பிரமாண்ட நாயகன் படம் பார்த்தால் திருப்பதி சென்ற உணர்வு வரும்.. சிவகுமார் பாராட்டு

பிரமாண்ட நாயகன் படம் பார்த்தால் திருப்பதி சென்ற உணர்வு வரும்.. சிவகுமார் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Brammanda nayaganராமா என்ற வேங்கடசபெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டு இப்படம் ஜனரஞ்சகமாக உருவாகியுள்ளது . இன்றைய நவீனமான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது .

இப்படத்தை இயக்கியுள்ளவர் சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் ‘பாகுபலி’ புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திர ராவ்.

இது பக்தி ரசமும் சமூகப் பின்னணியும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது.

பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாகவைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்கவைத்துள்ளனர்.

மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.

பாகுபலிக்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார்.

இது பல ஆன்மீக புராணம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது.

பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு என்ன? திருமலை உருவான விதம் எப்படி ? ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம் என்ன ? வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம் என்ன? பாலாஜி என்றுபெயர் வரக்காரணம் என்ன ? திருமலையில் முதலில் யாரை வணங்குவது ? எனப் பல கேள்விகளுக்கான விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக்காட்சிகளாக அமைத்து விளக்கியுள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார் “அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான பக்திப் படம் . சுவாரஸ்யமாக பிரமாண்டமாக எடுக்கப் பட்டுள்ளது. பக்தி மணம் கமழ உருவாகியுள்ளது. படம் பார்த்து முடித்ததும் திருப்பதி தேவஸ்தானம் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. ” என்று பாராட்டியுள்ளார்.

திரையுலகில் பெரிய அனுபவசாலியான அவரது பாராட்டைப் பெருமையாகக் கருதுகிறது படக் குழு .

பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது . விறுவிறுப்பான பிரமாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

வசனம் பாடல்களை D. S. பாலகன் எழுதியுள்ளார். J. K. பாரவி கதை எழுத

கோபால்ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாகுபலிக்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் அடைந்து இருப்பது படத்தின் பெருமைகளில் ஒன்று.

தமிழகத் திரைகளில் இந்தப் ‘ பிரமாண்ட நாயகன் ‘ விஸ்வரூபம் எடுக்கும் விதத்தில் வெளியாகவுள்ளது.

ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்டார் பாக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிடுகிறது.

வருசத்துக்கு ரெண்டு படம் பண்ணுங்க … சிம்புவிடம் தனுஷ் கோரிக்கை

வருசத்துக்கு ரெண்டு படம் பண்ணுங்க … சிம்புவிடம் தனுஷ் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and dhanushவிடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படத்தின் இசையமைப்பாளர் சிம்புவின் வேண்டுகோளை ஏற்று தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

அப்போது தனுஷ் பேசும்போது…

இங்கே இவ்வளவு ரசிகர்கள் உங்களுக்காக வந்துள்ளார்கள். அவர்கள் உங்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் அவர்களுக்காக நீங்கள் வருசத்திற்கு ரெண்டு படம் கொடுக்க வேண்டும். அவர்கள் சார்பாக நான் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.” என்று பேசினார்.

யுவன் ஜாதகத்தில் பெண் இருந்தால் கட்டிக்கிறேன்.. : சிம்பு

யுவன் ஜாதகத்தில் பெண் இருந்தால் கட்டிக்கிறேன்.. : சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and yuvanசிம்பு இசையமைப்பில் சந்தானம் ஹீரோவாக நடித்து சக்க போடு போடு ராஜா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் சிம்புவின் எதிரி (அவர் சொன்னதுதான்) தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு இசையை வெளியிட்டார்.

அப்போது சிம்பு பேசியதாவது….

பெரும்பாலும் என் கேரக்டருக்கு அவ்வளவு எளிதில் யாரும் செட் ஆக மாட்டார்கள். சில நேரம் நானே செட் ஆக மாட்டேன்.

ஆனால் என் படத்தில் யுவன் இசையமைக்கும்போது நான் எந்த விதமான கரெக்சன்ஸ் சொன்னாலும் அதை செய்து தருவார்.

நான் செய்யும் பல தொந்தரவுகளையும் அவர் பொறுத்துக் கொள்வார். அதனால் நானே அடிக்கடி அவரிடம் சொல்வேன்.

உங்க ஜாதகத்துல இருக்கிற மாதிரி ஒரு பெண் இருந்தா சொல்லுங்க. நான் கட்டிக்கிறேன் என்பேன்.” என்று கலகலப்பாக பேசினார் சிம்பு.

அருவி கேரக்டருக்கு 5௦௦ பெண்களிடம் ஆடிசன்; தயாரிப்பாளர் காசில் சைட் அடித்த டைரக்டர்.?

அருவி கேரக்டருக்கு 5௦௦ பெண்களிடம் ஆடிசன்; தயாரிப்பாளர் காசில் சைட் அடித்த டைரக்டர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aruvi movie posterஅருவி படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

எனவே படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு , S.R.பிரபு, இயக்குநர் அருண் பிரபு, நாயகி அதீதி பாலன் (வக்கீல்), இசையமைப்பாளர் வேதாந்த் , ஒளிப்பதிவாளர் ஷெல்லி, படத்தொகுப்பாளர் ரேமன்ட், கலை இயக்குநர் சிட்டிபாபு, நடிகர்கள் ஸ்வேதா சேகர், அஞ்சலி வரதன், மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியது…

இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான். உலகளவில் நடைபெற கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்கும் போது சில படங்களின் பெயர்களை மட்டும் தான் என்னால் கூற முடிந்தது.

ஏன் ?? என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது.

அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இயக்குநர் சக்திசரவணன் தான் நான் பிரியாணி படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இப்படத்தின் கதையை கேட்குமாறு என்னிடம் கூறினார்.

