட படங்களை தொடர்ந்து தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் அடுத்த ஆண்டு 2020 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

இப்பட சூட்டிங் இந்த செப்டம்பர் மாதம் 30ல் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு லண்டனில் துவங்கவுள்ளனர்.

இதற்காக லண்டன் பறக்க உள்ளது தர்பார் படக்குழு. அங்கு சில பாடல் காட்சிகளை படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Rajinis Darbar shooting in London updates

‘பிகில்’ பட போஸ்டரை கிழித்து கறிகடை வியாபாரிகள் போராட்டம்

‘பிகில்’ பட போஸ்டரை கிழித்து கறிகடை வியாபாரிகள் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Meat sellers protest against Vijays Bigil movieவிஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘பிகில்’.

அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அடுத்த மாதம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் ஆளும் அதிமுக அரசை கடுமையாக சாடியிருந்தார் விஜய்.

இதற்கு பல அமைச்சர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் கறிக்கடை வியாபாரிகள் இப்படத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

அதாவது பிகில் பட போஸ்டரில் இறைச்சி வெட்டும் முட்டி (கட்டை) மீது செருப்புக் கால் வைத்து விஜய் அமர்ந்திருப்பார். இதனை கண்டித்து தான் புகார் கொடுத்துள்ளனர்.

அவர்களின் மனுவில்…

“இந்தியாவில் உள்ள அனைத்து மீன் வியாபாரிகள், இதர அனைத்து இறைச்சி வியாபாரிகளும் அதிகாலை தொட்டு வணங்கி தொழில் செய்யும் முட்டி, கத்தி மீது செருப்புக்கால் வைத்து போஸ்டர் வெளியிட்டு மொத்த வியாபாரிகளை செறுப்பால் அடித்த உணர்வை ஏற்படுத்து விட்டீர்கள் அந்தக் காட்சியோடு படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு வியாபாரிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும்.

இதைச் சுட்டிக்காட்டி ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும், இயக்குநர் அட்லீக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு பதில் நோட்டீசாக ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் செருப்பு காலால் முட்டி, கத்தியை மிதித்து போஸ்டர் வெளியிட்ட காட்சியை நியாயப்படுத்தி பதில் கோரப்பட்டது.

ஆகவே இந்தியாவில் உள்ள மொத்த இறைச்சி வியாபாரிகளையும் கொச்சைப்படுத்தும் பிகில் திரைப்படத்தில் அந்தக் காட்சி சம்பந்தப்பட்ட பகுதியை நீக்கிவிட்டு படத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாறு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் துணை மிதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை கொடுக்க வந்த கறிக்கடை உரிமையாளர்கள் பிகில் பட போஸ்டரை கிழித்து போராட்டம் செய்தனர்.

இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு நிலவியது.

Meat sellers protest against Vijays Bigil movie

More Articles
Follows