நடிகர்கள் வெங்கட் பிரபு-பிரேம்ஜியின் தாயார் காலமானார்..; சிம்பு உருக்கமான இரங்கல்

நடிகர்கள் வெங்கட் பிரபு-பிரேம்ஜியின் தாயார் காலமானார்..; சிம்பு உருக்கமான இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

venkat prabhu motherஇசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்.

இவர் இயக்குனர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர்.

பல தொலைக்காட்சி இசைத் தொடர்களிலும் தோன்றி இஇன்றைய தலைமுறையினரிடையே பிரபலமானவர்.

கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு, நடிகர் இயக்குனர் என திரையுலகில் பிலபலம்.

இவரது இளையமகன் பிரேம் ஜி அமரனும், இசையமைப்பாளர் நடிகர் என பிரபலமானவர்.

வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் இவரது தம்பி பிரேம்ஜி நிச்சயமாக இருப்பார்.

இந்நிலையில், கங்கை அமரனின் மனைவி மணிமேகலை (வயது 69) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மே 9 இரவில் உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்..

இதோ அந்த அறிக்கை….

STR’s condolence message to VP mother
IMG-20210510-WA0047

நடிகரும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தயாரிப்பாளருமான அந்தோணி சேவியர் மரணம்.; சுசீந்திரன் இரங்கல்

நடிகரும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தயாரிப்பாளருமான அந்தோணி சேவியர் மரணம்.; சுசீந்திரன் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான் மகான் அல்ல, சிறுத்தை, மாஸ், பாண்டிய நாடு, ஜீவா, பாயும்புலி, நோட்டா, அயோக்யா, சக்ரா, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணி புரிந்தவர் அந்தோணி சேவியர். இவருக்கு வயது 51.

சுசீந்திரன் இயக்கத்தில் “நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தை தயாரித்தார்.

பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துகுடிக்கு சென்ற இடத்தில் ஹார்ட் அட்டாக் ஆகி நேற்று மரணமடைந்தார்.

அவரது உறவினர்கள் பெரும்பாலும் மதுரை புதூரில் வசித்து வருவதால் அவரது உடலை அங்கு எடுத்து செல்கிறார்கள். இன்று மதியம் நல்லடக்கம் நடைபெறுகிறது.

Lourdhu nagar 7th street, Alagar Kovil main road, K.Pudur, Tamil Nadu 625007.

இவருக்கு, மனைவி ஜோஸ்பின் ஜெயா, கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மகள் அபி, 18 வயதில் ஜெய்சன் என்ற மகனும் இருக்கிறார்கள் .

இவரது மறைவுக்கு சுசீந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Nenjil Thunivirundhaal producer Anthony Xavier passed away

IMG-20210510-WA0046

புதுச்சேரி மக்கள் தமிழகத்தை ஏக்கத்தோடு பார்க்கும் நிலை.; ரங்கசாமிக்கு காரை திமுக எம்எல்ஏ நாஜிம் கோரிக்கை

புதுச்சேரி மக்கள் தமிழகத்தை ஏக்கத்தோடு பார்க்கும் நிலை.; ரங்கசாமிக்கு காரை திமுக எம்எல்ஏ நாஜிம் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karaikal mla nazeemபுதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

ஆக்சிஜன், மருந்துகள் இருந்தாலும் கூட புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.4 ஆயிரம் நிவாரண உதவியை அறிவித்திருக்கிறார்.

பொதுவாக நாட்டிலேயே புதுச்சேரி மாநிலத்தில்தான அதிக அளவில் மக்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் நிலை இருந்தது.

ஆனால், தற்போது புதுச்சேரி மக்கள் தமிழகத்தை ஏக்கத்தோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வந்து முதல்வர் பதவியேற்ற பின்னரும் கூட, புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி நடந்துகொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

துணைநிலை ஆளுநர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனினும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சில கடமைகள் உள்ளன. தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண உதவி வழங்க ஆளுநர் மத்திய அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பாக மக்கள் நலன் கருதி தமிழகத்தில் 2 நாட்கள் எல்லாக் கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டது போல புதுச்சேரியிலும் செய்திருக்க வேண்டும்.

தமிழக முதல்வர் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தை ஒட்டியிருக்கிற பகுதி என்பதால் இங்கும் அதுபோலவே முடிவுகள் எடுக்கப்பட்டு சலுகைகள் அளித்தால் நன்றாக இருக்கும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி முதல்வர் விரவில் குணமடைந்து வர இறைவனை வேண்டுகிறேன்.

காரைக்காலைச் சேர்ந்தவர்கள் கரோனா தொற்றால் புதுச்சேரி ஜிப்மர் அல்லது அரசு மருத்துமனையில் உயிரிழந்துவிட்டால் அவர்களின் உடலைக் காரைக்காலுக்குக் கொண்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. மாவட்ட ஆட்சியர் இதற்கென ஒரு தனி மையத்தை உருவாக்கி சிரமங்களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் செய்தியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டும்.

