தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் சீருடை அணிந்து காவல்துறைக்கு எதிராக நிலானி கருத்து தெரிவித்தார்.
சின்னத்திரை நடிகையான நிலானி படப்பிடிப்பின் போது வெளியிட்ட அந்த வீடியோவில்,
“நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. 13 பேரை கொன்றுள்ளனர்.
அமைதியான வழியில் போராடுகிறோம். நான் சூட்டிங்கில் இருக்கிறேன். இல்லை என்றால் தூத்துக்குடி சென்று போராட்டத்தில் பங்கேற்றிருப்பேன்.
நான் இந்தக் காவல்துறை உடையை அணிந்திருப்பதற்கு வெட்கப்படுறேன். உடம்பு கூசுது.
இந்தப் போராட்டம் இதோடு முடியப்போவதில்லை. இனிமேல்தான் ஆரம்பம். தமிழர்கள் தீவிரவாதிகள் போல் சுட்டுக்கொன்றுள்ளனர்.
அதுதான் அவர்களின் திட்டம். இலங்கை போல் தமிழகத்திலும் தமிழர்களை கொல்ல திட்டுமிட்டுவிட்டனர்.
அரசு வேலைகளை புறக்கணியுங்கள். விவசாயிகளையும், காவலர்களையும் அரசு மோத வைத்துள்ளது. இதற்கு அரசு பதிலளிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
இதுதொடர்பாக நிலானி மீது வடபழனி காவல்நிலையத்தில் காவல் உடை அணிந்து மோசடி செய்தல்(419), அவதூறு பரப்புதல்(500), கலவரத்தை உண்டாக்கும் வகையில் பேசுதல்(153) உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் இன்று நடிகை நிலானியை கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிலானியை வடபழனி போலீசார் கைது செய்தனர்.