தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2020 ஆம் ஆண்டில் ‘டிக் டாக்’ பிரபலம் ரவுடி பேபி சூர்யா தேவி மற்றும் நடிகை வனிதா இடையே மோதல் ஏற்பட்டது.
அப்பொழுது இது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த பிரச்சனையில் நடிகை வனிதாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருந்தார் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன்.
இதனால் பிரச்சினை நாஞ்சில் விஜயன் பக்கம் திரும்பியது.
எனவே சூர்யா தேவி மற்றும் நாஞ்சில் விஜயனுக்கு பிரச்சனை ஏற்பட்டது.
இதனையடுத்து நாஞ்சில் விஜயன் மீது போலீஸில் புகார் அளித்தார் சூர்யா தேவி.
அவர் மீது ஐந்து பிரிவுகள் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கிற்காக நாஞ்சில் விஜயன் ஆஜராகவில்லை என கூறப்படுகின்றது.
விஜயனை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.