தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிரபாவதி. அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் நடிகை பானுப்ரியா மீது பாலியல் புகார் ஒன்றை கொடுத்துள்ளர்.
அதாவது… “நடிகை பானுப்பிரியா தனது 14 வயது மகள் சந்தியாவை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்றார்.
கடந்த 18 மாதமாக சம்ளமும் கொடுக்கவில்லை. சந்தியாவை பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்” என்று புகார் கொடுதிருந்தார்.
இந்த புகாரின் பேரில் சாமர்லகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால் நடிகை பானுப்பிரியா இதை மறுத்துள்ளார்.
என் வீட்டில் வேலை செய்த சிறுமி, வீட்டில் உள்ள விலை உயர்ந்த ஆபரங்கள் மற்றும் பொருள்களை சந்தியா திருடிவிட்டார். அது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளோம் என சிறுமியின் தாயிடம் கூறினோம்.
ஆனால் புகார் அளிக்க வேண்டாம் என அவர் எங்கள் காலை பிடித்து அழுததால் திருட்டு தொடர்பாக புகார் அளிக்கவில்லை’ என நடிகை பானுப்ரியா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த அந்த சிறுமி சந்தியாவை குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் மீட்டு குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தினர்.
அங்கு சிறுமியிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.
பின்னர் அந்த சிறுமி தேனாம்பேட்டையில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சந்தியாவிடம் விசாரணை நடத்த ஆந்திர மாநில போலீசார் சென்னை வரவுள்ளனர்.