முன்பு செய்யப்பட்டது போல, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளோரை உரிய கண்காணிப்பு செய்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும்.

கரோனா தொற்றாளர்கள் வெளியில் நடமாடும் நிலை உள்ளது. அதைத் தடுக்க அதிக ஊதியம் கொடுத்து அதிகமான அளவில் களப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தைப் போல புதுச்சேரியில் அரசு சார்பில் மலிவு விலை உணவகம் திறக்கவும், தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை எடுத்துக் கொள்வோரின் செலவை அரசே ஏற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் யார் என்ற போட்டிகளையெல்லாம் விட்டுவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து மக்களைக் காக்கும் களப்பணியில் இறங்க வேண்டும்”.

இவ்வாறு காரைக்கால் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ. நாஜிம் தெரிவித்தார்.

Karaikkal MLA Nazim requests CM Rangaswamy

ஊரடங்கில் சூட்டிங் கூடாது.. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை..; என்ன செய்வார் ‘அண்ணாத்த’ ரஜினி.?

ஊரடங்கில் சூட்டிங் கூடாது.. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை..; என்ன செய்வார் ‘அண்ணாத்த’ ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை (அதிகாலை 4 மணி வரை) முழு ஊரடங்கு என அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்.

எனவே இதனை முன்னிட்டு இன்றும், நாளையும் (மே 8 மற்றும் மே 9) அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் ராமசாமி என்ற முரளி தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில்… கொரோனா ஊரடங்கு உத்தரவை திரையுலகினர் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வெளியூர்களில் சூட்டிங் நடத்துபவர்கள் உடனடியாக பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

‘அண்ணாத்த’ சூட்டிங்குக்காக ஹைதராபாத்தில் தங்கி உள்ளார் ரஜினிகாந்த்.

தயாரிப்பாளர் சங்க உத்தரவை மதித்து ரஜினி உடனே திரும்புவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கெனவே பலமுறை கொரோவினால் தடைப்பட்டது அண்ணாத்த பட சூட்டிங்.

இம்முறை அண்ணாத்த பட சூட்டிங்கை முடித்துவிட வேண்டும் என சிவா & சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

New trouble for Rajini’s Annaatthe

IMG-20210508-WA0063

மே 8-9 தேதிகளில் 24 மணி நேர பேருந்து வசதி.; ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் கூடாது என அமைச்சர் அறிவிப்பு

மே 8-9 தேதிகளில் 24 மணி நேர பேருந்து வசதி.; ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் கூடாது என அமைச்சர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dmk raja kannappanமே 10 ஆம் தேதி முதல் 24 வரை கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மே 10 முதல் திங்கள் முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று மற்றும் நாளைய (மே 8 & 9) தேதிகளில் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த அனுமதியைச் சாதகமாக வைத்துக்கொண்டு தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனியார் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Bus facility arranged for those going to native says minister

ஊரடங்கில் அம்மா உணவகம் அனுமதி.. டாஸ்மாக் மூடல்.; பாராட்டி விட்டு கோரிக்கையும் வைத்த ஓபிஎஸ்

ஊரடங்கில் அம்மா உணவகம் அனுமதி.. டாஸ்மாக் மூடல்.; பாராட்டி விட்டு கோரிக்கையும் வைத்த ஓபிஎஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

OPSகொரோனா மற்றும் ஊரடங்கு குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது…

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய் தோற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும்.

எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கபட்டிருப்பதையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன்.

மே 10ஆம் தேதி முதல் தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாலும் இன்றும் , நாளையும் கடைகள் திறந்திருக்கும் என்பதாலும், பொதுமக்கள் அவசரம் கொள்ளாமல் கூட்டம் கூடுதலை தவிர்த்து பொறுமையாக சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.

அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல ஏதுவாக வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் 24 மணி நேரம் இயங்குவதே அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும் மினி கிளினிக்குகளில் எண்ணிக்கையும் அதில் தற்காலிக மருத்துவர்கள் நியமனத்தையும் அதிகரித்து 24 மணிநேரமும் இயங்க செய்தால் பெரிய அரசு மருத்துவமனைகளில் கூட்டம் குறையும் . நோயாளிகளின் சிரமமும் களையப்படும்.

கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து கோவிட் 19 தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அது சேவையை கௌரவிக்கும் வண்ணம் அரசு ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை வழங்கி அவர்கள் பணியை ஊக்குவிக்க வேண்டும்.

நோய்த் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அரசு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என பொது மக்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்”

என்று ஓ.பன்னீர் செல்வம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

OPS on new lock down 2021 implemented by stalin in tn

More Articles
Follows