இரவு 9மணிக்கு மேல் தான் அருவி படத்தின் கதையை இயக்குநர் அருண் பிரபு என்னிடம் கூறினார். கதை சொன்ன விதமே புதுமையாக இருந்தது. கதை சொல்லும் போது அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறி, இசையோடு அவர் கதையை கூறினார்.

நாங்கள் படத்தின் கதையை பெரிதாக நம்பினோம். மக்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது.

அருவியை பொறுத்தவரை படத்தை நாங்கள் இந்த பட்ஜெட்டில் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்கள் தயாரிப்பு குழுவும், இயக்குநர் குழுவும் கடுமையாக உழைத்து படத்தை தரமான படமாக உருவாக்கியுள்ளனர். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர்.

இயக்குநர் ஷங்கர் அவருடைய படங்களை எடுக்க எந்த அளவுக்கு மெனக்கெடுவாரோ அதே அளவுக்கு அருணும் அவருடைய குழுவினரும் அருவிக்காக கடுமையாக உழைத்தனர்.

அருவி கதாபாத்திரத்தில் முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர் புதுமுகத்துக்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.

அருவி கதாபாத்திரத்துக்காக 5௦௦ பெண்களை இயக்குநர் Audition செய்தார். நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் நிஜமாகவே கதாநாயகிக்காக Audition செய்கிறீர்களா ?? அல்லது 5௦௦ பெண்களை சந்திக்க வேண்டும் என்று Audition செய்கிறீர்களா ?? என்று கேட்டேன்.

சென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். சென்சார் குழு இந்த படத்தை எப்படி எடுத்துகொள்வார்கள் என்ற பயம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அவர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தது. நல்ல படம் என்றார்கள்.

சில படம் எளிதாக சென்சார் ஆகிவிடும் என்று நினைப்போம் ஆனால் எதிர்பாராத ஒன்று நடைபெறும். அந்த வகையில் இது புதுமையாக இருந்தது என்றார் தயாரிப்பாளர் S.R.பிரபு.

இயக்குநர் அருண் பிரபு பேசியது :-

அருவி மனிதத்தை பற்றி பேசும் படமாக இருக்கும். நான் உதவி இயக்குநராக பணியாற்றிய என்னுடைய குருக்களான இயக்குநர் பாலு மகேந்திரா, கே.எஸ். ரவிகுமார் ஆகியோருக்கு நன்றி என்றார்.

500 girls were Auditioned for Aruvi character says Producer SR Prabhu

Aruvi Press meet Photos

இந்த உலகத்துக்கும் எனக்கும் இதான் பிரச்சினை… சிம்பு ஓபன் டாக்

இந்த உலகத்துக்கும் எனக்கும் இதான் பிரச்சினை… சிம்பு ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor simbuசிம்பு இசையமைப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

அப்போது சிம்பு நிறைய விஷயங்கள் பற்றி பேசினார்.

பொதுவாக மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை நான் இதை கடைப் பிடிப்பதில்லை.

தாய் நம்மை பெற்றெடுத்தவள்தான். ஆனால் என்னை பொறுத்தவரை இறைவன் தான் முதல் இடம்.

அவரில்லாமல் இந்த உலகத்தில் எதுவுமில்லை. அதன்பின் இந்த உலகத்தை கற்றுக் கொடுக்கும் குருதான் 2ஆம் இடம்.

நாம் சின்ன பிள்ளையாக இருக்கும்போது தன் தோளில் உட்கார வைத்து நான் பார்க்காத உலகத்தை நீ பார் என்று சொல்லும் தந்தை 3வது இடத்தில் இருக்கிறார்.

அதன்பின் 4வது இடத்தில்தான் தாய். (அம்மா என்னை மன்னிச்சிடுங்க)

ஏனா இந்த உலகம். இறைவனை இறுதியாக சொல்கிறது. நான் அந்த இடத்தில் என் தாய்யை வைத்துள்ளேன்.

இதனால்தான் எனக்கும் இந்த உலகத்துக்கும் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சை பிரச்சினை வைக்கிறது.” என்று பேசினார்.

சிம்புவை கண்டிக்கும் தமிழ் வாத்தியார் தனுஷ்; சந்தானம் கிண்டல்

சிம்புவை கண்டிக்கும் தமிழ் வாத்தியார் தனுஷ்; சந்தானம் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam simbu dhanushதமிழ் சினிமாவில் சக போட்டியாளர்களாக கருதப்படும் சிம்புவும் தனுஷ் நேற்று சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டனர்.

அப்போது படத்தில் பணியாற்றிய சிம்பு படக்குழுவினரின் ஒவ்வொருவரின் பெயராக கூறிக் கொண்டு நன்றி தெரிவித்து வந்தார்.

மேலும் தன் இசை ஞானத்துக்கு உதவிய இளையராஜா, ஏஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், பிரேம்ஜி இசை கலைஞர்களின் அனைவரின் பெயரையும் தன் மொபைல் போனில் குறித்து வைத்துக் கொண்டு பேசினார்.

அப்போது அருகில் இருந்த தனுஷ் அவரது பேச்சை ரசித்துக் கொண்டே இருந்தார்.

அதன்பின்னர் பேச வந்த சந்தானம்… என்ன தனுஷ் சார்?, ஒரு தமிழ் வாத்தியார் போல அவரையே கவனிச்சிட்டு இருந்தீங்க. எல்லாம் கரெட்க்டா சொன்னாரா? என்று கிண்டலடித்தார்.

ஏப்பா? கண்ணாடி போட்டு வந்தா? நான் தமிழ் வாத்தியரா? என கேள்வி கேட்டு சிரிக்க வைத்தார் தனுஷ்.

More Articles
Follows